Wednesday, 24 September 2014

உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் -பாடல் .
       கல்லீரல்     பச்சை    புளிப்புதான்    இச்சை ,
        தீ ஈரல்    சிவப்பு    கேட்பது       கசப்பு ,
        மண்ணீரல்   மஞ்சள்   இனிப்பும்,   துவர்ப்பும் ,
         நுரையீரல்    வெள்ளை   தேடுமே .    காரம் ,...........44
         சிறுநீரகம்    ஊக்கும்    செவ்விய    உப்பு.
          அறுசுவை   தனிலே   அரசாளும்   சிறப்பு .
          ஒருசுவை    தனிலே    மிகுதியும்   விருப்பம் ,
           உரக்கக்       கூறும்       ஓர் உறுப்பு   மயக்கம் .....48
          புளிப்பு          கேட்பார்     பூவையர்     மசக்கையில் ,
          கசப்பு         கேட்பார்      கடிநாகம்     தீண்டையில் ,
          இனிப்பு      கேட்பார்     இளமையில்   பிள்ளைகள் ,
          கார்ப்பு       கேட்பார்      கடமைமிகு    வேலையில் ...52
          எரிச்சலும்   சினமும்    ஏற்படும்      கல்லீரலால் ,
         மகிழ்ச்சி யும்   பெருமையும்   மலரும்    இதயத்தால் ,
         கவலையும்   சிந்தனையும்   காண்பிக்கும்   மண்ணீரல் ,
        துக்கமும்    துயரமும்   தொடுவது    நுரையீரல் ......56
        அச்சத்தால்   அழியும்   அரிய    சிறுநீரகம் ,
        அதைத் தீர்க்கும்  நம்பிக்கை , அருங் கல்லீரல்  கருணையால் ,
        உச்ச இதயம்   தெளிவால் ; உயர் மண்ணீரல்  செழுமையால் ,
       உணர்வாகும்  நுரையீரல்   உயிர்ப்பாகும்  பரி மாற லால் .....60
        படித்தமைக்கு நன்றி .அடுத்த நாள் பொருள் .அன்புடன்,
      ஆ .மதி யழ கன் .

No comments:

Post a Comment