1.3 ஆழ் மனம் (சிறுநீரகம் )
சிறுநீரகம் ஆழ் மனமாகச் செயல்பட்டு தாய் தந்தையின் 50:50 பண்புகளை விளைவிக்கிறது எனக் கூறி இருந்தோம் . இதுவே காலங்களால் முந்திய ஆதி செல்லின் தொடர்ச்சி உறுப்பு எனவும் கூறி இருந்தோம். பல், எலும்பு , உடல் வளர்ச்சியோடு ஆழ் மன விருப்பங்களையும் நிகழ்த்துவதும் இதுவே . சிறுநீரக ஓட்டத்தின் தொடக்கப் புள்ளி K 1 . இது முன்னங்கால் மையத்தில் உள்ளது . இதற்கு சமமான கையில் உள்ள புள்ளி P 8 . இது மனதின் (மேல் மனம் ) வலுவான புள்ளி. ஆடு , மாடு , பொதுவாக மிருகங்கள் நான்கு கால்கள் ஊன்றி நடக்கும் போது மேல் மனம் , ஆழ் மனத்தோடு நேரடியாக இணைக்கப் படுகிறது. மரங்கள் நேரடியாக வேரோடு இணைக்கப் படுகின்றன . மரங்களும், மிருகங்களும் தாம் உண்மையில் பிரபஞ்சத் தியானத்தில் இருக்கின்றன என ஞானிகள் கூறுவர் . மனிதன் இரு கால்கள் ஊன்றி நிற்பதால் கண் வழிக் கல்லீரல் இயங்கி ஆழ் மனத்தோடு இணைகிறது . கல்லீரல் எழுப்பிய மேல் மனமோ பழைய அனுபவம் அல்லது எதிர் கால ஆசை அலைகளில் அசை போட்டு நிற்கிறது. மேல் மனம் வெறுமையில் இருந்தால்தான் அடிமனம் அறிந்து தெளிந்து ஆழ் மனம் புகல் முடியும் . பல அற்புதங்கள் நிகழ்த்த முடியும். இன்றேல் கனவு மட்டுமே நினைவுகள் இணைத்து காட்சிகள் எழுப்பும் .
அடுத்து சிறுநீரகத்தின் இறுதிப் புள்ளி K 27 காலர் எலும்பின் கீழ் முடிகிறது. இதன் அருகே , மார்புப் பகுதியின் முதல், இரண்டாவது விலா எலும்புகள் இடையேதான் நுரையீரல் தொடக்கப் புள்ளி Lu 1 அமைகிறது என்பதைக் கவனிக்கவும். ஆக நுரையீரல் எனும் பிரபஞ்ச மனம் அடுத்து இணைகிறது . மேலும் சிறுநீரகப் பை ஓட்டத் தொடக்கம் U B 1 கண்ணின் உட்புற இமை ஓரம் மூக்கு ஒட்டி அமைகிறது. சிறு நீரகச் செய்தி நுரையீரல் எனும் பிரபஞ்ச மனதிற்கு செல்கிறது . FORWARD CALL SENT . சிறுநீர்ப் பையின் இறுதிப் புள்ளி U B 67 . இது காலின் சுண்டு விரல் வெளி நகக் கண் அருகில் உள்ளது . காலின் சுண்டு விரல் என்பது சிறுநீரகத்தை சுண்டும் விரல் ஆகும் . மேலும் அது நீர்ப் பையின் நுரையீரல் புள்ளி ஆகும். SECOND CONTACT . அடுத்து பிரபஞ்ச மனம் .
அன்புடன் ஆ . மதி யழகன் ...
No comments:
Post a Comment