Friday, 8 December 2017

உயிர் அக்கு-மனம் 2.4 1/2

2.4 மன உடல் நோய்கள் விளக்கம்.
    இதய உறை என்னும் மனம்(Pericardium) இதயத்தை முட்டுவதால் உண்டாகும் நோய்கள்.
(1) தூக்கமின்மை:
                தூக்கம் என்பது கல்லீரல் தன் தூய்மை மற்றும் புத்துணர்ச்சிக் காலம்.பிற வெளி வேலையும் இருக்கக் கூடாது.உள்ளே தீவிர எண்ணமும் இருக்கக் கூடாது.அதற்குத் தான் சேகரித்த நினைவுகள்(அடிமனமாக),உடல் சக்தித் துணுக்குககள் திரட்டு (கிளைக்கோஜன்) இவற்றை முறைப்படி அடுக்கி வைக்க இரவு 11-3 p.m தேவை.இந்த நிலையில் உறவு -அதாவது உயிர் சக்தி பயணம் கல்லீரல், சிறுநீரகம் இடையே நடந்து கொண்டிருக்கும்.அக்கால் தீராத ஆசைகள் கனவில் தீர்ந்தது போல் தோற்றம் வந்து நீங்கும்.
பயங்கள் நடவாதது நடந்ததது போல்க் காட்டி முடித்து வைக்கப் படும்.ஆகக் கனவு பிரம்ம நிலைப் பாதை பயணம்.
மன சமாதானத்திற்கு அவசியம்.//
           தூக்கமின்மை என்பது கனவுக்குள் நுழைய முடியாமை.உங்களை ஒரு நினைவு (எ.கா. பெண்),அறிவு (வீடு வாங்க,கடன் தீர்க்க, தொழில் ஆர்வம்.  . .) தூங்க விடாது தடுத்துக் கொண்டிருக்கும்.[இதன் நீட்சி கவலை-மண் பூதம்= மண்ணீரல்+கணையம்+இரைப்பை பாதிப்பு.
இவற்றின் நோய்களுக்கு பெரிகார்டியம் ஓட்டத் தீர்வு தேவை.மேலும் துக்கம் ஆக மாறினால் நுரையீரல், பெருங்குடல் பாதிக்கும்.இதற்கும் பெரிகார்டியத் தீர்வு தேவை.]வெறும் தீவிர நினைவுகள் ,பெரிகார்டியம்-கல்லீரல் சக்தி ஓட்டம் மட்டுமே.உடல் பணி எடுக்கும் சக்தி போல் 4 பங்கு சக்தி எண்ணம் எடுக்கும்.4 மணி தோட்ட வேலையும், ஒரு மணி மூளை வேலையும் ஒன்றாக கல்லீரல் சக்தி எடுக்கும்.பெரிகார்டிய த்தேக்கமே தூக்கமின்மை.
      உறக்கப் புள்ளி P6 தூண்டலாம்.10 நிமிடத்தில் உடன் பயன்.(உறங்க உதவும் குறிப்புப் படம் காண்க)
(2) உள்ளங்கை வியர்வை-பதட்டம்-P8-அக்கு பிரசர்.
(3)அஜீரணம்-செரியாமை-P7-இன்சுலீன் புள்ளி.
(4)ஞாபக மறதி- நினைவுத் திறன் புள்ளி- P9.
(5)கற்பனை நோய்கள்-எண்ணம்,சொல்,செயல் வரிசையில் உடல் அறிகுறி காட்டுதல்.அக்குபங்சர் வரிசை கல்,தீ,மண்
LIVER-PERICARDIUM-SPLEEN AND GB,TW,ST.
எண்ண விளைவு-எ.கா:பாம்பு கடித்தது என்று அறிந்தாலே
பய சுரப்பிகள் உடலில் மாறுதல் நிகழ்த்தும்.
(6) காய்ச்சல்: நோய்களை வெல்ல,கிருமிகளை வெல்ல,தூய்மைப் படுத்த,அதிகக் கலோரிகள் எரிக்க,வேலையின் காரணமாய்,மன எண்ணம் அலைதல்,பயத்தில் வேகம் எடுத்தல்,நெருப்புத் தன்மை ஏற்றம்,காய்ச்சல் ஆகும்.
      மூவெப்ப மண்டலத்திற்கு  பரபரப்பு-Emergency outlet-TW-1-கட்டுப்பாடு சுற்று.+ நெருப்பு தீவிரம் குறைக்க-
 Emergency inlet தாயின் தாய் உதவி நீரகம்-  TW-2
(7) காது வலி: மூவெப்ப மண்டலம்,இறக்க சுற்றில் (கை உயர்த்திய நிலையிலேயே அக்குப் புள்ளிகள் கணக்கிடப்படும்.) காது சுற்றி காது  வடிவில் வளைகிறது.
புள்ளிகள் TW-16,17,18,19,20,21. இந்த தேக்கம் சரி செய்ய,
 தாய் கல்லீரல் உதவி TW3,தாயின் தாய் உதவி TW 2.
(8) முழங்கை வலி,முழங்கை மடக்கில் தொடர் அசைவு,வாதம்: இது மனதின் தீவிர நிலை,சினம்,இயலாமை உணர்வு
,பிறரால் பாதிக்கப் பட்ட நிலை,கையாலாகாத நிலை உணரும் போது,முழங்கை அசைவில் ஆட்டம் வரும்.
பொருள்கள் எடுப்பது தடுமாறும்.முற்றினால்,தொடர் வாத
ஆட்டம்.- பரபரப்பு நிலை-EMERGENCY IN LET P3,H3 வாத நிலையில் தானே இயங்கும்.தொடக்க நிலைக்கு இதே புள்ளிகள் மருந்து.வாத நிலையில் P9,P8,தேவைப்படின் H9,H8.கல்லீரல் இருப்பும் சரி செய்ய வேண்டும்.
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.4 1/2 08/12/2017.

