Sunday, 16 November 2014

 49/60 -இரைப்பை த் தீ  - St 41    
 ● அமைவிடம் : பாதம் கீழ்க் காலுடன் சேரும் கணுக்கால் பகுதியில்  2 வது 3 வது விரல்களுக்கு 
 நேர் மேலே உள்ளது. ( கணுக்காலில் தெரிகின்ற இருதலைத் தசை நாரின் நடுவில் உள்ள பள்ளம்  - குதிகால் உயர்த்தும் போது கொலுசு தொடும் புள்ளி.)
 ■ பயன் விளக்கம் : மண் உறுப்பு இரைப்பை , தாயுறுப்பு  தீயிடம் ஆற்றல் கேட்டுப் பெற்று ,
 இரத்த ஓட்டத்தை வேகப் படுத்தும் இடம். செரிமானமும் உடன் நடைபெறும்.
   இப்புள்ளி  தேங்கினால்,  ---(1) இரத்தக் குழாய் ஓட்டங்களின் சீர்மை கெடும்.
    (2) இரத்தக் குழாய் தொடர்பான நோய்கள் வரும்.
    இரத்த ஓட்டம் சீராக உதவும் மூன்று : St 41 - இரைப்பை த் தீ, Sp 5 - மண் நுரை ,
 Lu 9 - நுரை மண்.
 ♥ நடைமுறை விளக்கம் : நடன மங்கையரின் சலங்கைகளும் , வீட்டு மகளிரின் கனமான 
 கொலுசுகளும்  இரத்த ஓட்ட சீரமைக்கு உதவுகின்றன.
 ⊙ புதுமை விளக்கம் : Sp 2, St 41 இரண்டும் தாய்ப் பயன் கேட்டுப் பெறுபவை.
 பாடல் : எழும் ஒரு      பாதத்து 
                      எழும் நரம்பின்       வெளிப் பள்ளம் 
               விழும் இரைப்       பை த் தீ 
                       விரைவாக்கும்         ரத்த ஓட்டம்...............256......
 50/60 - இரைப்பை மண் - இரைப்பை வலு - St 36          
 ● அமைவிடம் : டிபியா எலும்பின் தலைப் பகுதியில் துருத்தி இருக்கும் பகுதியில் இருந்து 
 1 சுன்  வெளிப் பக்கம் அமைந்துள்ளது. ( கண்டு பிடித்தல் : முழங்கால்  கீழ்ப் பகுதி நடுவே 
 நான்கு விரல்கள் வைக்கும் போது , சிறுவிரல் தொடும் இடத்தில்  இருந்து  1 சுன்  வெளிப் பக்கம் ) 
 ■ பயன் விளக்கம் : இரைப்பையின் தன வலுப் புள்ளி. இரைப்பைக்கு  சக்தி தரும் புள்ளி.
 இது  தடங்கினால் , -----(1) வயிறு  சம்பந்தமான நோய்கள் 
   (2) முழங்கால்  சம்மந்தப் பட்ட நோய்கள் 
 (3) நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு. ( ஒப்பிடு : LI 11, Sp 6 )
 ♥  நடைமுறை  விளக்கம் : சம்மணம்   இட்டு  அமர்ந்தால் , இரண்டு கால்களிலும்  உள்ள 
 St 36 , பாதத்தால்  அழுத்தப் படும். செரிமானம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 பரம்பரைப் பழக்கம்  கை விடப் பட்டதால் , பல வயிறு தொடர்பான  நோய்கள் இன்று.
                       மண்ணில் விளைந்ததை உண்ணுகிறோம். செரிக்கிறோம். மண் தொட்டவாறு 
 நடத்தல் , அமர்தல்  தவறென எண்ணுகிறோம். கோவில் போன்ற சில இடங்களே , நம் 
 பண்பாட்டை, நோயற்ற வாழ்வு முறையைக் காப்பாற்றி வருகின்றன. தூய்மையான 
 இடத்தில நடத்தல், வீட்டில் தரை அமர்ந்து உண்ணுதல் , இவற்றை இனியேனும்  நடை 
 முறைப் படுத்துவோம்.
 ⊙ புதுமை விளக்கம் :  செரிமானச்  செம்புள்ளி  St  36.
 பாடல் :  முழங்காலின்         முச்சுன் கீழ் 
                            முன்னல்ல      பின்னொரு சுன் 
                 இலங்கும்         இரைப்பை வலு 
                             எடுக்கும்       நோயின் வலு..................260..
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment