Tuesday, 22 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.4

5.4 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நுரை வளம் Lu 8 , LI 1      

Lu 8 -நுரை தன் வலு  - அடர் வெள்ளை - உயிர் 'எ '
இருப்பிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் (Lu 9) இருந்து ஒரு சுன் மேலே அமைந்துள்ளது. 
துடிப்பு : பிரபஞ்சத்தில் இருந்து காற்றை ( ஆக்சிஜனை ) கொண்டு வரும் வேலை அதிகம் ஆகும்போதும், வலுக் குன்றியபோதும் வலி காட்டும். ஊசிமுறை உதவாது. தொடல், அக்கு பிரசர் , PROBE  சுற்றி அழுத்தல் உதவும். 
மனம் வழி : இதுவே பிரபஞ்ச மனம், வெளித் தொடர்பு உள்ளது. சோகத்தால் அல்லது கவலையால்  மூச்சு குறைந்து Lu 8 - உயிர் 'எ ' மெலிவுத் துடிப்பில் இருக்கும், தொடர்ந்த கவலை, இழப்பு எண்ணம் மார்புக் கூட்டின் அளவைக் குறைக்கும். நுரைத் துடிப்பு மனம் வழி மெலிவான பிறகு , வெளியே இருக்கும் நோய்க் கூறுகள் எளிதில் வந்து உட்காரும். பிறகே நோய்கள். இன்ப எண்ணங்களால் மார்பு விரிவடையும். துக்கம், வெறுப்பு , துன்ப எண்ணங்களால் மார்பு சுருங்கும்,  தூய இன்பம், சிரிப்பு மனம் வழி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. 
உடல் வழி : சுற்றுப் புறத் தூய்மை பேண  வேண்டும் . 
பயன் : யோகப் பயிற்சி ( மூச்சுப் பயிற்சி + உடல் ஆசனங்கள் ) செயும்போதும் , விளையாட்டில் 
ஏற்படும் கை அசைவுகளினாலும் தூண்டப் படும், இருமல், ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு , மேல் மார்பு எலும்பு வலிகள் தொடக்க நிலையில் தடுக்கப் படும். 
LI 1 - குடல் வலு  - அடர் வெள்ளை  - உயிர் 'ஏ ' 
இருப்பிடம் :  ஆட் காட்டி விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன்  தூரத்தில் 
 உள்ளது. 
துடிப்பு : மிகத் தெளிவான துடிப்பு பெரும்பாலும் இருக்கும் . 
மனம் வழி  விளக்கம் மற்றும் பயன் : 
    மனம் என்பது பாம்பு ஆனால்  தலை  P - மேல் மனம், உடல் கல்லும், நீரகமும். வால் நுரை + குடல். மேல் மன பாதிப்பு  வால் LI 1 - ல்  தடை உண்டாக்கும். மயக்கம், அதிர்ச்சி , திடீர் வயிற்றுப் போக்கு ஏற்படும் . மேலும் இதன் கழுத்து ஓட்டம்  Lu 17, 18 - ல்  தடையாகி கீழ்த் தாடை வீக்கம் உண்டாக்கும். 
ஆட் காட்டி விரல் தொடல் - ஒரு விளக்கம் :-
 (1) ஒரு பொருளைத் தொட நினைப்பது , ஐம்பூதச் சுற்றில் மேல் மனம்  P  தொடங்கி  கல், நீர், நுரை  என 4 பூத சுற்று. 
 (2) தொட்டு , பிறகு  மேல் மன உணர்வு வருவது  4 பூத எதிர்ச் சுற்று. 
 (3) வாயில் வைப்பது  5 பூத மண் சுற்று. வாயில் 'குழந்தை ' எனின் உமிழ்நீர் வடியும். 
 (4) அனுபவக் குழந்தை எனின் (இது மேல் மனம் அல்ல ) கல்லீரல் - அனுபவக் கிடங்கில் இருந்து - அதன் அடிப்படையில் உமிழ் நீர்  ஊறும் . 
 (5) சுட்டு விரல் , சுட்டும் விரல் மட்டும் அல்ல. அனுபவ விரல் கூட. அதனால்தான் உணவைச் சுவைக்க, பிற உணர  சுட்டு விரல் பயன் படுத்துகிறோம். 
 (6)  நடு  விரல் தொடல் நேரடி அனுபவம்.  ஆனால் ஒரு பூதம், சுட்டு விரல் தொடுவது 5 பூத அனுபவம்.
நுரை வளம் பெறக் கூடுதல் வழிகள் :
 காட்சி : வெள்ளைப் பொருள்கள் பார்த்தல்,  ஆடை அணிகள் உட்படப் பயன் படுத்துதல், சுற்றிலும் காட்சி அமைப்பை உருவாக்கல், தமிழர்கள் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிதலும் இதில் சேரும். வெள்ளை உயிர் காக்கும் நிறம். தூய்மை காட்டுவதும் கூட, 
உணவு : வெள்ளை நிறத்தில் உள்ள பூண்டு, வெங்காயம், ( உட்பகுதி ) வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி , அவல் , தானியங்கள் ( உட்பரப்பு வெள்ளை ) தேங்காய், தேங்காய்ப்பால் ....
 தொடரும்.   

No comments:

Post a Comment