நன்றியுரை :
இந்நூல் சிறப்புற வெளிவரத் துணை புரிந்து , ஆக்கமும், ஊக்கமும் தந்து துணை நின்ற
மனைவி வளர்மதிக்கும், வரைகலைப் படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளைய நிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த , மறைந்த திருவாரூர் த. ச . தமிழனார் அய்யா அவர்கட்கும், முதல் நூல் வெளியீட்டு உரையை சிறப்பாக்கிய இயற்றமிழ்ப் பயிற்றக நண்பர்களுக்கும் , நட்பில் ஊக்குவித்த குடவாசல், திருவாரூர், தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும் , நட்பில்
உள்ள அக்கு மருத்துவர்களுக்கும் , திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றின் தமிழ் நண்பர்களுக்கும் , உளங்கனிந்த பாராட்டுக்களை அலை பேசியிலும் , முக நூலிலும் , நேரிலும் தெரிவித்துக் கொண்டு இருக்கின்ற நல்ல உள்ளங்களுக்கும் , நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த. ச. குற ளேந்தி க்கும் , புலவர் எண்கண் மணி, புரவலர். திரு மோகன்தாசு . த. இ . கழகம். அவர்கட்கும், தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் காகவும் , கண்ணகி வழிபாடு பெருகவும் தன் வாழ்வையே அறப்பணியா கக் கொண்ட நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய " பிளாக் ஹோல் " நிறுவனத்தாருக்கும் என்
உளமார்ந்த நன்றி உரித் ததாகும் .
அன்புடன்,
ஆசான், ஆ. மதி யழகன் .
------------தமிழ் வாழ்க --------
No comments:
Post a Comment