Wednesday, 6 December 2017

உயிர் அக்கு-5உடல்-மனம் 2.3

2.3 மன உடல் (மனோமயக் கோச) நோய்கள்.
         அட்டவணை பார்க்க.இதய உறையால் 10 நோய்களும்
இதயத்தினால் உண்டாகும் 10 நோய்களும்- குறைபாடான சக்தியால் -P-8,H-8 மனப் பானை,சக்திப் பானை ,செய்யும்
வேலைக்கு ஏற்ப நிரம்பாமல் உள்ளதே காரணம்.
          தாக்கம்: மனநிலை வலுவானதாக ஆக்க முடியவில்லை.அறிவு மேலாக,உணர்வு கீழாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் நிலை-மனநிலை பாதிப்பு.
   முன்பாதிப்பு=அடுத்த நிலை பாதிப்பு=சுரப்பி உடல் பாதிப்பு:
                 இது சுரப்பிகள் உடலைப் பாதித்து,சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம் போன்ற வெளிவேடங்களை அணிந்து,மண்
பூதத்தை நோய் இருப்பிடமாகக் காட்டும்.கல்லீரல் அதிர்ந்து
தாண்டி LIV-3-ல் உதவினால் (தாயின்தாய் ஊட்டல்) இரத்த அழுத்தம் என்போம்.
                     இரத்த அழுத்தம் கட்டுபடுத்தும் மாத்திரைகளால்,இதயத்தின் முழு இரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்காததால்,ஆங்காங்கே அரிப்பு,உடலில் கருப்பு (திட்டுக்கள்) மேலும் சிவப்புப் புள்ளிகள்.இரத்த சோகையில் முடியும்.அதுத் தனி நோயாகக் கருதி தனி சிகிச்சை நடக்கும்.
                    சமூகக் காரணிகளோடு,மனித மனம் பரபரப்பின்றி ஒத்து இயங்கினால் மட்டுமே 'மனநிலை"(=மன சக்தி நிலை) காப்பாற்ற முடியும். Ethics of the life-புத்தரின் நன்னடத்தை-திருக்குறள் வாழ்க்கை பின்
பற்ற வேண்டும்.அல்லது ஓஷோ சொன்னது போல துறவி
மனநிலை-அதாவது மனம் கவனிப்பவராக மாறி- விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.சமூகத்தில் இன்று வாழ,
முன்னேற அத்தனை போட்டா போட்டிகள்,பொறாமை,கர்வ மோதல்கள்,பணத் தேடல்கள்,பணியமர்த்தங்கள்,இரவு விழிப்புகள்.  . . .
           பின் பாதிப்பு=ஓட்டத்தின் பின்நிலை கல்லீரல்-பிரம்ம நிலை பாதிப்பு:
         உணர்வும்,அறிவும் சமநிலை கொள்ளாததால்,விழிப்புணர்வு இன்மையால் தீர்மானமின்மை,தீர்மானம் இப்படியும்,அப்படியும் அலைபாயுதல்,அல்லாடுதல்.அதனால்
தூக்கமின்மை.முடிவெடுக்காத,அல்லது அடங்கா ஆர்வப்
பரபரப்பு, தூக்கமின்மையில் நிறுத்தும்.கல்லீரல் அதன் பெரிய மின்கலம் ஆகிய தாய் சிறுநீரத்துடன் இணக்கம் குறையும்.கல்லீரல் வலு குறையும். சோர்வு.சிறுநீரக வலு,கல்லீரல்+பித்தப்பைக்கு கிடைக்காததால் உடலில் ஆங்காங்கே வலி.எல்லாமே தனித்தனி நோயாகத் தெரியும்.
இடுப்பு வலி,முதுகு வலி ( வலி என்பது மூட்டுக்கு மூட்டு பயன் படுத்திய துர் நீர் அகற்றும் நீரக முயற்சி.) இந்த இடங்கள் அடிக்கடி மாறும்.பிடித்து விட்டால் தேவலை என்று தோன்றும்.வலி நிவாரணிகள் மேசையை நிறைக்கும்.
விதவிதமான மருத்துவ மனைகள் ஏறி இறங்கி நோயை அறிய முயல்வார்கள்.
      மேலே சொல்லப்பட்ட 20 நோய்களுக்கும் காரணம்,"மன சக்தி நிலை"மேல்மனம் பெரிகார்டியம்.அக்குபங்சரின்படி இதயம் முதற் காரணி அல்ல.மன அழுத்தம், இரத்த அழுத்தம் இருவேறு அல்ல. இரண்டும் சேர்ந்து ஒன்றே குலம்,ஒருவனே காரணன்.
        இதயத்தை அடக்க, மன அடக்கமே சிறந்த வழி.சிந்தனையை மடை மாற்றும் உத்தி பயன் தரும்.பலர் இதை தாங்கள் அறியாமலே செய்வார்கள்.
     மனநிலைப் பாடல்:
               வார்செருப்பு சீர்சிலம்பு
                             வாய்த்திட்ட வாழ்க்கை
                      பேரீச்சை வெல்லமும்
                                   பீட்ரூட்டும் பெருமை.....8
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.3 //06/12/2017
                             

