தமிழ் முறையில் அக்கு பங் சர் -2
ஐம் பூத நோய் விளக்கம் [மனப் புள்ளிகள் , நான்கு சுற்றுக்கள் ]
1.மனதின் ஓட்டங்கள் .
உடல் நலம் கருதுகிற துறை 'HEALTH DEPARTMENT ' என அழைத்தாலும் , நலம் (HEALTH ), நல வாழ்வு (HEALTH LIFE ) என ப் பொதுச் சொல் பயன்பாட்டால் 'நலத் துறை ' எனக் குறிப்பிடுவதே சரி . நலத்தை உடல்நலம் , மனநலம் என்று இரண்டு வகையாகப் பிரித்தாலும் , அவை ஒன்றுக் கொன்று இணைந்து செல்பவை . உயிரியக்கம் என்பது ஒரு தொடர் வண்டி என்று எடுத்துக் கொண்டால் , அதன் இரண்டு தண்டவாளங்கள் உடலும் மனமும் .இது ஓர் ஒப்புமையே . நலம் பெற இரண்டும் கவனிக்கப் பட வேண்டியவை .
உடலின் ஐம்பூத ஓட்டங்களை , மின்காந்த ஓட்டங்கள் எனவும் கூறலாம் . இவை உடலின் மேற் பகுதியில் ஆராவை ஓட்டிச் செல்லுகின்றன . இவை உள்ளும் வெளியுமாக விளிம்பு ஒட்டிச் செல்வதனால் உடலின் ஓட்டங்களையே மனதின் ஓட்டங்களாக க் கருதலாம் . இது நலம் வேண்டும் பாதையில் முக்கிய முடிவு.
பாடல் :
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
உடலில் உள்ள பூதங்களும் ஐந்து
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
உள்மனதின் பூதங்களும் ஐந்து -------------4
இதயத்தின் பெரி கார்டியம் மேல்மனம்
இதன்பின் கல்லீரல் அடிமனம்
இதயத்தை அட்ரீனளினால் இயக்கம்
இரண்டு நீரகமும் ஆழ்மனம் ------------8
ஆழ்மனம் இயக்கும் அற்புதத்தை
அழகாய்ச் செய்வன நுரையீரல்
இழுக்கும் மூச்சு ஒவ் வொன்றிலும்
இருக்கும் பிரபஞ்ச மனம்தானே ------------12
உள்ளத்தில் அச்சமா சினமா
ஒரு பெருமையா ஒரு கவலையா
உள்ளம் முடக்கும் துக்கமா
ஒடிவது மண் எனும் நுண் மனமே !-----------16
பெண்ணுக்கு இருக்கும் பேராற்றல்
பிள்ளையாய் ஆக்கும் பெருந்திறன்
மண்ணுக்குப் பின்னே இவள்தானே !
நுண் மனம் இவளுக்கு பெண்மனமே !-----------20
அன்புடன் ஆ. மதி யழகன் . தொடரும்.
No comments:
Post a Comment