Friday, 27 November 2015

Tamil muraiyil acupuncture-2/1.5

1.5 நுண் மனம் (மண் தொகுதி )

வயிற்றின் செரிமானம் , மனதின் சோகம் , சினம், பெருமை, கவலை, வெறுப்பு, துக்கம், மகிழ்ச்சிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது . அதனால் மண்ணீரல் , கணைய சுரப்புகள் பாதிப்பு உறுகின்றன . எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் மண் பூதம் நுண் மனம். 
      மண் பூதம் , பெண்ணின் கருப்பை கட்டுமானங்களையும் , மாத விலக்கையும் நிருவாகம் செய்வதில் உள்ள பங்கினைக் கருதினால் இதைப் பெண் மனம் எனவும் சிறப்பாகக் கூறலாம். பெண்கள் வெட்கம் வரும்போது கால் கட்டை விரலைக் கொண்டு மணலில் கீறுவர் . அங்கு Sp 1
மண் தொடக்கப் புள்ளி உள்ளது. இதன் முடிவுப் புள்ளி Sp 21 விலாப் பகுதியில் உள்ளது, விலாப் பகுதியில் கிச்சு கிச்சு செய்யக் கூசும். மண்ணீரல் ஓட்டத்தில்  மனதின் உணர்வுகளும் பெண்ணின்  உணர்வுகளும் பிரதிபலிப்பதைக் காணுங்கள்.
    Sp 1 - அஜீரணத் தலை வலி ; Sp 2 - சர்க்கரை நோய் விளைவு ; Sp 3 - ஹீமோக்ளோபின் பாதிப்பு , இரத்த சோகை ; Sp 6 - மாத விடாய் பாதிப்பு ; Sp 9 - செரிமானக் கோளாறால் மூட்டு வலி ; மிகவும் முக்கியமான புள்ளி Sp 5 - அனைத்து அடைப்பும் நீக்கும் புள்ளி. மன அடைப்பு உடல் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் இடம், Sp 5 - மண் நுரை (எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9 இதுவும் வேலை செய்யா விட்டால் இரத்தக் குழாய் அடைப்புகள் . தூண்ட சரியாகும்.)
     மண்ணின் துணை உறுப்பு இரைப்பை . இதன் தொடக்கம் St 1 - கண் இரைப்பையின் மையப் பகுதியில் , கரு விழி நேர் கீழே ஆரம்பம், கண்ணீர்த் துளிகள் இறங்கும்  தொடக்கக் கோட்டுப் புள்ளி . அன்பு என்பது மனதின் மிக நுண்ணிய உணர்வு. இது பாதிக்கப் படும்போது கண்ணில் கண்ணீர் பெருகுகிறது. இதையே திருவள்ளுவரும் ,
 ' அன்பிற்கும்  உண்டோ  அடைக்கும் தாழ்    ஆர்வலர் 
   புன் கணீர்   பூசல் தரும்.' --71
 அன்பு போல் மற்றும் அவலம், மகிழ்ச்சி, போன்ற தீவிர உணர்வுகளின் போதும் கண்ணீர் வருவது நுண்ணிய உணர்வுகள் மனதை பாதிப்பதையே அதனால் வயிறு (stomach) கெடுவதையே  காட்டு கின்றன. 
   உலகில்  பிறந்து  வந்த போது வயிறு வெறும் பலூன்பை . எல்லா நோயும் இங்குதான் (வயிற்றில் ) தொடங்கு கிறது. மண் பூத இருப்பு மைய பூதம். [1-2-3-4-5] 
   மண் பூதம் நோய்க்கும் முதல், தீர்வுக்கும்  முதல்.
 நீர் பூதம் உயிர் இருக்கவும் முதல், போகவும் முதல்.
 கல்லீரல் பூதம் உடல் கட்டுமானம் ஏற்றவும் முதல், குறைக்கவும் முதல்.
 தீ பூதம் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல் 
 நுரை பூதம் உடல், மனம், உயிர் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல்...
ஆகப் பஞ்ச பூதங்களே மன நல பாதிப்பு அடைந்து உடலில் விளைவு காட்டுகின்றன. உடலில் விளைந்த பிறகு உணர்விலும் காட்டுகின்றன. ஆகப் பஞ்ச பூதப் புள்ளிகள் (அக்குப் புள்ளிகள் ) உடலையும் அசைக்கும்; மனதையும் அசைக்கும்.
மன ஓட்டம் பஞ்ச பூத ஓட்டமே!
அன்புடன் ஆ. மதி யழகன்.

No comments:

Post a Comment