Monday, 4 December 2017

மனம்-2.2/5உடல் /உயிர்அக்கு

  2.2 மனம்-2
அக்குப் பார்வை:
        முன்னோக்குப் புள்ளிகள்- FORWARD POINTS TWO.
புள்ளி 1: மாதுளம் புள்ளி LIV-2-கால் கட்டை விரல்,இண்டாவது விரல் இடையே உள்ள பள்ளம்.இங்கு,கல்லீரல்
தன் மகனுக்கு -தீ (மனம்+இதயம்)-SYMBOL LARGE HEART WITH A SMALL HEART- குறியீடு: பெரிய இதயம் அருகில் சிறிய இதயம் ஆற்றல் தருகிறது.//மனம் வழி இதய இயக்கம்.// தீ பூதத்தின் இரண்டு பானைகள்,மனப் பானை P-8 முதலில் பிறகு H-8 இதயப் பானை நிரம்பும்.பானை வடிவம் இதய -ஆட்டீன்- வடிவமாகக் காட்டப் பட்டுள்ளது.
    எ.கா உணவு: மாதுளம் பழம்.பழக்கம்: வார் செருப்பு நடை.
புள்ளி 2: ஆரஞ்சுப் புள்ளி GB-38.இடம்: வெளிப்புறக் கணுக்கால் மூட்டில் இருந்து 4 சுன் மேலே.
நடப்பது: பித்தப்பை தரும் ஆற்றலால்,மூவெப்ப மண்டலப் பானை TW-6,சிறுகுடல் பானைSI-5 நிரம்பும்.
 எ.கா உணவு: ஆரஞ்சு.//பழக்கம்: ஒரு காலால் மறு கால் புறம் தட்டுதல்.
            பின்னோக்குப்புள்ளிகள்-BACKWARDPOINTS TWO
மனதைப் பின்னிருந்து முன்னாக அதிர்ச்சி நிலையில்,வயதான நிலையில் தட்டி எழுப்பல்.
புள்ளி 1: நினைவுத் திறன் புள்ளி P-9.
          இடம்: கையின் நடுவிரல் முனை
          நடப்பது:கல்லீரல் தாயிடம் மனம் ஆற்றல் பெறுகிறது.
புள்ளி 2: இதயத்தின் மாரடைப்பு தடுக்கும் புள்ளி H-9
             இடம்:( இடக்கை வலு மிக்கது) கையின் சுண்டு விரல் நகங்கீழ் 0.1 சுன் இறக்கம்,நான்காம் விரல் நோக்கியவாறு.
                நடப்பது: கல்லீரல் தாயிடம் இதயம் ஆற்றல் பெறுகிறது.
  ஆகையால் மன,இதயப் பானைகளை(P-8,H-8) எதிர்த் திசையிலும் நிரப்பலாம்.
 எ.கா. உணவு:மனம்-தக்காளி;இதயம்-பீட்ரூட்
பழக்கம்-கை இறுக்கிப் பிடித்தல் சார்ந்த செயல்.
புள்ளி 3: கழுத்து வலிப் புள்ளி TW-3
            இடம்: மோதிர விரல், சுண்டு விரல் பக்கமாக, மோதிர விரலும்,நான்காம் விரல் கை எலும்பும் சேரும் மூட்டின் பின் புறம். நடப்பது: கல்லீரலின் பித்தப்பை ஆற்றல் பெற்று,போகும் பாதை எல்லாம் சரி செய்யும்.கழுத்தும் ஒன்று.
புள்ளி 4: தாய்ப்பால் சுரப்புப் புள்ளி SI-3
               இடம்: கை விரல்களை மடக்கும் பொழுது,இதய ரேகை மடிப்பின் மேடான பகுதியில்,தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
                நடப்பது: பித்தப்பை ஆற்றல் பெற்று சிறுகுடல் செரிமானம் மிகும்.தாய்ப்பால்  அதிக சுரப்பு.போகும் பாதை,கழுத்து,தலை,காது நலம்.
         ஆகத் தாயிடம் கேட்பதால் பானை 4 இடங்களில் நிரம்புகிறது.எ.கா.உணவு-கீரை;பழக்கம்-கும்மி துவைத்தல்.
மேலும் உணவுகள்:
     மன உணவு: ரோஸ் வண்ண உணவுகள்- தோலோடு நிலக்கடலை,காரட்,முட்டை,காளான்,பீன்ஸ்,பருப்பு,சோயா,திராட்சை,செர்ரி,கீரை,வெண்ணெய்,இஞ்சி,வெங்காயம்,தக்காளி. //இதய உணவு: மேற்கண்டதும்+சிவப்பு உணவுகள்
-ஆப்பிள்,வெல்லம்,வெல்ல சருக்கரை,பேரீச்சை,
    கசப்பான-மாதுளம்பழக் குருத்து+சிவப்பு மணிகள்+மஞ்சள் படலம்,மண் பூதத்திற்காக.,கசப்பு பாகற்காய்,அகத்திக்கீரை,பச்சை சுண்டைக்காய் அல்லது சுண்டைக்காய் வற்றல்.
மேலும் பழக்கங்கள்,மனம்,இதயம் வலுப் பெற-
     LIV-2-வார் செருப்பு அழுத்தம்
     GB-38- சிலம்ப ஆட்டம்
   P-9,H-9,-கை இறுக்கம்,பல்லாங்குழி ஆட்டம்,தாய கட்டை. 
மனம்,இதயம் தூண்ட சிலம்பம் இருபாலருக்கும்.நாட்டியம்,முத்திரை அசைவுகளால் பெண்டிருக்கும் நலம் தரும்.
- ஆசான் ஆ மதியழகன். 04/12/2017 மனம் 2.22

