Sunday, 29 November 2015

Tamil muraiyil acupuncture -2/2.3

2.3 மன இயக்கம் - நனவும், கனவும்.

மேல் மனம் , அடிமனம் :
    குடும்பம், சமுகம் இவை 'மேல் மனதை ' இப்படித்தான் எனத் தீர்மானிக் கின்றன . குழந்தைப் 
பருவத்தில் இருந்து பார்த்து, கேட்டு, நுகர்ந்த அனுபவங்கள் 'அடிமனத்தைத் ' தீர்மானிக் கின்றன.
அடி மனமே 'நான் ' எனும் பாத்திரத்தை ஏற்றுச் செயல் புரிகிறது.
    மேல் மனம், அடிமனம் இரண்டுமே கர்வம் அல்லது அகந்தையை உள்ளாகவும்,  அறம் , தர்மம் 
என மேலாகவும் கொண்டு உள்ளன.

கனவில் ஆழ்மனம் :

      அடிமனம் (கல்லீரல் ) பல அடுக்குகளை உடையது. கால வாரியாகப் பதிவுகள் / படிவுகள் உண்டு. மேல் மனம்  அடி மனத்தில்  படிந்தவாறு உள்ளது. அடி மனம் கனவு காணும் போது , 
ஆழ் மனத்தில் எண்ணங்கள் இறங்குகின்றன.
  நிலை 1: தேர்வுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு த் தவறாமல் சென்றவன், கனவில் தவற விடுவதாய்க்  கண்டு  பதறுகிறான். எனவே வெற்றிகள் கனவில் மாறாகத் தோல்வியில் 
முடிகின்றன. என்றோத் தோன்றிய 'அச்சம் ' என்ற உணர்வு ஆழ்  மனத்தில் ' முறிக்கப்பட்டு  ' 
 சம நிலை எய்துகிறது. கதை, திரைப் பட அச்சங்கள் நேரடி அனுபவம் போல ஏற்பட்டு கனவில்  இருந்து தீடீர் என்று விழிப்போம். ' பாம்பு ' என்ற சொல் மேல் மனதில் பதியும் என்று இரவில்  
 சிறுவர்கள் உச்சரிப்பது தடை செய்யப் பட்டு உள்ளது.
 நிலை 2: ' ஐஸ் கிரீம் ' உண்ண வேண்டும் எனும் நிறைவேறாத மேல் மன ஆசை, சில நாட்களிலேயே கனவில் உண்பது போல காட்சி உண்டாகிறது. ஆக என்றோ தோன்றிய நிறைவேறாத ஆசை அல்லது விருப்பம் திடீரெனக் கனவில் நிறைவேறுவதன் மூலம் ஆழ் மனம்  ' ஆசையை ' முறித்து உணர்வுச் சமநிலை எய்துகிறது.
 முடிவு : ஆழ்மனம், சுனாமி போல், பூகம்பம் போல் தன்னிடத்து சரி (+) , தவறு (-) என்பதை அண்ட விடுவதில்லை. அது தேவை நிறைவேறச் செயல் படுகிறது. சரி, தவறு பாகுபாடு இல்லை. 
 அக்கு பங் சர் பார்வை : மனிதனின் மனம் என்பது மேல் மனம் (பெரி கார்டியம் ) , அடிமனம் (கல்லீரல்) எனும் இரண்டு வட்டங்களுள் பகலில் சுற்றி வருகிறது. (பழைய கோபதாபங்கள் 
 திடீர் என வெளிப் படுவது இதனால்தான். ) இரவு, உறக்கத்தின் போது ஆழ் மனம் (சிறுநீரகம்) 
 அதை உள் வாங்கி (+), (-) இன்றி முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுகிறது. தீவிர உணர்வாகிய பயம் அல்லது ஆசையே நிறைவேறுகிறது,
பயன் படுத்தும் விதம் : பயம் அற்று , அகக் காட்ச்யாய்  விருப்பத்தை [ நல்ல முடிவுகள் உள்ளதுதான்  நிலைத்த புகழ் தரும். ]  எதுவானாலும் மேல் மனத்தில் விதைக்க, அறுவடை ஆவதாகக்  காணின் அது நனவில் கை கூடி வரும்.  இதை உறங்கு முன் செய்ய வேண்டும். 
          எ . கா . என் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது எனக் கூறி P 9 மனம் கல் என்ற புள்ளியை (நடுவிரல்  முனை ) அழுத்தி மூச்சு எடுத்து விடுவதை, மூன்று முறை செய்ய வேண்டும். 
  நனவில் உள்ள  மேல்மனம், அடிமனம் இவையே உங்கள் குணம், உடல்நலன் இவற்றைத்  தீர்மானம் செய்கின்றன. 
  நல்ல உளநலம் --> நல்ல உடல்நலம் --> நல்ல உள நலம்.  
அன்புடன்,  ஆ. மதி  யழகன் .  

No comments:

Post a Comment