Monday, 30 November 2015

Tamil muraiyil acupuncture -2/2.4

2.4 பிரபஞ்ச மனம் : மனிதன் , சித்தர் தத்துவம்.

 மனிதன் பிறக்கும் போது தலை உச்சி வழியாக உள் நுழையும் உயிர் காற்று, பிரபஞ்ச அறிவை உள் இறக்கி, ஐம்பூதச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. உயிர் இயக்கம் முழுவதும், 
                    (1) பிரபஞ்ச மன இணைப்பில் (LUNGS )
                (2) ஆழ் மனத் தொடர்பில் (KIDNEY ) 
                (3) ஒரு குறிப்பிட்ட பெயரில் (LIVER ) 
 ஒரு மனிதனிடத்தில் வெளிப் படுகிறது.
 ஒரு மனிதனைப் புகழ்வது என்பது, பிரபஞ்ச முதன்மையைப் புகழ்வதே ஆகும். ஒரு மனிதனை இகழ்வது என்பது தவறு. அவனிடம் இன்னும் பிரபஞ்சம் வெளிப் படவில்லை என்பதே ஆகும். 
நோக்குக :
              (1)    பெரியோரைப் புகழ்தலும் இலமே 
                         சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே 
                                    ---கணியன் பூங்குன்றனார் 
           (2) எல்லாப் புகழும் இறைவனுக்கே 
                         ----நபி நாயகம்.
         (3) எல்லோருமே புத்தர்கள் . சிலர் இப்போது  புத்தர்கள் ; பிறர் வருங்காலப் புத்தர்கள் .
                  ----ஓஷோ . 
 சித்தர்கள் (ஞானிகள் ): 
             பிரபஞ்ச மனம் ஆகிய நுரையீரலில் காற்றைக் கட்டுப் படுத்தி, இயக்கி, ஆழ்மனம் நீர் ஈரல் 
 இணைத்து, அடிமனக் கல்லீரலைத் தூய்மை செய்து, மேல் மனம் (பெரி கார்டியம் ) தீயின் பகுதியில் அன்பில் நிறைகின்றார் ஞானிகள். அவர்கட்கு வயிற்று  உபாதை மண் ஆகிய நுண் மனத்தால் நிகழாது, உணவின் தீமையால் நிகழலாம். முக்காலம்  உணர்வதால் அவர்கள் விரும்பின் அதை அனுமதிக்கலாம் , அல்லது ஏற்கலாம். புத்தரின் கடைசி காலத்தில் தவறான உணவு விரும்பி ஏற்றார். 

2.5 மன ஈரல் வடிவம்.

  எண்        பூதம்               மன வகை             குறிப்பு 
  4.    நுரை ஈரல் --------பிரபஞ்ச மனம்  --- தியானத்தில்  ஆழ்மன நுழைவு 
  5.  நீர் ஈரல்  -----------ஆழ்மனம்  -------ஆழ் கடல் நிகர்.
 1.  கல்  ஈரல்  -----------அடிமனம்  ----------உறக்கத்தில் ஆழ் மன நுழைவு. 
  2. தீ ஈரல்  -------------மேல் மனம்  ----------நீங்கள் இப்போது  இங்கே. 
  3.  மண் ஈரல்  ----------நுண் மனம்  --------விளைச்சல் தெரியும் இடம் 
 4 -->5--> 1--> 2--> 3  வரை கட்டுப்பாடு சித்தரிடம் உண்டு.
1, 2, 3 மனிதனிடம் உண்டு. ஒரு நாடகப் பாத்திரம் போன்ற  வாழ்வு. 
கருத்துப் படம் :   மனதில் தலை உடைய நாகம், நுரை எனும் வால் அசைவால்  இயங்குகிறது.
 எல்லா நிறங்களையும் உள்ளே அடக்கியது வெள்ளை நிறம். எல்லா வற்றையும் தன் அகத்தே கொண்டது பிரபஞ்சம் ஆகிய நுரையீரல்.
உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு , உயிர் மர்மம் எல்லாம் நுரையீரல் கொண்டு உள்ளது.
 அடுத்து மனம் வழி நோய் விளைச்சல்.
அன்புடன், ஆ, மதி  யழகன். ...

No comments:

Post a Comment