Sunday, 3 December 2017

உயிர் அக்கு-5 BODY ACU-மனம்-1

2.இரண்டாவது உடல்-மன உடல்-குண உடல்.
வேறு பெயர்: மனோமயக் கோசம்
 2.1 அக்குபங்சர் விளக்கம்: (சக்தி இடம் மாறி அடுத்த முனை சென்று நிலை கொள்வது.)
     உறுப்பு: கல்லீரல் முதல் பெரிகார்டியம்(+இதயம்) வரை
         LIVER TO PERICARDIUM (+ HEART)
          புள்ளி: LIV-2- மாதுளம் பழப் புள்ளி
       துணை உறுப்பு:பித்தப் பை முதல் மூவெப்ப மண்டலம்/
சிறுகுடல். GALL BLADDER TO TRIPLE WARMER/SMALL INTESTINE.
          புள்ளி: GB-38-ஆரஞ்சுப் புள்ளி.
         வண்ணம்: பச்சையில் இருந்து ரோஸ்/சிவப்பு
                              GREEN CHANGES TO ROSE/RED
மன நிறம்-ரோஸ்;இரத்த ஓட்ட மிகுதி-சிவப்பு ஆகும்.
           புலன்கள்: கண் பார்த்து நா சுரத்தல்.
             கல்லீரல்/கண் பார்த்து, தீ/நாக்கு நீர் விடுதல்
                குணஉடல் சக்தி ஏற்றம்/பிரம்ம உடல் (கல்)சக்தி குறைதல்.
                சுவை: புளிப்புச் சுவை மாறி கசப்புச் சுவை.
                                 அமிலம் மாறி காரம்
                    திசுக்கள்: தசைநார்கள்,இரத்தக் குழாய்களோடு இயைதல். குரல் பண்பு: கத்துதல் அடங்கி, சிரித்தல்
                    உணர்ச்சி: சினத் தன்மை இடம் மாறி பெருமையாக,மகிழ்ச்சியாக மாறும் (கல்லீரல் இழப்பில்-தான் இழப்பில் பெறுவன-சிற்றின்பம்,இடையின இன்பங்கள்-குடித்தல்,தீவிர ஈடுபாடுகள் அரசியல்,மதம்,. . .
இறுதியாக பேரின்பம் எனும் உள்நோக்கு பயணம்.)
இரக்கம் (நல்ல மரபாக இருந்தால், அன்பும்,நட்பும்,இரக்கமும் பிறவி நிலையிலேயே இருக்கும்) மாறி தெளிவு சேரும்.
        நீர் சுரப்பு: கண்ணுக்கு சொந்தமான கண்ணீர்,இன்பமோ,துன்பமோ,உழைப்பில் இறங்கி வியர்வைக்கு மாறும்.
     மணம்: ஊசிப் போனால் கல்லீரல் கெடும் என்று, சூடு மிகுந்து கருகும் வாசனையோடு மேலே மனதில் வேகம் காட்டும்.
       பருவம்: தை மாதம் (அ),மாசி (ஆ) மாறி மன,இதய மாதங்களில்(,ஐ-மனம்,ஔ-மூவெப்ப மண்டலம் முறையே- பங்குனி,சித்திரை பிறகு இ-இதயம்,ஈ-சிறுகுடல்,முறையே-வைகாசி,ஆனி என வாழ்வைத் தீர்மானிக்கும் மாதங்கள்.)நிலை கொள்ளும்.
     வானிலை:காற்றோட்டமாய் ஒரு மகிழ்ச்சி பார்த்த நிலை,வெப்பம் ஏறி செயல், செயல் எனத் துடிக்கும் நிலை
       செயல்: மயக்கம்/முயக்கம்/ உறக்கம் விரும்பும் கல்லீரல், மனப் பயணம்,உடற்பயிற்சி அசைவுகள் விரும்பும்.
        நடக்கும் நேரம்:கல்லீரல் நேரம் இரவு 11-விடிகாலை 3 மணி.இந்தப் புத்துணர்ச்சி பெறும் தன்மையே பகல் நேரம் (இதய நேரம்) 11-3 மாலை நேரத்தில் பிரதிபலிக்கும்.இடையில் நுரையீரல், மண் பூதம் வலுவேற்றி (ஆக்ஸிஜன்,இனிப்பு தந்து) சமாளிக்கலாம்.
     பிற ஒப்பீடு: கொடுப்பவர்-பெறுபவர்
                                   தாய்-மகன்
                                 பிரம்மநிலை-மனநிலை
மனோ வேகம் பகலில் அதிகம்.அறிவாக மேல் முனை.
படுக்கும்போது வேகம் குறைந்து உணர்வாக க்கீழ் முனை.
காலையில் இரவின் உணர்வு மேல் எழும்பும்.விரைந்து சூடேறும்.இந்த மன ஆட்டம் சுரப்பு உடலைப் பாதிக்கும்.
    - ஆசான் ஆ மதியழகன் மனம்-1 .03/12/2017.
               
       
         

Sunday, 26 November 2017

பிரம்மம் 6 - வலு அட்டவணைகள்.

ஆசான்- 26/11/2017.

5BODY ACU-பிரம்மம் 6

பிரம்ம நிலை(பித்தநீர் இணைப்பு) பிரம்மம் 6
     ஒவ்வொரு இமைத்தலின்போதும்,சிந்தனையின் போதும்,அதிக உணவுக்காக சுரக்கப்படும் பித்த நீரும் இந்த ஒட்டத்தின் வழியே சென்றாக வேண்டும்.GB1-GB14-GB20-
GB34 ..38.40,41 .43,44.
        GB14-தேக்கம்-ஞாபக மறதி
         GB20-சிந்தனைத் தடங்கல்- தலைவலி
         GB 34-அதிகத் தேக்கம்-வாய்க் கசப்பு-அனைத்து
தசை இயக்கம்
         GB 38-அனைத்து தசைநார் இயக்கம்
          GB40-பித்தப்பையின் மன இயக்க பாதிப்பு.
          GB41-தன் வலு
எதிர் திசை இயக்கம்: எதிர்முனை GB44 -காலின் 4-ம் விரல் அழுந்த நடந்தாலும்,பஞ்சப் பூதப் புள்ளிகள் இயங்கிப் பயன்
தரும்.எந்தப்புள்ளியில் அக்கு ஊசியால் தூண்டினாலும்,இரு திசைப் புள்ளிகள் இயங்கும்.ஓட்டம் ஓடு திசை ஊசி முனை சாய்க்க வலு ஏறும்.(TONIFICATION).எதிர் திசை சாய்க்க வலு குறையும் (SEDATION).
          அக்குபங்சரில் பஞ்சபூதப் புள்ளிகளும்,பிற புள்ளிகளும்
 மாயம் நிகழ்த்துபவை.தொட்ட இடம் மட்டும் அல்லாது
தொடாத இடமெல்லாம் வேலை செய்யும்.
  அரிப்பு: பித்தப்பை அதிகப்படி மன இயக்கத்தால் GB 40,அதன் அடுத்த தீப் புள்ளிGB38 (சிறு குடல்,மூவெப்ப மண்டல அழுக்கு நீக்கி-சிலம்ப ஆட்டக்காரர் காலால் காலைத் தட்டும் புள்ளி) பாதிக்கப் படும். நெருப்பு மீற, நீர் அணைக்கும்.நெருப்பு தோற்க அரிப்பு.நீர் தோற்க கருப்பு.
இது வரும் ;போகும்,சிந்தனைக்குத் தக்கபடி.
            கல்லீரல் உயிர் அ உறுப்பு.பித்தப்பை உயிர் ஆ உறுப்பு.இதை வெட்டி எடுக்கக் கூடாது.கல்லீரலின் உதவியாளர்.
ஆசான்.26/11/2017-பிரம்மம் 6 இனி வலு ஏற்றும் அட்டவணைகள்.

Saturday, 25 November 2017

5BODY ACU பிரம்மம் 5 படங்கள்

    உயிர் அக்குபங்சர் -நிலை விளக்கம்
பிரம்ம நிலை - பித்தநீர்ப் பை ஆற்றல் பரிமாற்ற பயணம்.

பிரம்ம நிலை- கல்லீரல் ஆற்றல் பரிமாற்ற பயணம்.

ஆசான் ஆ மதியழகன். 25/11/2017.

