Monday, 21 November 2016

தமிழ் அக்கு பா.தி. முகவுரை/ நன்றியுரை.

நன்றியுரை:

இந்நூல் சிறப்புற வெளிவரத் துணைபுரிந்து, ஆக்கமும்,ஊக்கமும் தந்து துணை நின்ற மனைவி
வளர்மதிக்கும் , வரைகலைப் படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளையநிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த மறைந்த திருவாரூர் .த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும் ,நட்பில் உள்ள இயற்றமிழ்ப் பயிற்றகம்,தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் நண்பர்களுக்கும், அக்குபங்சர் நண்பர்களுக்கும், குடவாசல்,திருவாரூர்,தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும்,முந்தைய அக்குபங்சர் நூல்களுக்கு உளங்கனிந்த பாராட்டுக்களை அலைபேசியிலும், முகநூலிலும்,மின் அஞ்சலிலும், உங்கள் காணொலி (You tube) மூலமும் தெரிவித்து வரும் நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
             இந்நூல் கருக்கொள்ள உதவிய தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த.ச.குறளேந்திக்கும்,இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் இளையநம்பிக்கும்,பிற பயிற்றக நண்பர்களுக்கும் எனது நன்றி.
           தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்காகவும்,கண்ணகி வழிபாடு பெருகவும், தன் வாழ்வையே அறப்பணியாகக் கொண்ட , நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய 'பிளாக் ஹோல்' நிறுவனத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்ததாகும்.
அன்புடன்,
ஆசான்  ஆ மதியழகன்.
----------------தமிழ் வாழ்க --------------

No comments:

Post a Comment