Monday, 21 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.3 contd.

குணம் :

கவலை உணர்ச்சி செரிமானம் கெடுக்கும். அழிக்கும் உணர்ச்சி நீக்கி, ஆக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும். இதை நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு எனக் கூறுகிறோம். இதை செழுமை உணர்வு எனவும் கூறலாம்.
எ. கா. (1) உறவினர் இறந்தார் என் செய்வேன் ?
      விடை : இருக்கும் உறவினர் காப்பேன். மேலும் இறந்த தாய் தந்தை  தன் உடலில் உள்ளபோது அதைக் காத்து, பெயரும் காக்க வேண்டும். 
          (2) தேர்வில் தவறினேன் . என் செய்வேன் ? 
     விடை : வரும் தேர்வுக்கு உழைப்பேன் . 
எந்த தோல்வியும், இழப்பும், மனதில் சுற்றி சுழன்று விடையற்று நின்றால் , மனம் சிக்கிக் கொண்டது என்று பொருள். அது பயிரில் களை . உடன் நீக்க வேண்டும். 
செயல் : 
  (1) உணவின் மூலமே உடல் கட்டுமானம் நடை பெறுகிறது. அற்றது போற்றி  உண்க . 
 பசித்துப் புசி  கைக் கொள்க. 
 (2) எந்த உணவையும் ஒதுக்காது , அறுசுவை வரும்படியும் , ஏழு நிறங்கள் வரும்படியும், தேர்ந்து உண்க . இதுவே சத்துணவு.
 கால்சியம், மகனீசியம் .  ... எதுவானாலும் உணவின் வழி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
 அவசரம் எனில், ரசாயன மருந்துகள் வேண்டும் காலம் மட்டுமே. 
(3) நடைமுறை : காலைத் தொங்கப் போட்டு வாழும் முறை முடிந்தவரை தவிர்க்கவும்.
சம்மணம் இட்டு உண்ணுங்கள். மேசையில் உண்ண நேர்ந்தால் , முழங்கை கீழ்ப் பகுதி (மண் மூலகம் ) ஊன்றவும். 
இயல்பாகத் தரையில் சம்மணம் இட்டு அமர்வதால் , Sp 3, St 36 இணை அழுத்தம் பெறுவதால் , செரிமானம் எளிதில் நடை பெறுகிறது. நாற்காலி, சோபா இவற்றை எப்போதாவது பயன் படுத்துங்கள் . அவ்வாறு அமர்ந்துதான் படிக்க நேர்ந்தால் , இரண்டு கால்களையும் தூக்கி வைக்க வழி செய்து கொள்ளுங்கள். செங்குத்து சாய்மான நாற்காலிகள் சிறப்பு. முதுகு வலி வராது. 
   தரையில்  பாய்  அல்லது  சமுக்காளம்  இட்டு , சுவரில் சாய்ந்து கால் நீட்டியவாறு  அல்லது மடக்கி அமர்ந்து  பணி செய்வது  பல நோய்கள் தடுப்பு ஆகும். 
 (4) நோய்கள் : மனம் வழி மேலும் விளக்கம் :-
 (P ) மேல் மனம் நாகத்தின் தலை. அதன் உடல்  
 (Liv ) அடி மனம் கல்லீரல் 
 (K ) ஆழ் மனம் நீர் ஈரல் 
 (Lu ) சூழல் மனம் நுரை ஈரல் - வால் 
வாலிலிருந்து உடல் நோய் கிளம்பும், நுரையீரல் நோய்கள் இருமல், தும்மல், சளி  பிறகு நீர் ஈரல் நோய்கள் - வலி உடல் பகுதிகளில்.. பிறகு கல்லீரல் நோய்கள் - தலை வலி, இரத்த அழுத்தம் .. பிறகு மேல் மனம் , இதயக் கோளாறு , பசியின்மை , சுளுக்கு , தூக்கமின்மை  இதற்குப் பிறகு மண்ணில் வந்து தீவிரமாக முடியும். நாகத் தலையில் இருந்து 'மன நோய் '  கிளம்பி அறிகுறிகள் காட்டி, காட்டி மறையும்,  ஆக, நுண் மனப் புள்ளிகள் 'உ ' , 'ஊ ' தூண்ட  உடல்  நோயும் தீரும் ; மன நோயும் தீரும். 
செரிமானம் கெடுவதால்   வரும்  நோய்ப் பட்டியல் :
     (1) வயிற்று வலி (2) வாயுத் தொல்லை (3) அஜீரணம் (4) தலை வலி / பொட்டுத் தலைவலி 
 (5) பசியின்மை (6) அதிகப் பசி, சர்க்கரை (7) மூக்கு அடைப்பு (8) தோல் நோய்கள் (9) கால் மூட்டு வலி , முழங்கால் வலிகள் (10) மாத விடாய்க்  கோளாறுகள்  (11) நீர் வீக்கம் / நீர்க் கட்டு ... என விரிவு.
 தொடரும். 
அன்புடன், ஆ. மதி  யழகன்..  

No comments:

Post a Comment