5 BODY ACU-பிரம்மம் 5

பிரம்மம் 5- நிலை விளக்கம்
நிலை விளக்கம்: "புயல்" நிலை கொண்டுள்ளது என்கிறோம்.
நிலை என்பது அந்த இடத்தில் சக்தி யோடு நகர்ந்து சற்றே நின்று மேலும் நிரப்பிக் கொண்டு இருக்கிறது.இது போதுமான சக்தி இருந்தால் மேலும் நகரத் தொடங்கும்.
              இந்த சக்தி கல்லீரல் முனையில் 'எவ்வளவு' இருக்கிறது என்பதே கல்லீரல் நிலை அல்லது பிரம்ம சக்தி நிலை அல்லது பிரம்ம உடல் நிலை.
                 இதன்படி,
(1) LIVER END ENERGY-கல்லீரல் முனைப்பு-பிரம்ம நிலை
                                         முழுமையான ஒரு பானை-100%
(2)PERICARDIUM END ENERGY-பெரிகார்டியம்-மனநிலை.
(3)SPLEEN END ENERGY -மண்ணீரல் -சுரப்பு நிலை
(4)LUNGS END ENERGY-நுரையீரல் -(பரு) உடல் நிலை
(5) KIDNEY END ENERGY-சிறுநீரகம்-உயிர் நிலை(படம்)
                     பிரம்ம உடலின் பயணம்.
              LIV-1: இது நிரப்பப் பட்ட பானை.இதய வடிவம்.
PROBE அழுத்த வலியின்மை 100% நலம்,கல்லீரலில்.
இலேசான வலி 40%;நடுத்தர வலி 30%;உயர் வலி 20%
      தன்வலு மூலம் கல்லீரல் /பிரம்ம நிலை தெரியும்.
              LIV-2: பானை,சிறு பானைக்கு(மகனுக்கு) சக்தி தருதல்-வடிவம்"பெரிய சிறிய இதய வடிவம்.
      ஆற்றல் பெறும் மகன் தீ பூதம்- நான்கு உறுப்புகள்
(1) பெரிகார்டியம் (2) மூவெப்ப மண்டலம்(3) இதயம்(4) சிறுகுடல்.//இந்த இடத்தில் இறந்தவரின் கால் கட்டைவிரல்களைக் கட்டுவதன் மூலம் இறுக்கம் தருவர்.இது உயிர் கல்லீரல் வழி மேல்மனம் வந்து விழிப்பு வர.
               LIV-3: கல்லீரல் ஆற்றல் தந்தது தீ(மனம்+இதயம்).
மனமே முதலில் ஆற்றல் பெறும்.இதயம் அப்பாவி;அடுத்த
நிலைதான்.//உடல் உழைப்பில் எடுக்கும் ஆற்றல் ஒரு பங்கு எனின், மன உழைப்பில் எடுப்பது பத்து மடங்கு.// மனம் அதிக சிந்தனையில் மூழ்க,அடுத்த நிலை மண்ணுக்கு சக்தி சேரவில்லை.கல்லீரல் அதிர்ந்து (SHAKED AND GIVE) கொடுத்தல்.ஒன்று தாண்டி ஓடி கொடுத்தல்-கட்டுப்பாடு சுற்று.  LIV-4 : வரவெல்லாம் செலவானால் வாழும் வழி, சிறு வருமானம் -கைச் செலவு- FEEDING BOTTLE
              LIV-5,6,7 மனம் சார்ந்த,இடம் சார்ந்த வலிகள் தீர்வு.
               LIV-8: செலவு எகிறி வெப்பம் ஏறுதல்.சம்மணம் மூலம் மறு நிரப்பல்.பெரிய குழாய் திறப்பு.தாய் சிறுநீரக ஆற்றல் கேட்டு வாங்கும் இடம்.
              LIV-9,10,11,12,13-இடம் சார்ந்த சக்தி அளித்தல்
             LIV-14 ஓட்ட இறுதி-சக்தி ஒப்படைப்பு மகன் தீயிடம்.
      ஆசான்25/11/2017 பிரம்மம் 5 (படம்)

Friday, 24 November 2017

5 BODY ACU-பிரம்மம் 4

ஐந்து உடல் -பிரம்மம் 4-நோய் விளக்கம்,பாடல்.
    (1) தலைவலி: ஓய்வு,உறக்கம் இன்மை.இரவு 11-3 வரை சக்தி பெறாத பற்றாக் குறை.//கல்லீரல்-அடிமனம்-Storing base mind-Sub conscious mind-நினைவு அடுக்கில் கோளாறு-தீரா சிக்கல்//வேண்டாத நபர் வருகை/சினம்/
கல்லீரல் சமாளிக்க முடியாத நிலை
    -ஆகாயம்,கல்லீரல் அல்லவா! சரி செய்.
தீர்வு: ஓய்வு,உறக்கம்/மன ரீதியான சமாதானம்/முறையான பூத ஓட்டம் ஆக்ஸிஜன்/நுரை,நீர்ச் சத்து/நீரகம்,
சக்தி சேமிப்பு/கல்லீரல் என ஆக்குக.
(2) மூச்சுத் திணறல்:ஆக்ஸிஜன் வழித் தடங்கல்.தீர்வு:காற்றோட்ட வெளி, மூச்சுப் பயிற்சி.
(3)ஆண்மைக் குறைவு:சுற்றுப் புறம் சரியில்லை.இனிய சூழல் ஆக்கு.கல்லீரல் சக்திக்கு ஐம்பூதக் கனி மாதுளம் பழம்
வெளிப்புறத் தோல் மட்டும் குப்பைக்குப் போக, வெள்ளைக் குருத்து,மஞ்சள் படலம் உட்பட சாறெடுத்து உண்க./நாள்தோறும் பேரீச்சை தேனோடு உண்க.நடை அரை மணி.சம்மண அமர்கை முடிந்த போதெல்லாம்.
(4) இரத்த அழுத்தம்: கல் Liv 1 வலுவாகி,Liv2 மகனுக்கு அளித்து அதன் வழி மண்ணுக்குப் போகாத நிலையில்,தானே
 கிளை விரித்துத் தாவுதல்.அவசர நிலைக்கு சரி.நோய் அல்ல.Liv3 அக்கு பிரசர்.அக்கு ஊசி 2 நிமிடம். //வாழைப் பழம்,பேரீச்சை,திட்டமிட்ட செயல்,மன ஒழுங்கு.(திருக்குறள்,ஓஷோ தியானங்கள்)
(5)தொடை நரம்பு வாதம்-சயாட்டிகா-பிரம்ம உடல்,மன உடல் தீர்வு KIDNEY-LIVER-PERICARDIUM தீர்வு.
(6)  ஞாபக மறதி: கல்லீரல் நினைவுச் சுமையில் சில அடுக்குகள் மீள வில்லை.//ஆர்வமாய்ப் படி./இரவு படி;காலையில் நினைவு கூர்க//பேரீச்சை,வல்லாரை உண்க.
(7) கட்டிகள் (8) கண் எரிச்சல்-வெப்பம் கூடிய நிலை/ கல்லீரல் வலு ஏற்று.
(9)உடல் சோர்வு (10) மயக்கம்- கல்லீரல் சக்தி தேக்கம்/எலுமிச்சை சாறு அருந்துக.
(11) மஞ்சள் காமாலை-வெப்பம் உச்சம்-கல்லீரல் வலு
(12) கோமா-கல்லீரல் இயக்கம் தடை./ LU5-K1-LIV8 தொடர்ச்சி இயக்கம் ஊட்டுக.
பிரம்மம்-கல் பொதுத் தீர்வு-பாடல்
           நடையும் சம்மணமும்
                   நலமாக்கும் கல்லீரல்
              இடையேதான் கீரை சுரை
                        எலுமிச்சை நன்மை .............4
ஆசான்.24/11/2017.பிரம்மம் 4

பிரம்மம்-3 தொடர்ச்சி அட்டவணை

பிரம்ம முனை வலு-கல்லீரல் முனை வலு 

      தடுக்கும்/தீர்க்கும் நோய்கள் பட்டியல்.

ஆசான்.24/11/2017.

5 BODY ACU-பிரம்மம் 3

பிரம்மம்-3
  பின்னோக்குப் புள்ளிகள்-BACKWARD POINTS TWO
       புள்ளி1: குளிர்ச்சிப் புள்ளி #LIV-8 (படம்)
 இடம்:முழங்கால் மடிப்பு முனையில் மேல் அரை சுன்னில்.
-கல்லீரல் குளிர்ச்சி பெறும் இடம்.கல்லீரல் தனக்கான ஆற்றலை தாய் சிறுநீரகத்திடம் கேட்டு வாங்கும் இடம்.
K-1 கொடுத்தாலும், LIV-8 கேட்டு வாங்கினாலும்,LIV-1. பானை நிறையும்.உடல் சூடு குறையும்.மஞ்சள் காமாலை வரை தடுக்கப் படும்.இது தூண்ட சம்மணம் போதும்.
     புள்ளி2:பக்க வாட்டு வலிப் புள்ளி GB-43-காலின் நான்காம் மற்றும் ஐந்தாம் விரல் இடுக்கு.//இதுவும் GB-41 எனும் பித்தப்பை நீர் தன்வலு நிரப்பும்.
UB65 கொடுத்தாலும் GB-43 கேட்டு வாங்கினாலும் GB-41 பானை நிறையும்.இதற்கும் சம்மணம் போதும்.
      முன்னோக்கு,பின்னோக்கு நான்கு புள்ளிகளும் "பெரிய நீர் திறப்புக் குழாய்கள்" போல செயற்படும்.-BIG TAPS.
      பிரம்ம உடல் சரியாக இருந்தால் 'பச்சை மண்" போல
உடல்நல அடித்தளம் இருக்கும்.
 பிரம்மமுனை -கல்லீரல் முனைப்பு-வலு உணவுகள்
            K-1--கீரை; UB 65- சுரைக்காய்.
            LIV 8, GB 43-புளிப்பு/குளிர்ச்சி உணவுகள்: மோர்,வெள்ளரி,நெல்லிக்காய், எலுமிச்சை,நார்த்தம் பழம்,மாங்காய்
பிரம்ம முனை பழக்கங்கள்:
              K1-நடை; UB 65- சம்மணம்.
              LIV 8-சம்மணம்; GB 43-பாதத்தின் 4-ம்,5-ம் விரல் இடுக்கு அழுந்துமாறு காலணி அல்லது சம்மணம்.
- ஆசான் ஆ மதியழகன். பிரம்மம் 3. 24/11/2017.

Thursday, 23 November 2017

5 BODY ACU-பிரம்மம் 2

பிரம்ம உடல்- பிற ஒப்பீடு
  # கொடுப்பவர் --- வாங்குபவர்
    இறைவன் --- மனிதன்; மன்னன்/அரசு---மக்கள்;
பரமாத்மா-ஜீவாத்மா;கடவுள்---நீ;பதி---பசு;தாய்---மகன்;
PERMANENT BATTERY ---RECHARGEABLE BATTERY ;
கடல்---கடல் துளி; ஆதி சக்தி 100%---மூலதனம் 5%
     ஒலி அதிர்வு ஒ,ஓ---பிறப்பு ஒலிகள் அ,ஆ
 மெய்,முதுகு முழுவதும்---மெய் ,முன் மார்பு வலப்பக்கம்
மெல்லினம்"ஙஞணநமன"---வல்லினம் "கசடதபற"
 சிறுநீரகம்+நுரை கூட்டு---கல்லீரல்+நுரை கூட்டு
குளிர்ச்சி ---பிங்கலை சுவாசம் ,வலம் வெப்பம்.
 முன்னோக்கு புள்ளிகள் இரண்டு-FORWARD POINTS TWO.
 புள்ளி-1: கீரைப் புள்ளி K1-முன்னங்கால் மையம் என்பது
தோராயம்.படம் காண்க.கல்லீரலுக்கு ஆற்றல் சேரும்.கல்லீரல் தன் வலுப் பானை LIV1  உயிர் "அ" இதனால் முழுதும் நிரம்பும்.உணவு+பழக்கம்=உடல் நலம்.//உணவு,நீரும்,நீர்ச்சத்து உள்ள பொருள்களும் ஆற்றல் (சக்தி) தரும்.
நடைஎன்பது ஒரே நேரத்தில் தூண்டு வலு K1,தன் வலு LIV1
இரண்டும் தூண்டி பிரம்ம வலு சேர்க்கும்.(படம்-வரம் இரண்டுதான்).
புள்ளி 2:சுரைப் புள்ளி UB 65-கால் சுண்டு விரல் பாதத்தோடு இணையும் புள்ளிக்கு கீழ் உள்ள புள்ளி..சம்மணம் இட தரை தொடும். படம்.பித்தப்பைக்கு ஆற்றல் சேரும்.பித்தப்பை தன்வலுப் பானைGB 41-உயிர் "ஆ" இதனால் முழுதும் நிரம்பும்.நீர்க் குத்து,நீர்க் கடுப்பு குணமாகும்.பொதுவாக,கழிவுகள் வெளியேற பித்தநீர்சுரப்பு கிடைக்கும். உணவு+பழக்கம்=உடல் நலம்//உணவு,சுரைக்காய்.பழக்கம்,சம்மணம்.-ஆசான் -பிரம்மம்2///.23/11/2017

