Thursday, 20 November 2014

 54/60 - நீர் நுரை  - K 7        
 ● அமைவிடம் : K 3 - நீர் மண்ணில் இருந்து (குதிகால் நரம்பு - முன் கணுக்கால் எலும்பு - கோட்டின் மையம் ) 2 சுன்  மேலே.
 ■ பயன் விளக்கம் : இது Lu 5- நுரை நீரின்  எதிர்ப்புள்ளி 
 நுரை நீரில்  இருந்து  இயல்பான ஆற்றல் கிடைக்காத போது , தானே நுரை ஆற்றல் கேட்டுப் 
 பெறும் இடம்  நீர் நுரை - K 7 - இது தூண்ட, ----
     (1) சிறுநீரகக் கல் கரையும். ( காற்றோட்டம் இல்லாத இடத்தில் படுப்பதால் நுரையீரலின் 
 ஆக்சிஜன் எடுப்பு வேலையை K  செய்யும். தன்  வேலை கெட்டதால்  சிறுநீரகக் கல் . அதை 
 கரைக்க நுரையிடம் ஆற்றல் கேட்கும் இடம். )
 (2) நுரையீரல் திணறலான ஆஸ்துமாவின்  போது  K 7, நுரையீரல் இடம் வந்த நீர்ச் சத்து 
 கேட்டுப் பெறுவதால் --ஆஸ்துமா குறையும்.
 ( நுரையீரலின் வரவு Lu 9 குறைப்பதன் மூலமும் ஆஸ்துமா குறையும்.)
 (3) அதிக ஓட்டத்தின்போது மூச்சு இரைத்து  வியர்வை அதிகமாக வரும். நுரையீரலுக்கு 
 துணை புரியும் புள்ளி ஆதலால் ---- அதிக வியர்வை குறைக்கும்.
 (4) நீருக்கு வளம் கிடைப்பதால், முடி வளர, தலை வழுக்கை தீர உதவும்.
 ♥ நடைமுறை விளக்கம் : கணுக்காலுக்கு மேல் முழங்கால் பிடித்து அமுக்கினால்  இப்புள்ளி 
 மற்றும்  Sp 6 - மண் மனம் , அழுத்தப் பட்டு பயன் கிடைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : கேட்கப்பட்ட நீர் வளம் , K 7 - நீர் நுரை - கேட்பு நீலம் .
  பிற.        Liv 8 - கல் நீர்  - கேட்பு பச்சை , P 9, H 9 - மனம் கல் , இதயம் கல்  - கேட்பு சிவப்பு .
 Sp 2 - மண் தீ - கேட்பு மஞ்சள் , Lu 9 - நுரை மண் - கேட்பு வெள்ளை.
 பாடல் : நீர் மண்    இரு சுன்னில் 
                        நீர் நுரை        இருக்குமே 
                 நீரின் கல்       நீக்குமே 
                          நீர் வளம்      ஆக்குமே ..............276.
 54A /60 - நீர் மனம்  - K 9              
 ● அமைவிடம் : K 3- ல்  இருந்து 5 சுன்  மேலே . ( K 7-ல்  இருந்து  3 சுன்  மேலே.) 
 ■ பயன் விளக்கம் : நீர் தன்  ஓட்டத்தில் நுரை தொட்டு, 'ஐ ' தமிழ்ப் புள்ளி  மனத்தை 
 (பெரி கார்டியம் ) K 9 -ல்  தொடுகிறது. இது தேங்கினால், ---
  ---மனக் கோளாறு, மாதவிடாய்க் கோளாறு , கால் வலி உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : காலின் உட்புறப் பகுதியில்  மேலே ஏற்றி  எண்ணெய் தேய்த்தல் ,
 அமுக்கி விடல் , கல், மண், நீரக ஓட்டப் புள்ளிகளைத் தூண்டி நன்மை செய்யும் .
 காலின் வலி, பிற கோளாறுகள் நீங்கும். 
⊙ புதுமை விளக்கம் : மரபு வழியின் மேல் - மனச் செயல்பாடு.
 (மரபுக் கோளாறுகள் நீங்குகின்றன என்பது ஆய்வு முடிவு.) 
 பாடல் : நீர் மண்        ஐஞ் சுன்னில் 
                      நீர் மனம்        இருக்குமே 
           சீர் செயும்         மாத விடாய் 
                     சீராக்கும்   மன நிலை.......................280.
55/60 - நீர் வலு  - K 10         
 ● அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
 ■ பயன் விளக்கம் : நீரின் தன்  வலுப் புள்ளி - K 10 - தேங்கினால்,---
       --(1) சிறுநீரக ஆற்றல் கெடும்.
        (2) தலை முடி உதிரும் ( K 10 + Lu 5 தீர்வு )
       (3) பாத எரிச்சல் ( பாத ஓட்டம் தடை படுவதால் )
      (4) ஆண்மைக் குறைவு ( K 10 + Liv 8 தீர்வு )      ஏற்படும் .
 ♥ நடைமுறை விளக்கம் : முழங்கால் மடக்கும் வேலை இன்றேல் , நீர் வலு  வேலை செய்யாது.  நோய்தான்  மடக்கிப் போடும். சம்மணம்   இடு . ஆண்மை பெறு . 
 ⊙ புதுமை விளக்கம் : ஒவ்வொரு தன்வலுப் புள்ளியும் தூண்டப் படும் போது  ( அமுக்கல் ,
 ஊசி, அசைதல் ) பிரபஞ்ச ஆற்றல் பெறுகின்றன. அளவற்ற  கட்டித் தங்கம் வெட்டி எடு.
 பாடல் : முழங்கால்    மடிப்போரம் 
                          முத்தான      நீர் வலுவாம் 
               முடி உதிரல்    தடுக்கும் 
                            முழு ஆண்மை     கொடுக்கும்..............284.
  மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment