(4) ஒன்று விட்டுத் தாண்டும் கட்டுப்பாடு சுற்று :
பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப்படும் கல்லீரல் பணி - பரபரப்பு மிகுந்து வேகமாகச் செயல்படத் தூண்டும்போது 'உயிர் ' ஓட்டம் தன் வேகத்தை இரட்டிப்பு செய்து , பூதங்களில் ஒன்று விட்டுத் தாண்டும் நிலை உருவாகிறது.
இயல்பு : கல், தீ, மண், நுரை, நீர்.
கல் - தீ விட்டு மண் தொடல் -> இரத்த அழுத்தம்
மண் - நுரை விட்டு நீர் தொடல் -> மூட்டு வலி
நீர் - கல் விட்டு தீ தொடல் -> தோல் அரிப்பு ....
இங்கு உயிர் சுழற்சி வேகம் '2X ' ஆகும் . இருமதி வேகம் .
இத்தகைய நோய்கள் மனிதனின் பரபரப்பு தீரும் வரை "தீரா " நோய்கள். மீண்டும் வரும். வர வாய்ப்பு உண்டு என்பதுவே விளங்கிக் கொள்ள வேண்டும்.
(5) எதிர்க் கட்டுப்பாடு சுற்று :
பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப் படும் கல்லீரல் பணி - உடலில் காலின் அதிக
வேலை ( நீண்ட தூர நடை, நீண்ட நேர நடனம் ) காரணமாக அல்லது கல்லீரல் (=மனித அடி மனம் ) பாதிப்பு அடைந்திருந்தாலோ , விரைந்த குணம் வேண்டி , அதி விரைவாக '3 X ' வேகம் செல்லுகிறது. ( இது '-2X ' எனவும் பொருந்தும் என்பதால் எதிர்க் கட்டுப்பாடு சுற்று எனக் கூறுவர் ) மெய்யாக இது மும்மதி - மூன்று மதி வேக இயக்கம்.
எ. கா. அதி விரைவில் ஓடும் கார் சக்கரம் , எதிர்த் திசையில் சுழல்வதாகத் தெரியும்.
இங்கு பின்னே உள்ள பூதம் இழுக்கப் படுவதால் 'கவரும் ' சுற்று ஆகிறது.
கல் -தீ விட்டு , மண் விட்டு, நுரை தொடல் - பாத வலி
நுரை -நீர் விட்டு , கல் விட்டு, தீ தொடல் -வறட்டு இருமல்
தீ - மண் விட்டு , நுரை விட்டு, நீர் தொடல் - மாரடைப்பு
நீர் -கல் விட்டு, தீ விட்டு, மண் தொடல் - குதி கால் வலி
இங்கு உயிர் சுழற்சி வேகம் மூன்று மதி என்பதால் , அறிகுறிகளில் செய்யும் தீர்வு தற்காலிகமே .
அதன் காரணமான நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல் 'பூதம்' வலுவாகும் வரை நோய் தீராது .
எ. கா. குதிகால் வலிக்கு மூலம் 'நீர் பூதம்' . குதிகால் வலி மட்டும் தீர்த்தால் , நீர் பூதம் தன் வலுவின்மையை வேறு இடங்களில், வேறு வழிகளில் காட்டும். (1) நீர்க் கட்டிகள் (2) இடுப்பு வலி (3) கழுத்து வலி (4) மூட்டு வலி (5) மூட்டுத் தேய்மானம் ......
எனவே, நோயுற்ற - வலிவு குன்றிய பூதங்களை அடையாளம் காணவும் , தீர்வு காண
உதவுவதுமே இந்நூல் முயற்சி . புள்ளிகள், மற்றும் அடிப்படை விளக்கத்திற்கு முதல் புத்தகம் உதவும்.
எச்சரிக்கை : இந்நூல் படிப்பதற்கு முன்னதாக நீங்கள் ஓர் உறுதி கொள்ள வேண்டும். நான், நீங்கள் எனும் சொற்களைப் பாராட்ட மட்டுமே பயன் படுத்த வேண்டும்,( அதில் நோய் தோற்று உள்ளது ) மனிதர் குறை கூறாது, பூதங்களின் குறை மட்டுமே கூற வேண்டும்.
தொடரும்.
No comments:
Post a Comment