Sunday, 28 September 2014

குரல் பண்பு , மற்றும்  ஈர வெளிப்பாடு  பாடல்  பொருள்  தொடர்ச்சி.      
          வரிகள்  69 முதல் 80 வரை.        
                குரல் பண்பு :1.  கத்திப்  பேசினால் கல்லீரல்  கோளாறு. 2.  அதிகம்   சிரித்தால்,  இதயம் 
  கோளாறு.3. பாட்டு  பாடுவதும்  கேட்பதும் அதிகமானால் , செரிமானக்  கோளாறு. அது 
  மண்ணீரல். 4. அழுகை  அடிக்கடி  வெடித்தல் , நுரையீரல்  கோளாறு. சிரிப்பும்,  அழுகையும் 
  சேர்ந்து  வந்தால்  இதயம், நுரையீரல்  கோளாறு. (2, 4 ) 5. முனகல்  தவிர்த்து  வேறில்லை  எனில், சிறுநீரகம்  கோளாறு. சிறு நீரகம்  தாங்க  முடியாத  வேலைப்  பளு .  நோய் தெரிந்தால் 
  தீர்வும்  எளிதுதானே.
               ஈர வெளிப் பாடு : 1. கல்லீரல் தான்  இவ்வுயிர். ஆத்மா  எனலாம்.  அது கண்ணில்  தெரியும்.  இறந்தால்  கண்  நிலை குத்தும். அசையாது. கண்ணீர், கல்லீரல் வெளிப் பாடு ; வேலைப் பளு . சினமும், பிற குணங்களும் , உடல் பாதிப்புகள் கூடக்  கண்ணில்  தெரியும்.
2. தீ ஈரல் வேலைப் பளு , வேர்வையால் தெரியும். இதயம், உடல் வேர்வை ; மனம் , உள்ளங் 
 கையில். 3. மண்ணீரல் தன்  விருப்ப மிகுதியை ( உணவு, பாலியல் விருப்பம் ) உமிழ் நீரில் 
  காட்டும் . 4. நுரையீரல்  தனது வேலைப்  பளுவை  தும்மல், சளி , கோழை யால்  காட்டும் .
 5. சிறுநீரக  வேலைப் பளு சிறுநீர் அளவில் தெரியும். சிறுநீரகமே , பரிணாமக் கோட்பாட்டின் 
 அடிப்படையில்  தொடரும்  உயிர்களின், உருவம் பண்புகள்  வெளிப்பாட்டிற்கான பேருயிர் 
 உறுப்பு. அதன் வெளிப்பாடு  விந்தும், மாதப்  போக்கும்  கூட. தடைகள் முதலில் சிறுநீரகத்தையும்  பின்  உடல் நிலையையும்  பாதிக்கும். தனி மனித , குடும்ப, சமுக, பொருளாதார, அரசியல் காரணங்கள் துணை நிற்க வேண்டும். சிறுநீரகம் செயல் படுவதில் சிரமம்  ஏற்பட்டால் , அது உள்ள இடத்தில  வலி. அது முதுகு வலி.
        ( முதுகுவலி  போக உடல் நீட்சிப் பயிற்சிகள் 1.  காலையில்  எழுமுன்  படுக்கையில் 
 மல்லாந்த  நிலையில் ஒரு கால் L   போல்  உயர்த்தி , இறக்கி பின் மறுகால் பின்  இருகால் 
 5 முறை. 2. மல்லாந்த நிலையில்  ஒருகால் மடக்கி நெஞ்சு தொட்டு , தலை முன்  எழ வேண்டும். பின் மறுகால் பின்  இருகால் 5 முறை 3. மல்லாந்த நிலையில் கைகள் படுக்கையில் 
ஊன்றி  உள்ளங்கால் களும் ஊன்றி  உடல் உயர்த்த வேண்டும் 5 முறை. 
                                  4. இப்போது குப்புறப் படுத்து  முதுகுக்கு மேல் ஒரு கால் நீட்டியவாறு உயர்த்த  வேண்டும். பின் மறுகால்  பின்  இருகால்  5  முறை.
    5. குப்புறப்  படுத்த  நிலையில், தாவங்கட்டை இரு  கை தாங்கிய  நிலையில்  கால்கள் 
மாறி மாறி    முதுகின்   கீழ்ப்  பகுதியை த்  தட்ட  வேண்டும்.  10  முறை.
   6. சிறு குழந்தை தவழ்ந்த நிலையில் தலை, மார்பு தூக்குவது போல் 5  முறை  செய்க.)
   நல்ல பயன் கிடைக்கும் . அன்புடன்,  ஆ.  மதி  யழகன் 

No comments:

Post a Comment