Saturday, 15 November 2014

 45/60 -மண் நீர் - Sp 9         
 ● அமைவிடம் : டிபியா எலும்பின் உட்பக்கத் தலை பாகத்திற்குக் கீழே அமைந்து  உள்ளது.
 (கணுக்கால் மூட்டிற்கு நேர் மேலே , முழங்கால் முன் எலும்பு டிபியா ஒட்டி நேர் மேலே சென்று 
 முட்டித்  தடங்கலில் முடியும் பள்ளம்-Sp 9.)
 ■ பயன் விளக்கம் : இந்தப் புள்ளியில் வலியுள்ளமை காட்டுவது, மண் நுரை -Sp 5 நேர் ஓட்டம் 
 வேலை செய்யாததால் , ஒன்று தாண்டி (நுரை) ஓடும் ஓட்டம் , Sp9 இயங்குவதை .
      மண்ணீரல் தன் பளுவை ( நுரையீரல் தனக்கு தள்ள முடியாதலால் ) சிறுநீரகத்திற்கு 
 நேரடியாகத் தருதல். இது தடங்கினால் , --
                 காலில் வீக்கம், முழங்கால் சம்பந்தப் பட்ட வலிகள், மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் 
( 4, 5 நாட்கள் அக்கு ஊசி போட வேண்டும்.)
   Sp 9 தூண்ட மூட்டு வலி தீரும் . நீர்க் கோர்வையும் தீரும்.
 ♥ நடைமுறை விளக்கம் : Sp 5 -மண் நுரை (கணுக் கால் மூட்டசைவுப் புள்ளி ) தூண்ட,
  Sp 9 இயல்பாகும் . மூட்டு வலி வராத முன் தடுப்பு.
           வந்த பின், Sp 9 தூண்ட வலி தவிர்ப்பு.
 மூட்டு வலி தவிர்க்க, எளிதான செரிமான உணவுகளும் (மண் ), மூச்சுப் பயிற்சியும் (நுரை )
 அவசியம். நோய் வந்த போது , புளிப்பு உணவுகள் தவிர்க்கவும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் 
 1, 3, 5 தூண்டலில் மூட்டு வலி அதிகமாகும். மழை, பனிக் காலங்களிலும் நோய் மிகும்.
 ⊙ புதுமை விளக்கம் : கருமேகம் ஓடி , கடலில் வீண் மழை.
 பாடல் : முழங்கால்      முன்னெலும்பில் 
                            முன்னேற     முட்டி தட்டும் 
              இடங் காணின்        மண் நீராம் 
                       இது தீர்க்கும்       மூட்டு வலி....................240.
 46/60 - இரைப்பை  நுரை  - St  45     
 ● அமைவிடம் : காலின் இரண்டாவது விரல் நகத்தின்  வெளிப்புற விளிம்பில்  இருந்து 
 0.1 சுன்  மேலே அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் துணை உறுப்பு இரைப்பை . இதன் ஓட்டம் எண்  முறைப்படி 
  இரண்டாம் விரலில் St 45 என   முடிகிறது. இவ்விரல் மண் தொட வேண்டும். நுரை 
 தூண்டப் பட்டு  செரிமானம் முழுமை.. இது  தடங்கினால் , 
       கால்  விரல் வலிகள் , திடீர் என வரும் நோய்கள் 
 ♥ நடைமுறை விளக்கம் : வீட்டில், மண் தரை, சிமென்ட், மொசைக் தரைகள்  மின் கடத்தும் 
 ஆற்றல் அதிகம் உள்ளவை . காலின் 2, 4, 5 - ம்  விரல்கள் உடல் ஓட்டச் சுற்றுகளை முடித்து 
 வைத்து , நோய்களைத் தடுப்பவை.
           கூட்டிய , தூய்மையான தரை அல்லது மாடிப் பகுதியில்  வெறுங்காலில் , முன்னங்கால் 
 நன்கு ஊன்ற , நடை பயில வேண்டும். தரைத் தளம் சரியானால் மிக நன்று.
        மொசைக் தரையை ஊக்குவிக்க வேண்டும். நடை அரிதான இடங்களில் , அழகு ஊட்ட 
 மார்பிள்  பயன் ஆகட்டும்.
 ⊙ புதுமை விளக்கம் : மண் இறங்கிகள் மூன்று. ( St 45, GB 44, UB 67 )
 கால் த் தடம் பதிய நடந்தால் , நுரையீரல் ஆற்றல் எழும்புமே !
 பாடல் : இரண்டாம் விரல்         வெளி நகத்துக் 
                           கீழாம்          இரைப்பை நுரை 
               திரண்ட           வலியெலாம்  
                          தீர்க்குமே        மண் பட......................244.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment