2. மன ஈரல் தத்துவம்.
உரு , அரு உரு, அரு விளக்கம் :
கல்லீரல், தீ ஈரல், மண்ணீரல், நுரையீரல், நீர் ஈரல் ஐவகை ஈரல்கள் ஐவகை பூதங்கள் ஆக உள்ளன. இவற்றை கல், தீ, மண், நுரை, நீர் எனச் சுருக்கமாகக் கூறுகிறோம். இவற்றை பொருளாக ' இதோ ' என்று சுட்டவோ , பிரித்து எடுத்தோ, காட்டி விடலாம். ஏனெனில் இவை பருப்பொருள்கள் . ' உரு ' எனக் கூறலாம். மனமே நுண்பொருள் . 'அரு ' எனக் கூறலாம்.
பெரி கார்டியம் மட்டுமே மேல் மனத்தின் ஒரு பகுதியாக உள்ள அருவத் தன்மையும் (ஏனெனில் பெரி கார்டியம் சுற்றி உள்ள மின் காந்த இடங்களும் சேர்ந்தவை ) பார்க்கத் தக்க 'ஈருறை நடுவில் திரவம் ' என உருவத் தன்மையும் கொண்டு "அரு உரு " வாக உள்ளது.
இறைவன் : இறைவன், உருவானவனாகத் தோன்றுவான் ; அருவானவனாக இருப்பான் ; சிவலிங்கம் போல அரு உரு வாகவும் இருப்பான் என்பது வழக்கு.
மனிதன் : ' மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ' மனிதனைப் பொறுத்தவரை
உரு வடிவுகள் : கல், தீ, மண், நுரை, நீர்.
அரு உரு : பெரி கார்டியம் (மேல் மனம்)
அரு : எவை? முழு மனம் என்பது எது, எப்படி, எவை?
2.1 மன ஈரல் ஐம் பிரிவு ஐம் பூதமே.
முதல் புத்தகத்தில் ,
பெரி கார்டியம் - மேல் மனம் ( consc ious mind )
கல்லீரல் - அடி மனம் ( sub conscious mind )
நீர் ஈரல் - ஆழ் மனம் (super conscious mind )
முதல் கட்டுரையின்படி ,
மண்ணீரல் - நுண் மனம் (minute conscious mind )
நுரையீரல் - பிரபஞ்ச மனம் ( universal conscious mind )
ஆக, இந்த பஞ்ச பூதங்கள் அனைத்துமே மன ஈரல் அல்லது முழு மனம் என்பதை மனிதனுள் நிறுவுகின்றன. பொதுவாக மனம் என்பது மேல் மனம் (PRESENT ) மட்டுமே. அதுவே நிகழ் காலத்தில் சிந்தனை நிகழ்த்துவதால். இது ஒரு பனிப் பாறை , நீரில் மூழ்கிக் கிடக்கும் போது நமக்கு பனிப் பாறை அளவு என்பது கண்ணுக்குத் தெரிவதே ஆகும்.
உண்மையில் மனம் மிக விரிவானது.
மனதை ஒரு பாம்பாகக் கருதினால் தலை , மேல் மனம் பெரி கார்டியம்.
கல், நீர், உடல்.
உடல் வாலாக நுரையீரல். சீறும் இடம் மண்.
அடுத்து மன உணர்வுகள் தாக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்...
No comments:
Post a Comment