Tuesday, 21 October 2014

 13/60 -மன மண்  - P 7            
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.    
 ■ பயன் விளக்கம் :மனம் தன்  எண்ண  மீட்சியில்  P 9 - மனம் கல்லில்  தேங்கலாம் . (சுடும் நினைவுகள் ). மனம் தீவிர எண்ணச்சுழலில் P 8 -மனத் தீயில்  தேங்கலாம் . (கற்பனைகள் )
        இங்கு , P 7- மன மண்ணில் - மண்ணீரல் செரிமானத்திற்கு  ஆற்றல் தரும் வேலை கெடும்.
 கெட்டுவிடுவதனால் ,-மணிக்கட்டு வலி , செரிமானக் கோளாறு, வயிறு மந்தம், சீரண  மண்டலத்தில்  அனைத்து ப்  பிரச்சனைகளும் உருவாகும்.
        இங்கு  P 7 -இல் அக்கு பிரசர் , அல்லது ஓர் அக்கு ஊசியில்  ஒரே நாளில் பயன் தெரியும்.
 ♥ நடை முறை விளக்கம் : மணிக்கட்டு வலி வந்தவர் மற்ற வேலைகளை நிறுத்தி விடுவதால் 
 மனப் பிரச்சனைகள் , சீரண  மண்டலப் பிரச்சனைகளாக மாறி விடும். சீரணம் 
 ஏற்ற இறக்கத்தில் ஓடிக் கொண்டு இருக்கும்.
        நோய்க்கும் பார், பேய்க்கும் பார் -என்பது பழமொழி . வெளி அறிகுறி நோய் உடலில் 
 பார்த்து சரி செய்தாலும், உள்  அறிகுறி நோய் மனதில் (பேய் ) பார்த்து சரி செய்ய வேண்டும்.
 இப்புள்ளி (மணிக்கட்டு சுற்றி ) படுமாறு  கயிறு கட்டுதல், உலோகக் காப்பு நலம் தரும்.
 ⊙ புதுமை விளக்கம் : மனக் குதிரைக்கு கடிவாளம் இடு . உணவு பார்த்து சுவைத்து  உண்க .
 மன அமைதி செய்து  பிறகு உண்க .
 பாடல் : மணிக்கட்டு   ரேகையின் 
                         மத்தியில்   மன மண் 
               மணிக்கட்டு  வலிபோம் 
                          மணி வயிறும்      நலமாம்.........,..........92  
 13A /60 -மன உடல் அமைதி -உறக்கப் புள்ளி -P 6    
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் P 7 இருந்து  2 சுன்  (மூன்று  விரல் குறுக்கம்) தொலைவில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மன ஓட்டம் மண்ணீரல் (3) தொட்டு  நுரையீரல் (4) போகும் முன் 
 உடல் மையம் 'ல ' தமிழ்ப்  புள்ளி தொடுகிறது.
             மன மைய   ஓட்டத்தில்  உடல் மையம் கலக்கும்  இடம் . இது  தூண்ட,
        நோய் எதிர்ப்பு சக்தி  கிடைக்கும்.  தூக்கமின்மை  அகலும். உடலையும் 
 மனதையும்  சமப் படுத்தும் .அமைதி கிடைக்கும் .
 ♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கித் தலையில் வைத்தால் தூக்கம் எளிது.
 தலையணை கட்டிப் பிடித்துப் படுத்தாலும் தூக்கம் வரும்.
 வளையல் அணி விழா  கையில் உள்ள புள்ளிகளைத் தூண்டவே.
 முழுக் கை சட்டையின் அகன்ற கைப் பட்டி , அமைதி தரும்.
  நண்பரின் கை பிடிக்க ஆறுதல் .
 தாவாங்கட்டை  வளை கோடும் அமைதி, தூக்கம் தரும்..
  ஒருவர் கையின் P 6 -இல் , அடுத்தவர் தாவாங்கட்டை வைத்துப் படுக்க , இருவர் உறக்கம் 
 இனிதே நடக்கும் .
 ⊙ புதுமை விளக்கம் :  அமைதி மற்றும்  உறக்கப்  புள்ளி . ( மாத்திரை இல்லாமல் )
 பாடல் : மன மண்     தொடங்கி 
                   இரு சுன்     தொலைவில் 
                மன உடல்     அமைதி 
                      உறங்கல்    உறுதி...................................96
   மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.
        விளக்கணி  விழா  நாள்  வாழ்த்துக்கள் .    21-10-2014.

No comments:

Post a Comment