சிறுநீரகம் வலுப் பெற கூடுதல் வழிகள் - நீர் வளம்.
காட்சி : நீலப் பொருள்களைப் பார்த்தல், (கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சிறுநீரக நிறங்களே )
மேலும் பயன்பாட்டில் கொண்டுவருதல் ( எ. கா. உடை ) , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்க. வெப்பமான இடங்களில் வேலை செய்வோர் , நீல உடை அணிவது குளிர்ச்சி தரும், நீலப் பச்சை (bluish green ) இன்னும் சிறப்பு. குளிர்ச்சியை வெப்பமானக் கல்லீரலுக்கு கொண்டு செலுத்தும்.
உணவு : நீல நிறத்தில் உள்ள திராட்சை ( கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சரியே.
கருப்பு எள் , கருப்பு நாகப் பழம், கறுப்புப் பேரீச்சை , கருஞ் சீரகம் , கடுகு, மிளகு, கரும் பச்சைத் தர்பூசணி , நீர்ச் சத்தை உள்ளடக்கிய வெள்ளரி, சுரை, தேவையானபோது நீரும் அடங்கும்.
சுவை : உவர்ப்பு . அளவான உப்பு, சுவையோடு சிறுநீரகமும் தூண்டும். அவசர காலத்தில் தரப்படும் சலைன் பாட்டில் , சிறுநீரகத்தைத் தூண்டிப் பயன் தருகிறது. அதிகம் பயன்படுத்த வேண்டாம், சிறுநீரக மின்கலன் ஆயுள் குறையும்.
குணம் : அச்சத்தால் அழியும் சிறுநீரகம் என்பது பாட்டு . அச்சம் வந்தால் சிறுநீரக இயக்கம் தடைப் பட்டு , அடுத்துள்ள கல்லீரல் வலு கிடைக்காது. துணிவைக் கைகொள்வது வெற்றி பெற
ஆற்றல் தரும். அச்சம் தவிர்க்க உடலின் பிரபஞ்ச ஆற்றல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மூச்சை இழுத்து அடக்கி பின் வெளியிடு. பிரபஞ்ச ஆற்றல் உள் வந்து உதவும்.
நம்பிக்கையால் சிறுநீரகம் செயல்படும். அதன் தலையில் உள்ள தொப்பி போன்ற சுரப்பி அட்ரீனலின் சுரக்கும். இது கல்லீரலுக்கு ஆற்றல் தந்து , அதன் வழி, மனம் இதயம் செயல்படும் .
செயல் இல்லாத பரபரப்பு , இதயத்துக்கு வேண்டாத இரத்த அழுத்தம் தருவதோடு, சிறுநீரகத்தை
காலி (வெறுமை ) செய்து கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலை தவிர்.
செயல் :
(1) சம்மணம் இட்டு அமர்ந்தால் , 'ஒ ' -K 10 என்ற புள்ளி - உள்ள முழங்கால் ரேகை மடிப்பில்
அழுத்தம் விழும். அடுத்து , 'ஓ ' - UB 66 என்ற கால் சுண்டுவிரல் கீழ் உள்ள புள்ளி மண் தொட்டு
அழுந்தும். ஆகா ! கிடைத்து விட்டதே சிறுநீரக வலு ! செயல் படுத்துவீர்களா ?
(2) பெண்கள் தரைச் சமையல் செய்யும்போது, ஒருகால் குத்துக் காலிட்டு, மறுகால் சம்மணமிடும் முறையில் மண் தொடும். சிறுநீரக முழு சுற்றும் உள்ளங்காலில் ஏறி சுண்டுவிரலில் முடியும். சிறுநீரகக் கோளாறு அண்டவே அண்டாது.
கால் சுண்டு விரல் சிறுநீரகத்தை சுண்டும் விரல் . கைச்சுண்டு விரல் இதயத்தை சுண்டும் விரல்
நோய்கள் :
'ஒ ' 'ஓ ' புள்ளிகள் தூண்டப் படாத நிலையில், உடலில் உள்ள உப்பு நீர்க் கழிவு UB சிறுநீர்ப் பை மூலம் வெளியேறாமல் கழிவுத் தேக்கம் ஏற்படும் . அதனால் வரும் நோய்கள் :-
(1) அரிப்பு (2) பாத எரிச்சல் (3) அதிக வியர்வை (4) குதிகால் வலி (5) விந்தணுக்கள் குறைவு
(6) முழங்கால் மூட்டு வலிகள் (7) மூட்டுப் பிடிப்பு (8) முதுகு வலி (9) சிறுநீர்ப் பிரச்சினைகள்
(10 கீழ் இடுப்பு வலி (11) பின்பக்கத் தலை வலி (12) வெள்ளைப் படுத்தல்.....
தன் வலுப் புள்ளிகள் 12 நிறைவு.
அன்புடன், ஆ. மதி யழகன் .
No comments:
Post a Comment