Wednesday, 12 November 2014

 42/60 - மண் தீ  - Sp 2 - ஈர்ப்பு செரிமானம்    
 ● அமைவிடம் : காற்  கட்டை விரலை மடக்கும் போது  ஏற்படும் மடிப்பு , 
 முடியும்  இடத்தில்  உள்ளது.
 ■ பயன் விளக்கம் : தீயில்  இருந்து (தாய் ) செரிமான ஆற்றல் வரும்  இடப் புள்ளிகள் 
 P 7 - மன மண் , H 7 - இதய மண் . தீ = மனம் + இதயம் .  
            சுருக்கமாக , தீ மண்  வரா நிலையில்  தானே கேட்கும் நிலை மண் தீ -Sp 2
           கேட்கும் நிலை நீடித்தால் --- சர்க்கரை நோய்.
 வலியின் தன்மை நோயின் தன்மை பொறுத்தது . இது தூண்ட,
   (1) சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அதிகப் பசி கட்டுப் படுத்தப் படும்.
 (2) குழந்தைகளுக்குப் பசி உண்டாகும். 
 (3) உடலில் உள்ள  அனைத்து கட்டிகளையும்  (உள்ளே / வெளியே ) கர்ப்பப் பை கட்டிகள் உட்பட கரைக்கும்.
 (4) தீயின் ஆற்றலை வாங்குவதால் , காய்ச்சல் குறைக்கும்.
 ♥நடைமுறை விளக்கம் : சர்க்கரைக் கான அறிகுறி மற்றும் தீர்வுப் புள்ளி. நோயின் நெடு நாள்  தன்மை  ஒட்டி 
 தீர்வும் தள்ளிப் போகும். வாயை மூடி உண்ணுதல், உணவு நேரம், பசி நேரம் அறிந்து உண்ணுதல் , ஈடுபாட்டுடன் உண்ணுதல், மன உளைச்சல் இன்றி இருத்தல், இனிப்பு , புளிப்பு 
 போன்ற உணவுப் பொருட்களை அளவறிந்து உண்ணுதல், ....... போன்ற பின்பற்றல்கள் 
 அவசியமானவை.
 ⊙ பயன் விளக்கம் : P 7 - செரிமானப் புள்ளி பயன் இன்றேல் , Sp 2 - ஈர்ப்பு செரிமானம் . 
 பாடல் : காற் பெரு விரல்        கை மடக்க 
                              கூர் மடிப்பில்           மண் தீயாம் 
               சர்க்கரை நோய்     வந்ததென 
                               சாற்றிவிடும்    இவ்விடத்தே .................224.
 43/60  - மண் வலு  - Sp 3   
 ● அமைவிடம் : கால் கட்டை விரல் எலும்பும் , கட்டை விரலும் சேரும் மூட்டின் பின்புறம் 
 உள்ள பள்ளம் . (Sp 2 தொட்டு மேல் நகர , மேடு தாண்டி வரும் முதல் பள்ளம்.)
■ பயன் விளக்கம் : மண்ணீரல் தன் வலு பெறும் இடம். HB - ஹீமோ குளோபின்  உற்பத்தி 
 தூண்டும் இடம். இங்கு வலி இருந்தால்,
   --இரத்த சோகை இருக்கும், கால் விரல் வலி இருக்கும். தலை பாரம் இருக்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் : இரும்புச் சத்துக் குறைவை உணவின் மூலம் ஈடு செய்வது 
 நல்லது . கறுப்புப் பேரீச்சை , முருங்கைக் கீரை, நிலக்கடலை,........உண்ணல்  தொடர் 
 நடவடிக்கை ஆக்குங்கள். சிவப்பு நிறக் காய்கனிகள்  சிறப்பு.
⊙ புதுமை விளக்கம் : ஹீமோ குளோபின்  இருப்பு அறிய , எளிய சோதனை.
 பாடல் : மண் தீ        முகடு தாண்டி 
                        முதல் பள்ளம்         மண் வலுவாம் 
               முன்னுரைக்கும்     சோகைநோயை 
                        முதலாக்கும்       செவ்வணுக்கள் ............228.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:

Post a Comment