Wednesday, 19 November 2014

 52/60 -நீர்த்தீ  - K 2      
 ● அமைவிடம் : முன்புறக் கணுக்கால் மூட்டிற்கும் , குதிகால் எலும்பு மூட்டிற்கும்  கீழே அமைந்து  உள்ளது.
    ( பாதத்தின் உட்புற பக்கவாட்டு வளைவின் மத்தியில் உள்ளது )
 ■ பயன் விளக்கம் : தாய் கல்லீரல் தரும் ஆற்றல் , தனையன் தீ ஈரலுக்கு ப்  போதா நிலையில் 
 காப்பாற்ற ஓடோடி வரும் தாத்தா நீரின் வருகை K 2 - நீர்த்தீ . - வரா விடில் ,   
      --(1) பாத வலி  (2) மூச்சுத் திணறல்  (3) தோல் அரிப்பு 
 K 2 - ஒரு சமன் புள்ளி. நீருக்கு (K ) தீவிரம் குறையும். தீக்கு (H , P )  பற்றாக் குறை தீரும்.
 ♥ நடைமுறை விளக்கம் : மணலில் வெறுங்காலில் நடத்தல் , சடுகுடு விளையாட்டு ....
 இப்புள்ளி  தொடும். தேவையானால் அக்கு பிரசர் , அக்கு ஊசி.
 ⊙ புதுமை விளக்கம் : இரத்த ஓட்டத் தூண்டுதல் உதவி. 
 பாடல் : வளைவாகும்      பாதநடு  
                        உச்சியிலே           நீர்த் தீ  
                களை எடுக்கும்      பாத வலி 
                        களைந்திடும்      தோல் அரிப்பு ........268.
 53/60 - நீர் மண்  -K 3   
 ● அமைவிடம் : உட்பக்க கணுக்கால் மூட்டு எலும்புக்கும் , குதிகால் பாத நரம்புக்கும் 
 இடையில்  அமைந்துள்ளது . 
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் (Sp ) தன் செரிமானம் முடித்து , நுரையீரல் தனக்கு அளிப்பதில் 
 சிக்கல் வரும்போது  Sp 9 - மண் நீர்  ஆக மாறலாம். -- மூட்டு வலி வரும்.
        சில நேரங்களில்  சிலருக்கு  இது  நிகழாமல் , நீரே (K ) மண்ணிலிருந்து  ஆற்றலைத் 
 தொடர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கும். ஒரு சமநிலைத் தானே நிகழும். அப்போது ,
    -- குதிகால் வலி ஏற்படும்  ----- கணுக்கால் ( K 3 -யால் ) வலி  உண்டாகும்  ----
   K -யின்  ஒன்று தாண்டி ஈர்ப்பினால்  பிறப்புறுப்பில் அலர்ஜி , அரிப்பு  ஏற்படும் .
 ♥ நடைமுறை விளக்கம் : K 3, UB 60 இரண்டும் தொடர்ந்து தூண்ட குதிகால் வலி போகும்.
  K   நுரையீரல் வழியாக வலுப் படுத்த வேண்டும். அதற்கு  நீலப் புள்ளி Lu 5 - நுரை நீர்  உதவும்.
   Sp 5 வழி ஓட்டமும் சரி செய்ய வேண்டும்.
⊙ புதுமை விளக்கம் : நீரகத்தின் அவசரகால உதவி ( EMERGENCY  Request ) தானே  நிகழ்கிறது.
 பாடல் : குதிகால்     நரம்பின்  
                          முன் கணுக்கால்       மூட்டின் 
               கோட்டிடை     நீர் மண் 
                          குறுக்கும்   குதிகால் வலி..................272.
  மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment