Monday, 14 December 2015

Tamil muraiyil acuouncture -2/5.2

5.2 தன்  வலுப் புள்ளிகள் 12 -ல் தீ வளம் P 8, H 8, Tw 6, S I 5 

தீ தன் வலு = மனம் தன் வலு + இதயம் தன் வலு. - அடர் சிவப்பு - உயிர் 'இ ' 
இருப்பிடம் : இதய ரேகையில்  நடு விரல் மற்றும் சுண்டு விரல் அழுத்தும்போது முறையே P 8, H 8 ரேகை மேல் படியும். 
துடிப்பு : இதயம் வேகமாகத் துடிக்கும்போது வியர்வை வரும் . இது கைகளிலும் தெரியும். 
மனம் வழி : மனத்தின் எண்ணங்கள் குவிந்து மீண்டும் மீண்டும் திரும்ப வரும்போது உண்டாகும் 
மன அழுத்தம்  இங்கு வலிப் புள்ளிகளாக மாறும். [ குறத்தி உலோகப் பூண் தடி தட்டி மன அழுத்தம் நீக்கும்  இடம். ]

பயன் பாடு : கை விரல் வலி நீக்கும். வியர்வை மறையும். 'Thums up ' செய்க. [கை முட்டி மடக்கி கட்டை விரல் உயர்த்துக ] கடைத்தெரு செல்லும்போது கம்புப் பை எடுத்து செல்க, கையில் விசிறி பிடித்து வீசுக. கைப் பணிகள் எது வேண்டுமானாலும் செய்யவும். இதய ரேகை  அழுத்தப் பட வேண்டும். தீ ( இதயம் + மனம் ) வலு கிட்டும். 

Tw 6 -மூ வெப்பத் தன் வலு , S I 5 - சிறுகுடல் தன் வலு - அடர் சிவப்பு - உயிர் 'ஈ '
  இருப்பிடம் : Tw 6, புறங்கை மணிக்கட்டு ரேகையின்  மூட்டிலிருந்து  முட்டி ஒட்டி 3 சுன் மேலே. (படம்) S I 5 , உள்ளங்கை உள்நோக்கி சாய்க்கும்போது , மணிக்கட்டு தொடக்கத்தில் உள்ள பள்ளம். 
துடிப்பு : மிகினும் குறையினும் வலிப் புள்ளியாகி அடையாளம் காட்டும். 
மனம் வழி : மனதின் ஆற்றல் சரிவரப் பாயாததால் அல்லது வேகமாக உள்ளதால் மூ வெப்ப மண்டலம்  ( சுவாச, ஜீரண , கழிவு மண்டலம் பிரிக்கும் இரட்டை உறை அதாவது  உதர விதானம் ) இயக்கங்கள் சீர் கெட்டு  வெப்ப மாறுபாட்டால் காய்ச்சல். எ. கா. பேய் படம் பார்த்து சிறுவர்களுக்கு வரும் காய்ச்சல், 
இதயம் வழி : அதிக எடை தூக்கல், இரத்த ஓட்டம்  தேங்கல்  ( கழிவு நீங்க வில்லை ) இவற்றால் 
சிறு குடலுக்கு ஆற்றல் வரவில்லை, S I 5 அதிக வலிப் புள்ளியாக மாறும். இதனால் மணிக் கட்டு வலி ,  தோள் பட்டை வலி, பெருங் குடலில் வாயு ஓட்டம். 
பயன் பாடு : மணிக் கட்டு சுழலும் பணிகள் (1) கம்பு சுற்றல். (2) கத்தி , வாள் சுழற்றும்  பயிற்சி 
 (3) மட்டை பிடித்து ஆடும் விளையாட்டுகள்  தீ வலு தருபவை. 

தீ வலுப் பெற கூடுதல் வழிகள்.

காட்சி : சிவப்பு (இதயம் ), இளஞ் சிவப்பு - ரோஸ் (மனம் )  பொருள்களைப் பார்த்தல், பயன்படுத்தல், சுற்றிலும்  காட்சி  அமைப்பை அமைத்துக் கொள்க. 
உணவு : சிவப்பு நிறத்தில் உள்ள காய், கனிகள் உண்பது. எ. கா. பீட்ருட், ஆப்பிள், தக்காளி, காரட்,தோலோடு நிலக் கடலை  , வெல்லம் , வெல்ல சருக்கரை, கருப்பட்டி, பனங் கல்கண்டு . . .
சுவை : கசப்பு சுவையான பாகற்காய் ,  பச்சை சுண்டைக்காய்  ( அல்லது வற்றல் ) அகதிக் கீரை,
 மாதுளம் பழத்தில் உள்ள கசப்புக் குருத்து, மஞ்சள் தோல். (சிவப்பு மணிகள் கூடுதல் பயன் )
 தொடரும்.

No comments:

Post a Comment