Muthal udal-பிரம்மம்-1

1.முதல் உடல்-பிரம்ம உடல்-படைப்பு உடல்.
       வேறு பெயர்கள்:ஆனந்தமயக் கோசம்-காரண உடல்.
     இது ஒரு புள்ளி அல்ல.ஒரு கோடு மேலும் ஒரு கோட்டின்
ஒரு முனையின் கூர்மை-எ.கா. அம்பும் முனையும்.அல்லது வேலும் முனையும்.
 1.1அக்குபங்சர்  உறவு விளக்கம்:
         உறுப்பு: சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை.
            KIDNEY TO LIVER
         துணை உறுப்பு:சிறுநீர்ப்பை முதல் பித்தநீர்ப்பை வரை
             URINAL BLADDER TO GALL BLADDER
           வண்ணம்: கருப்பு,வயலெட்,இன்டிகோ,நீலத்தில் இருந்து பச்சை.BLACK,VIOLET,INDIGO,BLUE TO GREEN.
          புலன்கள்: காதொலி கேட்டு கண் திரும்பல்
              காது/ஓசை---கண்/ஒளி
               ஒலிஅதிர்வுகள்---ஒளிக் காட்சிகள்
                        கதிர்வீச்சு---படங்கள்
           சுவை: உப்புச் சுவை---புளிப்புச் சுவை
                     உப்புக்கள்---அமினோ அமிலங்கள்
         திசுக்கள்: எலும்புகள் இயைபு ஆவது தசைநார்களோடு.
         குரல் பண்பு: முனகல்---கத்தல் ஆக மாறும்.
         உணர்ச்சி: நம்பிக்கை --- அருள் ஆக மாறும்(பக்தர்)
                               அச்சம் --- சினம் ஆக மாறும்.(நோயாளி)
சினம் தூண்டுபவ்ர்,அச்சம் தூண்டுபவர் நோயாளி ஆக்கிகள்.
சினம் ஏற்றாலும், அச்சம் உற்றாலும் தொடக்க நோயாளி!
       நீர்சுரப்பு: சிறுநீர்/விந்து/மாதப் போக்கு---ஆனந்தக்
                          கண்ணீர் அல்லது துக்கக் கண்ணீர்.
    மணம்: கெட்டுப் போன வாசனை---ஊசிப்போன வாசனை
                  ஒன்றின் இறப்பு ---மற்றொன்றின் பிறப்பு.
பருவம்: குளிர் காலம்(கார்த்திகை,மார்கழி)---இளவேனில்
(தை,மாசி) காலம்.//மார்கழி மாறி தை வரும்
வானிலை: குளிர் மாறி --- காற்றோட்டம் ஆகும்.
செயல்: ஓய்வு மாறி உறக்கம் ஆகும்//உள்ளியக்கம் சரியாதல் மாறி சேகரித்து அடுக்கல்-சக்தி சேமிப்பு.
நேர வரிசை:மதியம் 3-7 சிறுநீரகம் (ஆழ்மனம்-மரபு)
மாலை 7-11 (மேல் மனம்- சூழ்நிலை செய்திகள்) இறங்கும் இடம் கல்லீரல்.இதன் கையாளும் நேரம் இரவு 11 முதல் 1 மணி பித்தநீர்ப் பை.இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலே.இந்த 4 மணி நேர உறக்கம் நோய் முதல் தடுப்பு.
பிரம்ம உடல் பேணல்.சிறுநீரகத்திற்கு "மாலை முழுதும் விளையாட்டு"-ஒரே ஒரு நடை100 அடிகள்.மனதிற்கு " கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" உரையாகவும் இருக்கலாம். நல்ல எண்ணம் நிரம்பியதாக.உங்கள் விதி=சிறுநீரகம்4மணி+மேல் மனம் 4 மணி+அடிமன உறக்க நிலை 4 மணி.இதை மருத்துவர் தர முடியாது.சரி செய்ய உதவ முடியும்.நீங்களே தொடர வேண்டும்.
ஆசான்-23/11/2017 -பிரம்மம்-1
             
        

Wednesday, 22 November 2017

5 Body acu-Intro 4

ஐந்துத் தீர்மான வரிசை.
        கல்லீரல் முதல்த் தீர்மானம் ஆகிறது. இதே போல்,
(2) கொடுப்பவர் கல்லீரல்; பெறுபவர் பெரிகார்டியம்.
 இது #மனநிலை- "இரண்டாம் தீர்மானம்"
    [ இதயம் கேட்டு செய்பவர். Dr Alsears says. "Both mental pressure and blood pressure are same.But they sale two differant tablets.]
(3) கொடுப்பவர் பெரிகார்டியம்;பெறுபவர்  மண்பூதம்.
   இது #சுரப்பி நிலை-"மூன்றாம் தீர்மானம்"
 (4) கொடுப்பவர் மண்பூதம்.பெறுபவர் நுரையீரல்.
 இது #பரு உடல்நிலை-" நான்காம் தீர்மானம்"
 (5) கொடுப்பவர் நுரையீரல். பெறுபவர் சிறுநீரகம்.
 இது #சூக்கும உடல்நிலை/ஆரா -"ஐந்தாம் தீர்மானம்"
                  சுழற்சி முறையால் "ஐந்தாம் தீர்மானம்" ஆதித் தீர்மானம்" ஆகும். ஆக "மூச்சினுள் இருக்கிறது சூட்சுமம்"
இதுதான் உடல் நல வரிசை.
       #உடல்நலம் கெடுவது ஓர் உறுப்பில் அல்ல.அது அறிகுறி.// நோய் விளக்கம்: உயிர் சக்தி (Qi-Vital Oxygen)
ஐந்து உடல்நிலைகளில் (பூதங்களில்) பனிரெண்டு உறுப்புகளாக விரிவடைந்து இயங்குகிறது. இதில் ஏற்படும்
தடங்கலே நோய்."
       ##ஆக ஒரே ஒரு நோய்தான். "சக்தித் தடங்கல் "
ஐந்து உடல்களை வரிசையாக விரிவாக இனிக் காண்போம்.
---ஆசான் 22/11/2017. 

