Friday, 10 October 2014

 உடலின்  ஏழு ஓட்டங்கள் -பாடல்  பொருள்  விரிவு .                         
      ச, ரி, க, ம, ப, த , நி    என்பது ஓர்  ஒப்பிடு  மட்டுமே.                  
                        ச    ஓட்டம் .                                            
 அமீபா  எனும் முதல்  கடல்  உயிரினம் , வாய்  திறந்து  உணவு  ஏற்கும். உணவு செரித்தபின் 
 கழிவை  அதே வாயின்  வழி  வெளியேற்றும் . அதற்கு உடம்பின் மேல் ஒரு புள்ளி , கீழ் ஒரு 
புள்ளி , திறக்க, மூடப்  பயன்படும்  அக்கு பங்சர்  புள்ளிகள்.
      மிருகத்தில்  சிங்கத்தை எடுத்துக் கொண்டால் , அது கர்ஜனை செய்ய வாய் திறக்க  ஆற்றல் 
 இரு  வழிகளில்  வருகிறது.  1.  ஆசன வாய்  பின்  முனையில்  இருந்து  தலை  வழி   வந்து ,
 இறங்கி  மேல் உதட்டருகே  வந்து நிற்கிறது .  இந்த  ஓட்டத்தை  டி யூ  (Du ) என்பர். Gv  எனவும்   ஆளுகை  ஓட்டம், கருவ  நாடி  எனவும்  கூறுவர் .
                                                  2. ஆசன  வாய்  முன்  முனையில்  இருந்து , வயிறு, நாபி , நெஞ்சு  வழி  கீழ்  உதட்டுக்கு  வந்து  நிற்பது  மறு ஓட்டம் . இதை ரென்  ( Ren ) என்பர். Cv  கட்டுப் 
பாட்டு  ஓட்டம்  எனவும், கர்ப்ப நாடி  எனவும்  கூறுவர் .
            இரண்டு  உதடுகள்  சேர  அல்லது  வாய் ஓட்ட , அசைய  இந்த முதன்மை நாடி  இயங்கும். அம்மா, அப்பா, தம்பி ...... போன்ற  சொற்களில் வரும்.. மேலும், குழந்தை  பால் 
 குடித்தல் , வாய் முடி உண்ணல் , மெல்லல் , முத்தமிடல்,  .....இவற்றில்  இயங்கும்.
                      டி யூ  வில்  உள்ள சில புள்ளிகள்.                      
  Du 14:  தலையை முன்புறம் குனியும்   போது , கழுத்தின் கீழ்  துருத்திக் கொண்டிருக்கும் 
 எலும்பு  கீழ்  உள்ள  பள்ளம்..இறங்கும்  யாங்  புள்ளிகளின்  தலைமை  இடம். நோய்  
 எதிர்ப்பு  சக்திப் புள்ளி.
 Du  20:  உச்சந்தலை ப்  புள்ளி. இரு  காதுகளின்  மேல்  நுனியில்  இருந்து  வரையப்படும் 
 குறுக்குக் கோடும் , மூக்கு  நுனியில் இருந்து  வரையப்படும்  நேர் கோடும்  சந்திக்கும் 
 புள்ளி. உச்சந  தலை ப்  புள்ளி மீது தான்  கரகம்  வைத்து  ஆடுகிறார்கள். சுமையை 
 சும்மாடு  வைத்து  தூக்குகிறார்கள் .  எண்ணெய்  தேய்த்துக்  குளிக்கும் போது  சுழற்றி 
 விட்டு  தேய்ப்பார்கள் . Du  20 நூறு  புள்ளிகளுக்கு  சமானம்.
     சக்தி, அமைதி, உறக்கம்  தருவது. எல்லா  ஓட்டப்  பாதைகளையும்  (meridians )     
 தூய்மைப்  படுத்தும்.. மன அழுத்தம், இரத்த  அழத்தம்  குறைக்கும்.
     உச்சந்தலை  முத்தம்  நாடி  ஓட்டம்  தூண்டும். கொடுப்பவர்க்கு  உதடு   இணைவதால் 
 கூடுதல்  பயன் . உதடு முத்தமும்  அதே பயன். பிறர்  கிரீடம்  வைக்க  கர்வம்  அமைதி 
 ஆகும்.
 Du  26:  மூக்கு நுனிக்கும்  மேல்  உதட்டுக்கும்  இடையே  உள்ள புள்ளி.  உ ஷ்  விரல்  வைத்து 
 அமைதி  காக்கக்  கூறுதல். இரத்தக் கசிவு நிற்கும். விந்து முந்தல்  நிற்கும். முதுகு  வலிக்கு 
 தூரப்  புள்ளி. எட்டி இருந்து  வேலை  செய்யும்.
 Du  28 : கருவ  நாடி  கடைசிப்  புள்ளி. மேல்  உதட்டின்  உள்ளே  ஈறுகளின்  மேல்  உள்ளது.
 வேல் குத்தும்  புள்ளி. கருவத்தினால்  வரும்  நோய்கள் காலி . சித்தர்களின்  சித்தம்.
             நெற்றிச் சூடிப்  புள்ளி Du  23, மூக்கு முனை  Du  25. இவற்றின்  இடையே  பல  
புள்ளிகள்  வர்மத்தில்  உள்ளன. அக்கு பங் சரில்  விடுபட்டுள்ளன. எடுத்துக் காட்டு :
  மிக  முக்கியமான   திலகமிடும்  நெற்றிப் புள்ளி.
      அடுத்த நாள்  ரென்  ஓட்டம்.  அன்புடன், ஆ.  மதி  யழகன்.

No comments:

Post a Comment