Monday, 20 October 2014

 12/60 -மனத் தீ  -P 8           
 ● அமைவிடம் : நடு  விரலும், இருதய ரேகையும் சந்திக்கும் இடத்தில்  உள்ளது.
 (உள்ளங்கையில்  நான்கு விரல்கள் இறுக்க  நடு விரல் , சுண்டு விரல் தொடும்  ரேகை 
 இதய ரேகை -தமிழ்ப் பெயர் .)
 ■ பயன் விளக்கம் : மனம் தன்  தன்மை (தீ ) யை சந்திக்கிறது. மனத் தீ .இது தேங்கினால் ,
       கை விரல் வலி. துடிப்பு அதிகம் ஆவதால் இதயத்தின் நீர்ப் பகுதி  வெளியேற்றம் 
 ஆகிய வியர்வை , உள்ளங்கை, உள்ளங்காலில்  நனை படும்.
   உடல் முழுக்க வெப்பம் ஏற்றும் புள்ளி .
 ♥ நடை முறை விளக்கம் : உள்ளங்கை சூடு ஏற்றல்  வெப்பத்திற்கு .  சூடம் ஏற்றல் மனம் 
 தூண்ட. குறத்தி உலோகப்  பூண் கொண்ட தடி தட்டி குறி சொல்வது, கேட்போர் மனக் கவலை 
 தணித்து , கவனம் மாற்ற . கூட்டத்தில்  கை தட்டச் சொல்வது, மனம்  சூடேறி சுறுசுறுப்பாக 
(மற்றவர்கள் ஓசையில் விழித்துக் கொள்வது கூடுதல் பயன்.) ஆற்றல் மிக்க P 8 தூண்டப் 
 படுவதால்  இரத்த ஓட்டம்  சுறுசுறுப்பாகும் .
           மட்டை பந்தாட்டத்தில்  பந்து பிடித்தபின் , கை தட்டிக் கொள்வது, பந்து பிடித்தவர்  கை 
 இரத்த ஓட்ட மீட்சிக்கு வழி வகுக்கும்.
          திரு நங்கையர் கை தட்டித்  தட்டி  தம் நோய் நீக்கிக்  கொள்வர்.
           கும்மி அடித்தலும் , கோல்  பிடித்து அடித்தலும்  (கோலாட்டம் ) கொள்ளை நலம்.
           மண  மக்களுக்கு  செண்டு பிடிக்கத் தருவதும், மன்னர் செங்கோல் பிடிப்பதும்  P 8
  மனத் தீ  தூண்ட, சுறுசுறுப்பாக .
 ⊙ முழு மன சுறுசுறுப்பு -FULL ACTIVATION  OF  MIND 
 பாடல் : இதய ரேகை , நடு விரல் 
                       இணை விடம்  மனத் தீ 
              உதயமாம்        வெப்பம் 
                           ஒழிபடும்    சோம்பல் ...................88
 மேலும் , அடுத்த நாள்,  அன்புடன்,  ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment