4.3 நான்கு சுற்றுக்கள்
ஐந்து தனிமங்கள் (பூதங்கள் ) தன் வலுப் பெறும் வகை நீக்கி விட , உயிர் ஆற்றல் சுற்றும் நிலைகளை நான்காகப் பிரிக்கலாம். அவை (1) வழங்கல் சுற்று (2) கேட்கும் சுற்று (3) கட்டும் சுற்று (4) கவரும் சுற்று . தன் வலுப் புள்ளிகளை அடர் வண்ணப் புள்ளிகள் அல்லது உயிர்ப் புள்ளிகள் எனலாம். பிற நான்கு முறையே வண்ணப் புள்ளிகள், கேட்பு வண்ணப் புள்ளிகள், கட்டும் வண்ணப் புள்ளிகள், கவரும் வண்ணப் புள்ளிகள். (படங்கள் )
(1) வழங்கல் சுற்று - வண்ணங்கள் - தூண்டும் வலு - உடல் அசைவில் தீர்வு
கல்லீரல் (1) , தீ (2) , மண் (3) , நுரை (4) , நீர் (5) என இயல்பாக ஓடும் முறை ஆக்க சுற்று. இந்த சுற்றில் கல்லீரல் தாய் தீக்கு, தீ தாய் ஆகும் மண்ணுக்கு , . . .
எனவே இந்த சுற்றில் தாய் இயங்கி தனயனுக்கு வழங்குவதால் இது வழங்கும் சுற்று.
எ. கா. நுரை, நீருக்கு ஆற்றல் வழங்கும் இடம் Lu 5 = நுரை நீர் --> நுரை வழங்கும் நீர்.
முழங்கை மடிப்பில் உள்ள இந்த புள்ளி , அசைவதன் மூலம் சீறுநீரக வலு கிடைக்கும்.
(பயன் வழிப் பெயர் திராட்சைப் புள்ளி. )
(2) கேட்கும் சுற்று - கேட்பு வண்ணங்கள் - கேட்கும் வலு - விளையாட்டு
ஓட்டம் 1, 2, 3, 4, 5 எனில் ஆக்க சுற்று. (படத்தில் அம்பு ) எதிர்த் திசையில் இயங்கினால் கோடரி போல் செயல் நடந்து பிடி பாக பூதம் பயன் அடைகிறது. வழங்குவது தேங்கினால்
கேட்டு வாங்குவது, கடன் வசூலிப்பு போல.
எ. கா. மேல் எடுத்துக் காட்டில் வழங்கல் முறையில் சிறுநீரகத்திற்கு ஆற்றல் வராத போது (Lu 5 இயங்கவில்லை) , சிறு நீரகம் , சிறு நீரகக் கற்களைக் கரைக்க ஆற்றல் நுரையிடம் கேட்பது K 7 புள்ளி = நீர் நுரை புள்ளி . இது கேட்கும் சுற்றில் உள்ள புள்ளி. இதை நீர் கேட்கும் நுரை எனலாம். இடம் : காலில் முன் கணுக்கால் எலும்பு, குதி கால் நரம்பு கோட்டின் மையத்தில் இருந்து 2 சுன் மேலே. ( பயன் வழிப் பெயர் கல் நீக்கி )
(3) கட்டும் சுற்று - கட்டும் வண்ணங்கள் - விரைவு முன் வீச்சு - பரபரப்பு தற்காப்பு
ஒன்று தாண்டி முன் ஓடல் கட்டும் சுற்று.
எ. கா. கல்லீரல் - தீக்கு ஆற்றல் தந்து , தீ - மண்ணுக்கு ஆற்றல் (செரிமான உதவி ) தராது போனால், கல், மண்ணுக்கு ஒன்று தாண்டி உதவ வந்து கட்டுப் பாடு செய்தல் Liv 3 =
கல் மண் --> கல் கட்டும் மண் . இது இரத்த அழுத்த நோய்.
எ. கா. 2 மண்ணீரல் - நுரைக்கு ஆற்றல் தந்து - நுரை நீருக்கு ஆற்றல் தந்தால்சிறுநீரகம் வளம் பெறும் . இது ஆக்க சுற்று .
நுரை துக்கத்தால் தேங்குகிறது. மண் கவலை அப்பிய நிலை அல்லது சுமை மிகுதியால் ஒன்று விட்டுத் தாண்டி சிறுநீரகத்திற்கு ஆற்றல் தருவது S P 9 - மண் நீர் --> மண் கட்டும் நீர். சிறு நீராக வேலை தடைப் பட்டு வலிகள் உருவாகும். இது கால் மூட்டு வலி நோய்.
அடுத்து 4 -வது சுற்று .
அன்புடன், ஆ. மதி யழகன்.
No comments:
Post a Comment