Saturday, 22 November 2014

 58/60 - நீர்ப் பை கல் - UB 65         
 ●அமைவிடம் : காலின் 5 -வது விரலும் , 5- வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் பின்புறம் 
 உள்ளது. (இரு நிறங்களும் சேரும் இடம்.)
 ■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை , கல்லீரல் - தனயன்  தொட்டு ஆற்றல் அளிக்கும் இடம்.
  ---ஆற்றல் வராவிடில்,  (1) நீர்க் கடுப்பு  (2) சிறுநீர் அலர்ஜி .
 ♥ நடைமுறை விளக்கம் : சிறுநீரகம் (5) - கல்லீரல் (1) ஆற்றல் அளித்தல் கீழ் வருமாறு.
 (1) நல்ல உறக்கத்தால் நிகழும். (11PM  - 3 AM ) - கல்லீரல் எழுச்சி நேரம் - முறையான வாழ்வு. (2) கால் பந்து போன்ற கால் ஊன்றும் விளையாட்டுகளால் நிகழும். ( 3 PM -7PM )
 மாலை விளையாட்டு - திட்டமிட்ட வாழ்வு.
 (3) K 1 ஊன்றிய எண்ணத்தோடு கூடிய நடைப் பயிற்சி , மாடிப்படி இறங்குதல் - கிடைத்த 
 நேரம் எல்லாம் பயிற்சி .
 (4) சம்மணம் இட்டு அமர்தல் (UB 65) - பழக்கம் ! அவ்வளவுதான்.
   நான்கும் தவற விட்டால், நீர் கடுப்பு, சிறுநீர் அலர்ஜி .
  ஒன்று நன்றாயினும் தொல்லை இல்லை . 1, 3, 4 எளிது.
 ⊙ புதுமை விளக்கம் : பரிமாறும் ஆற்றல் பெற பயிற்சி மற்றும் பழக்கம்  பெற வேண்டிய 
  தாய் - மகன் உறவுப் புள்ளி (யின், யாங் ) இணைகள் - வண்ணங்கள் - ஐம்பூத உறுப்பு 
 வளம்  பெறுதல் கீழ்வருமாறு.
 (1) பச்சைப் புள்ளி  - கல் வளம்  - K 1/UB 65
 (2) சிவப்புப் புள்ளி  - தீ வளம்  - Liv 2/GB 41
 (3) மஞ்சள் புள்ளி  - மண் வளம் - P 7/Tw 10, H 7/S I 8
 (4) வெள்ளைப் புள்ளி - நுரை வளம் - Sp 5/ St 45
 (5) நீலப் புள்ளி - நீர் வளம்  - Lu 5/Li 2
    இந்தப் புள்ளிகளின் நடைமுறை  விளக்கம் ஏற்கனவே கூறப் பட்டுள்ளன .
 பாடல் : சுண்டு விரல்  ஐந்தாம் 
                      விரல் எலும்பு    சந்திப்பில் 
              உண்டாம் நீர்ப்    பை கல் 
                  ஒட்டுமே     நீர்க் கடுப்பு....,............296.
 58A /60  - நீர்ப் பை மனம்  - UB 62     
 ● அமைவிடம் : புறக் கணுக்கால் மூட்டு எலும்பிற்கு நேர் கீழே உள்ளது.
 ■ பயன் விளக்கம் : நீர்ப்பை தன் ஓட்டத்தில் 'கல் ' தொட்டு எழும்போது தீயின் பெரி கார்டியம் 
 (மனம் ) - தமிழ் 'ஐ 'ப்  புள்ளி  தொடுகிறது.- நீர்ப்பை மனம். - இவ்விடம்  தேங்கினால் , -----
  --(1) தலை கிறுகிறுப்பு (2) தூக்கமின்மை (3) கவலை (4) மன அழுத்தம் (5) மன நோய் 
 (6) வலிப்பு  (7) கால், கணுக்கால், முதுகு  வலிகள்.
 ♥ நடைமுறை விளக்கம் : உள் கணுக்கால் மூட்டசைவில்  Sp 5 இயங்கும். நுரை வளம் 
 கிடைக்கும் . அதோடு சேர்ந்து புறக் கணுக்கால் மூட்டும்  அசையும்.மனம் சார்ந்த தொல்லை 
 இல்லை .  நுரையீரல் நோய்களின்போது , மனக் கவலை , துக்கம்  சேர்ந்து வருவது  இதன் 
 காரணமே.
 ⊙ புதுமை விளக்கம் : மிதி வண்டி  மிதி. காற்றும் கிடைக்கும்; மனமும் லேசாகும்.
 பாடல் : பின் உள்      கணுக்காலின் 
                           மூட்டினது    கீழ்ப் புறம் 
               உள்ளது     நீர்ப்பை மனம் 
                           ஒழிக்கும்   மன அழுத்தம்...........300. 
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன் ..

No comments:

Post a Comment