Friday, 22 January 2016

Tamil muraiyil acupuncture-2/-mukavurai

ஐம்பூத நோய் விளக்கம் - நூல் ஆசிரியர் உரை 

என் ஆர்வம் :
        அக்கு பங் சர் மருத்துவம் கற்பித்தல் எனும்போது , புள்ளியின் இட விளக்கம் , அப்புள்ளியின் மருத்துவப் பயன்கள் கூறப் படுகின்றன. அடுத்து , கையில் நாடி பார்த்து, பூதங்களின் கூடுதல், குறைவு கண்டு ஏற்ற இறக்கங்களைச் சரி செய்வதற்கு நான்கு சுற்றுக்களை அறிமுகம் செய்வர்.
கூடவே, கை நாடி பார்க்க காலை ஏழுமணிப் பொழுதே  உகந்தது என்பர். எளிய வழி காண ஆர்வம் கொண்டேன். நான்கு சுற்றுக்களின்  புதிர் அவிழ்ப்பே  இந்நூல் . ஏன் எனக் காரணம் கேட்பின் , துடிக்கும் ஒவ்வொரு அக்கு பங் சர் புள்ளியும் ஒவ்வொரு நாடியே  எனும்  நுண் கருத்தே.  அந் நாடியே , சுற்றையும் , பல  பேருண்மை களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. 
கேட்போர் ஆர்வம் :
          என்னுடைய முதல் புத்தகம் , ' தமிழ் முறையில் அக்கு பங் சர் ' வெளியான பிறகு (முதல் வெளியீடு - 2015) நிறைய அலை பேசி அழைப்புகள் வந்து பாராட்டியுள்ளனர் . புத்தகத்தின்  வெளியீட்டுரை  you tube : Tamil  muraiyil acupuncture  வெளி வந்து உலகம் முழுவதும் பலரும் பாராட்டி , நூல் கேட்டு வாங்கி உள்ளனர்.
         மனம் என்ற கருத்து பலரால் மேலும் மேலும் கேட்கப் பட்டது ; வரவேற்கப் பட்டது . மனம் பற்றி மேலும் கூற முடிவு செய்தேன். அக்கு பங் சர் படிக்க பலர் ஆர்வம் கொண்டு வழி கேட்டு வந்த மின் - அஞ்சல்கள் பல. 
நூல்  அடிப்படை :
          முதல் புத்தகத்தில் உடல் அக்கு பங் சர் புள்ளிகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று 
எழுதிக் கொண்டு இருந்தேன்.  ஆனால் பெரி கார்டியம் எனும் ஓட்டத்தை 'மனம்' என்று கூறாமல் விளக்க முடியாததை உணர்ந்தேன். அதே போல் இந்த புத்தகத்தில் மனப் புள்ளிகள் , நான்கு சுற்றில்  ஐம்பூதப் புள்ளிகள் (உடல் + மனம் சார்ந்தவை ) எனக் கூறவே புகுந்தேன். 
         எல்லாம்  எழுதி முடித்து விட்டு , எந்த சொல்லை விரிவாக அடுத்த புத்தகத்தில் விளக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது கடைசி அத்தியாயத்தில் ' பூதங்களின் சதுக்கச் சிற்பம் ' 
என்பதில் அந்த சொல் விளக்கம் அவசியம் ஆகி விட்டது. 
          ---------அது   - " உயிர் "
(1) ஒவ்வொரு பூதமும் தன்  வலுவில் அமைதியாக இருக்கின்றன. இப்போது உயிர் சுற்றும் வேகம் '0' -சுழி .
(2) அடுத்து ஒரு பூதம் தன் வலு மிகுந்து  ஒரு செயல் புரிவதற்காக அடுத்தடுத்து தாவி , வேலைமுடிக்கிறது .  அது  அ , ஆ, ....ஒ , ஓ  என ஐம்பூதச் சுற்று . இதன் வேகம் 'X ' என்போம் . 
தூண்டும் வலுவில் உயிர் சுழற்சி  வேகம் '  X  '  X = மதி  என்க 
(3) அடுத்து ஒரு பூதம் தன் வலுக் குறைய ,  வேலை செய்ய வேண்டித் தாய் பூதத்திடம் ' கேட்டுப் ' பெறுகிறது . இங்கு உயிர் சுழற்சி வேகம் ' -X ' எதிர் மதி  என்க . 
( அதாவது  ஓடாத சக்கரத்தை சற்றே பின்னுக்கு இழுத்து விடுவது போல. உண்மையில் அக்கு பங் சரில் இதுதான் மருந்து எனக் கூறப் பட வேண்டும். கேட்கும் வலிமை மந்திரம் ஆகும். ) 
தொடரும். 

No comments:

Post a Comment