Thursday, 25 September 2014

உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் பாடல் பொருள் .
      41 வரி முதல் 60 வரி வரை.
   புளிப்பு : பச்சை நிறம் காட்டும்  கல்லீரல்   சுவை  புளிப்பு.
  புளியோதரை   உண்பதால்   கல்லீரல்   வளமாகும் . கல்லீரல்   ஊக்க   நோய்களின்   போது (புளிப்பு )  தவிர்ப்பது  நன்று.
   கசப்பு : சிவப்பு   நிறம்   காட்டும்   இதயம் (தீ ஈரல் )  சுவை   கசப்பு.
 இதயத்தின்   துணை   உறுப்பு   சிறுகுடல்   இதய   பாதிப்பினால்  புண்ணாகும்.  இந்நிலையில் 
 கசப்பு சுவை  உள்ள பாகற்காய்  சுண்டக்காய்  அகத்திகீரை  உண்ண  நலமாகும். குடல் புழுக்கள் 
 அழியும். கசப்பு சிறுகுடலை  வலுவாக்குகிறது .
இனிப்பும், துவர்ப்பும்.: இனிப்பினால் உமிழ் நீர் ஊரும் ; மண்ணீரலும்  தூண்டப்  படும். உணவின் 
இறுதியில்  துவர்ப்பு சுவை பாக்காலும் மண்ணீரல் செரிமானம் வேகமாகும்.
காரம் : கார  உணவுகள்  நுரையீரலைத்  தூண்டி  அதிக பிராண வாயுவை ப்  பெறும் .
 உப்பு : உப்பு  சிறுநீரகத்தை த்  தூண்டும். நஞ்சை  முறிக்க  அதிக உப்பு தருவது  அதற்கே.
 இனிப்பு +உப்பு  கலவை  சோர்வு  நோயாளியை த் தெம்பாக்கும் . எலுமிச்சை  சாறோடும் 
கொடுக்கலாம் . உப்புசுவை  அரசத் தன்மை உடையது . எல்லாவற்றோடும் சேரும். ஒரு சுவை விருப்பம் அல்லது வெறுப்பு அந்த உறுப்பின் நோய் காட்டும்.
சுவை தேடுவோர் : மசக்கைப் பெண்கள் மாங்காய் கேட்பது கல்லீரல் மிகு வேலையால் .பாம்பு 
தீண்டையில் இதயம் தூண்ட கசப்பு வேர் தருவர். துள்ளி விளையாடும் பிள்ளைகள்  இனிப்பு 
கேட்பது மேலும் வாலாட்ட. வேலை  மிகுதியில் ஊழியர் கேட்பது காரப்பொருள்கள் .
கல்லீரல் /எரிச்சல் : ஓய்வு , உறக்கம் (கல்லீரல் வளம் ) மிகுதி , குறைவால் எரிச்சல் , சினம் .
இதயம் /சிரிப்பு : இதயக் கோளாறு என்பதை சிரித்த முகம் கூறும். பேச்சு எல்லாம் பெருமையும் மகிழ்ச்சி யும்  இருக்கும். காவி விருப்பம் கட்டாயம் இருக்கும்.
மண்ணீரல் / கவலை , சிந்தனை : செரிமானம் தேடுவோரிடம்  கவலை, சிந்தனை.
நுரையீரல் /துக்கம் : நுரையீரல்  தன்  அளவு  குறையும்  துக்கம், துயரம்  மண்ட . துணை இழந்தார்  மார்புக் கூடு அளவு  குறையும் . நுரையீரல்  வளம்  பெற  மூச்சுபயிற்சி (பிராண யாமம்)  முதன்மை.
சிறுநீரகம் / பயம் : சிறுநீரகம்  கெடுவது  பயத்தால் . பய மிகுதியில்  சிறு நீர் கழிப்பர்.
மாற்று குணங்கள் : சிறுநீரகம் / பயம் , நம்பிக்கையால் தீரும். கல்லீரல் / சினம்  கருணையால்  
தீரும். இதயம் / சிரிப்பு  தெளிவால் தீரும். மண்ணீரல் / கவலை, சிந்தனை  செழுமைப்  படுத்தலால  தீரும்..  நுரையீரல் / துக்கம்  உறவு, நண்பர்களிடம்  பகிர்வதால்  உயிர்ப்பு. வெள்ளை  நிறத்தில்  எல்லா  நிறங்களும்  அடங்குவதால்  மூச்சு  உயிருக்கு  சமம்.
படித்தமைக்கு  நன்றி. அன்புடன், ஆ. மதி யழகன்.

No comments:

Post a Comment