2.4 பிரபஞ்ச மனம் : மனிதன் , சித்தர் தத்துவம்.
மனிதன் பிறக்கும் போது தலை உச்சி வழியாக உள் நுழையும் உயிர் காற்று, பிரபஞ்ச அறிவை உள் இறக்கி, ஐம்பூதச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. உயிர் இயக்கம் முழுவதும்,
(1) பிரபஞ்ச மன இணைப்பில் (LUNGS )
(2) ஆழ் மனத் தொடர்பில் (KIDNEY )
(3) ஒரு குறிப்பிட்ட பெயரில் (LIVER )
ஒரு மனிதனிடத்தில் வெளிப் படுகிறது.
ஒரு மனிதனைப் புகழ்வது என்பது, பிரபஞ்ச முதன்மையைப் புகழ்வதே ஆகும். ஒரு மனிதனை இகழ்வது என்பது தவறு. அவனிடம் இன்னும் பிரபஞ்சம் வெளிப் படவில்லை என்பதே ஆகும்.
நோக்குக :
(1) பெரியோரைப் புகழ்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
---கணியன் பூங்குன்றனார்
(2) எல்லாப் புகழும் இறைவனுக்கே
----நபி நாயகம்.
(3) எல்லோருமே புத்தர்கள் . சிலர் இப்போது புத்தர்கள் ; பிறர் வருங்காலப் புத்தர்கள் .
----ஓஷோ .
சித்தர்கள் (ஞானிகள் ):
பிரபஞ்ச மனம் ஆகிய நுரையீரலில் காற்றைக் கட்டுப் படுத்தி, இயக்கி, ஆழ்மனம் நீர் ஈரல்
இணைத்து, அடிமனக் கல்லீரலைத் தூய்மை செய்து, மேல் மனம் (பெரி கார்டியம் ) தீயின் பகுதியில் அன்பில் நிறைகின்றார் ஞானிகள். அவர்கட்கு வயிற்று உபாதை மண் ஆகிய நுண் மனத்தால் நிகழாது, உணவின் தீமையால் நிகழலாம். முக்காலம் உணர்வதால் அவர்கள் விரும்பின் அதை அனுமதிக்கலாம் , அல்லது ஏற்கலாம். புத்தரின் கடைசி காலத்தில் தவறான உணவு விரும்பி ஏற்றார்.
2.5 மன ஈரல் வடிவம்.
எண் பூதம் மன வகை குறிப்பு
4. நுரை ஈரல் --------பிரபஞ்ச மனம் --- தியானத்தில் ஆழ்மன நுழைவு
5. நீர் ஈரல் -----------ஆழ்மனம் -------ஆழ் கடல் நிகர்.
1. கல் ஈரல் -----------அடிமனம் ----------உறக்கத்தில் ஆழ் மன நுழைவு.
2. தீ ஈரல் -------------மேல் மனம் ----------நீங்கள் இப்போது இங்கே.
3. மண் ஈரல் ----------நுண் மனம் --------விளைச்சல் தெரியும் இடம்
4 -->5--> 1--> 2--> 3 வரை கட்டுப்பாடு சித்தரிடம் உண்டு.
1, 2, 3 மனிதனிடம் உண்டு. ஒரு நாடகப் பாத்திரம் போன்ற வாழ்வு.
கருத்துப் படம் : மனதில் தலை உடைய நாகம், நுரை எனும் வால் அசைவால் இயங்குகிறது.
எல்லா நிறங்களையும் உள்ளே அடக்கியது வெள்ளை நிறம். எல்லா வற்றையும் தன் அகத்தே கொண்டது பிரபஞ்சம் ஆகிய நுரையீரல்.
உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு , உயிர் மர்மம் எல்லாம் நுரையீரல் கொண்டு உள்ளது.
அடுத்து மனம் வழி நோய் விளைச்சல்.
அன்புடன், ஆ, மதி யழகன். ...
No comments:
Post a Comment