5 BODY ACU-INTRO3

 5 Body Acu-Intro -3
                     ஐந்து உடல் தோற்றம், நிலைப்பாடு.
       இந்த ஐந்து உடல்களும் இயல்பு சக்தி உடல்கள் [ NORMAL ENERGY BODIES ].கொடுப்பவர்,வாங்குபவர் அல்லது தாய்-மகன் உறவில் எழுகின்ற 'அலை' அல்லது அதிர்வின் தோற்றமே.
         (1) காரண உடல்/பிரம்ம உடல்/கரு உடல் கண்ணுக்குத்
தெரியாது.
         (2)குண உடல்/மன உடல்  கண்ணுக்குத் தெரியாது.
          (3)அஞ்சுக உடல்/சுரப்பி உடல் கண்ணுக்குத் தெரியாது.
           (4)தூல உடல்/பரு உடல் மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
           (5)சூக்கும உடல்/ஆரா கண்ணுக்குத் தெரியாது.ஆனால்
 உணர முடியும்.
"ஞானம்" இருந்தால் ஐந்தும் தெரியும். அக்குபங்சர் தெரிந்தால் புள்ளிகள் உடல் நிலையைப் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். எ.கா. K3 வலி-குதிகால் வலி- சிறுநீரகம்,வலிமை குன்றியதால்,ஊற்றுப் புள்ளி (SOURCE POINT) நாடி உள்ளது.
                ஐந்து உடல் நிலைப்பாடு.
       சிறுநீரகம் சரியாக இருந்தால்தான்,சிறுநீரக உறவில் உள்ள கல்லீரல் நன்றாக இருக்கும்.இது பிரம்ம நிலை.
        கனவில் இருப்பவனை "என்ன,பிரமையில் இருக்கிறாயா?" எனக் கேட்பது வழக்கம். கரு நிலை எனவும்
கூறலாம். (1) மரபுக் காரணங்களால் வரும் இயல்பான எண்ணங்கள் அருள் எண்ணம்/அரக்க எண்ணம்,பாலியல் ஈடுபாடு,மரபு செயல்கள் சிறுநீரகத்தில் இருந்து கிடைக்கும்.
                     (2) சூழ்நிலைக் காரணங்களினால் வரும், ஏற்படுத்தப் பட்ட 'நான்' எண்ணம்,குடும்பம்,வேலை,மொழி,இனம்,மதம்,அரசியல்,விருப்பு,வெறுப்பு,இவை கிடங்குபோல்
நிறைந்து இருக்கும்.ஆகாயம் அல்லவா!
            ஆனந்த மயக் கோசம்-பிரம்ம உடல்-பிரம்ம நிலைப்பாடு.ஒருவர் குணம் என்பது "எக்குடி பிறந்தார் என்பதும், எவ்வினம் சார்ந்தார் என்பதும்".சேர்ந்து தீர்மானிக்கும்.ஆக பிரம்ம உடல், குண உடலின் தாய்.
             எனவே,நோயாளியின் பின்னணி,பழக்க வழக்கங்கள்,மரபு உணவுகள்,இருப்பிடம்,வாழ்க்கை முறை எல்லாமும் "முதல்த் தீர்மானம்" செய்கின்றன.
-ஆசான். 22/11/2017.     

Tuesday, 21 November 2017

5 body acu/Table-1-Intro 2

அட்டவணை -1

ஆசான் ஆ மதியழகன்.

5 body acupuncture -One -Intro

           ஐந்து உடல் அக்குபங்சர் -ஆசான்.

             '0'-உடல்கள் முன்னுரை.

                    நாம் கண்ணால் பார்க்கிற உடலை தூல உடல்,பரு உடல், மற்றும் அன்னமயக் கோசம் என்றும் அழைக்கிறோம்.இங்கு கோசம் என்பது உரை ஆகும். இது

தொடர்பாக மேலும் தேடுகையில் தைத்திரிய உபநிடத்தில்

ஐந்து வகைக் கோசங்கள் குறிப்பிடப் பட்டிருந்தன.அவற்றை

 அக்குபங்சரோடு ஒப்பிட்டபோது ஐந்து கோசங்களும் அக்குபங்சரின் ஐந்து பூத எழுச்சிகளாக,ஆக்க சுற்றில் பொருந்துவதைக் கண்டேன்.அதன் விவரம்.

            (1) அன்னமயக் கோசம்- உணவில் வளர்ந்து அழிவது.

             (2) பிராணமயக் கோசம்- ஐந்து புலன்,உள்ளுறுப்பு 

இயக்கங்கள்.

               (3)மனோமயக் கோசம்-உணர்ச்சி,பல அடுக்கு, செயல்பாடுகள்.

               (4) விஞ்ஞானமயக் கோசம்-நன்று,தீது பகுத்து சுரப்பிகள் இயங்குதல்.

                (5)ஆனந்தமயக் கோசம்-எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அடுக்கு.மறைப்பானது,உணர்வது,அடைவது,இலட்சியம்.

                தைத்த்திரிய உபநிடதம் பிரம்மத்தைத் தேடுகிறது.

(1),(2),(3),(4)-ல் இல்லை.அதன் முடிவு: பிரம்மம் (படைப்பு சக்தி) ஆனந்தமயக் கோசத்திலேயே உள்ளது.

             'ஆனந்தம் பிரம்மனோ விய ஜானந்த்'

              "ஆனந்தமே பிரம்மம் என்று அறிக.

    இந்தக் கோசங்களைக் காணும்,காணா உடல்களாகக் கருதி

வரிசைப் படுத்தி தமிழ்ப் பெயருடன் கீழே.

 ----அட்டவணை-1--ஆசான் ஆ மதியழகன். 21/11/2017.