Monday, 30 November 2015

Tamil muraiyil acupuncture -2/3.1

3. மனம் வழி நோய் விளைச்சல்.

உயிர் ஆற்றல் :
 உயிருக்கான பிரபஞ்ச மனம் ஆகச் செயல்படும் நுரையின் ஆற்றலும் , உயிரின் ஆழ் மனமாகச் செயல் படும் தாய், தந்தை 50:50 ஆற்றல் பெற்ற சிறுநீரகமும் இணைந்து உயிர் ஆற்றலாகச் செயல்பட்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிர் சாரத்தை வழங்குகின்றன.

3.1 நோயில் மனதின் பங்கு 

மனதின் காணும் பகுதி உடல். உடலின்  காணாத  பகுதி மனம். உயிரும் உடலும் மனத்தால் முழுமையாக இணைக்கப் பட்டு இருக்கின்றன. 
உயிர் --> மனம்  --> உடல். 
 இயங்கும் உயிர் ஆற்றல்தான் பசியுணர்வு, பாலுணர்வு, பாச உணர்வு ,  விருப்ப உணர்வு களைத் 
 தோற்றுவிக்கிறது. இவற்றின் கட்டுப்பாடு அற்ற வெளிப்பாடுகளை , கற்பிக்கப் பட்ட லாப உணர்ச்சி (தான் ) அடிமனமும் , நாகரீகம் பார்க்கும் மேல் மனமும் (சூழ்நிலை ) முரண்பட்டு தடை செய்யும் போது இடையூறுகள் உடலில் பதிவு செய்யப் படுகின்றன. 
      இவையே உடலில் விளையும் சிறு நோய்கள்.
எ . கா. இருமல், தும்மல், சளி, மயக்கம், வாந்தி, மலச் சிக்கல், தலை வலி. ....
 இந்த சிறு நோய்கள் உடலின் ஓட்டப் பாதையில் அடையாளங்கள் ஏற் படுத்துகின்றன . அவை 
ஓட்டப் பாதை  இயக்கத்தைத் தடை செய்வதின் அளவைப்  பொறுத்து , நோய்கள் பல பரிமாணங்களை வெளிப்  படுத்துகின்றன. விளைவு , ஐம்பூத நோய்கள்.
   அடுத்து நோய் தீர்வு முறைகள்.
அன்புடன், ஆ. மதி  யழகன்..    

No comments:

Post a Comment