Thursday, 26 November 2015

tamil muraiyil acupuncture-2

தமிழ் முறையில் அக்கு பங் சர் -2

ஐம் பூத நோய் விளக்கம் [மனப் புள்ளிகள் , நான்கு சுற்றுக்கள் ]

               1.மனதின் ஓட்டங்கள் .

உடல் நலம் கருதுகிற துறை 'HEALTH DEPARTMENT ' என அழைத்தாலும் , நலம் (HEALTH ), நல வாழ்வு (HEALTH LIFE ) என ப் பொதுச் சொல் பயன்பாட்டால் 'நலத் துறை ' எனக் குறிப்பிடுவதே  சரி . நலத்தை உடல்நலம் , மனநலம் என்று இரண்டு வகையாகப் பிரித்தாலும் , அவை ஒன்றுக் கொன்று இணைந்து செல்பவை . உயிரியக்கம்  என்பது ஒரு தொடர் வண்டி என்று எடுத்துக் கொண்டால் , அதன் இரண்டு தண்டவாளங்கள் உடலும் மனமும் .இது ஓர் ஒப்புமையே . நலம் பெற இரண்டும் கவனிக்கப் பட வேண்டியவை . 
        உடலின் ஐம்பூத ஓட்டங்களை , மின்காந்த ஓட்டங்கள் எனவும் கூறலாம் . இவை உடலின் மேற் பகுதியில் ஆராவை ஓட்டிச் செல்லுகின்றன . இவை உள்ளும் வெளியுமாக விளிம்பு ஒட்டிச் செல்வதனால் உடலின் ஓட்டங்களையே மனதின் ஓட்டங்களாக க் கருதலாம் . இது நலம்  வேண்டும்  பாதையில் முக்கிய முடிவு.

        பாடல் :

                    ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து 
                        உடலில் உள்ள பூதங்களும் ஐந்து 
                      ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து 
                         உள்மனதின் பூதங்களும் ஐந்து -------------4
                      
                       இதயத்தின் பெரி கார்டியம்  மேல்மனம் 
                            இதன்பின் கல்லீரல் அடிமனம் 
                       இதயத்தை அட்ரீனளினால் இயக்கம் 
                              இரண்டு  நீரகமும்  ஆழ்மனம் ------------8

                        ஆழ்மனம்  இயக்கும்  அற்புதத்தை 
                               அழகாய்ச் செய்வன நுரையீரல் 
                         இழுக்கும் மூச்சு ஒவ் வொன்றிலும் 
                             இருக்கும் பிரபஞ்ச மனம்தானே ------------12

                          உள்ளத்தில் அச்சமா சினமா 
                             ஒரு பெருமையா ஒரு கவலையா 
                            உள்ளம் முடக்கும் துக்கமா 
                                ஒடிவது மண் எனும்  நுண் மனமே !-----------16

                         பெண்ணுக்கு இருக்கும்  பேராற்றல் 
                                பிள்ளையாய் ஆக்கும் பெருந்திறன் 
                          மண்ணுக்குப் பின்னே இவள்தானே !
                               நுண் மனம் இவளுக்கு பெண்மனமே !-----------20

    அன்புடன்  ஆ. மதி யழகன் . தொடரும்.

No comments:

Post a Comment