Friday, 31 October 2014

 26/60 -சிறுகுடல் நுரை  -S I  1   
 ● அமைவிடம் : கை சுண்டு விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பிற்கு மேல் 0.1 சுன் தூரத்தில் 
 அமைந்துள்ளது. 
 ■ பயன் விளக்கம் : இதயத்தின் துணை உறுப்பு சிறுகுடல் , தன்  ஓட்டப் பாதையில் , ஆக்சிஜன் 
 எடுக்க வேண்டும். தவறினால், --
   செல்களில்  கழிவு C O 2 - கார்பன் டை ஆக்சைடு  வெளியேறாது. முதுகில் கெட்ட இரத்த 
 ஓட்டம் தேங்குவதால் , இடுப்பு வலி உண்டாகும்.
     திடீர் என வரும் வலிகளும் காரணமாகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : சுண்டு விரல் நக முனைகள் இரண்டையும் (H 9, S I  1) சேர்த்துத் 
 தூண்ட பயன். மாரடைப்பு நிலையைத் தடுக்கும் புள்ளிகள்.
  இதயம், கொழுப்பு அடைப்பினால் திணறும் போது , வலி இடது தோள்ப்  பட்டையில்  வந்து,
 இடது முழங்கையில் இறங்கி, இறுதியாக இடது சுண்டு விரல்  வலிக்கும் நிலை உருவாகும்.
      வலி தோற்றம் தெரிந்தாலே , இடது சுண்டு விரல் நக முனைகளை அக்கு பிரசர் செய்ய ,
 எதிர் ஓட்டம் சமன் செய்யும். பிறகு, வலி நிலை பொருத்து  மருத்துவர் உதவி நாடலாம்.
 ⊙ புதுமை விளக்கம் : இதயத்தின் தொலை தூண்டல் (HEART  REMOTE )
 பாடல் : சுண்டு விரல்  உள் நகத்துக் 
                         கீழ் முனையில்      சிறுகுடல் நுரை 
                மண்டிவிடும்    இடுப்பு வலி 
                          மாரடைப்பும்    தடுக்கும்மே .................           156  
 27/60 - சிறுகுடல் நீர்  - S I 2          
 ● அமைவிடம் : ஐந்தாவது  கை விரல் மூட்டிற்கு  முன்புறம், தோலின்  இரண்டு நிறங்களும் 
 சேரும் இடத்தில அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : ஆள் காட்டி விரலில் ஒரு நீர்ப் புள்ளி  - நுரை நீர்  - L I 2        
                                மோதிரவிரலில்  ஒரு நீர்ப் புள்ளி  - மூ வெப்ப  நீர்  - Tw 2   
     இரண்டிலும்  மோதிரம்  நன்கு வேலை செய்யும். 
 அது போல் சுண்டு விரலில்  ஒரு நீர்ப் புள்ளி  - சிறுகுடல் நீர்  - S I 2 
         இங்கு வலிகளுக்குக் காரணமான  மூட்டு நீர் தேங்கினால்    --
  கை விரல் வலி, தோள்ப் பட்டை வலி உண்டாகும்.
 L I 2 -மின்னல் வேகம், Tw  2 - குதிரை வேகம் , S I 2 - மாட்டு வண்டி வேகம்.
 ♥ நடை முறை விளக்கம் :  மனம், உடல் நீர்க் கட்டுப்பாடு  Tw 2 வில் உண்டு.
   உடல் நீர்க் கட்டுப்பாடு மட்டும்  S I 2 வில்  உண்டு.
 ⊙ புதுமை விளக்கம் : Tw 2 முன் S I 2 அரை மதிப்பு 
  பாடல் : சுண்டு விரல்  கை எலும்பில் 
                          ஒண்டு ஓரம்     சிறு குடல் நீர் 
                மண்டி விடும்     விரல், தோள் வலி 
                           மாய்த்திடுமே    இல்லாமலே ......................160 
 மேலும், அடுத்த நாள், ஆ . மதி யழகன். 

No comments:

Post a Comment