Wednesday, 27 April 2016

tha.Ilakkia kazhakam-katturai-thodarchi-1

ஐந்தும், பன்னிரெண்டும் :

வர்மமாக இருந்தாலும், ஊசி மருத்துவம் (அக்கு பங் சர் ) என இருந்தாலும், அவை உடலின் ஐம்பூத இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் ஐந்து பூதப் பண்புகளை அட்டவணை வடிவில் பூதத்தின் வண்ணம், முதல் உறுப்பு, துணை உறுப்பு, புலன்கள், சுவை, கட்டுப் படுத்தும் திசுக்கள், குரல் பண்பு, உணர்ச்சி, மனத் தீர்வு, நீர் சுரப்பு, உடல் மனம், பருவ காலம், வானிலை, உடல் நோய் எதிர்ப்பு சக்திக்குரிய தீர்வு, இயங்கும் நேரம் , சார்ந்த நோய்கள் இவற்றை எடுத்துக் கூறி, பிண்ட இயக்கம், அண்ட இயக்கம் அனைத்துமே இவ்வடிப்படையில் நடக்கின்றன எனக் கூறி அட்டவணை விளக்கம் தந்தேன். 
              வீட்டுக்கு வந்தவுடன் ஐந்து பூதங்களில் தமிழ் ஏன் அடங்கக் கூடாது என நினைத்து மனக் கண்ணில் இயற்றமிழ் பயிற்றக  செயலசான் இளைய நம்பியை அழைத்து உரையாடினேன்.
ஆ.மதி யழகன் : தமிழ் உயிர் எழுத்து 12. உயிர் எனக் கையாளுதல் உள்ளதால் 5-ந்தில் அடங்குமா ?
இளைய நம்பி : கூட்டெழுத்து ஐ, ஔ விட்டாலும்  மீதி பத்து உள்ளதே.
ஆ.மதி யழகன் : ஐந்து × இரண்டு = பத்து அல்லவா ?
இளைய நம்பி : இரண்டாவது ஐந்து என்ன ?
ஆ.மதியழகன் : முதல் ஐந்து பூதங்கள் - குறில் - அ , இ , உ , எ , ஒ . அவை நீட்டொலிக்க  அவற்றின் துணை உறுப்புக்கள் இயக்கம் பெறும் . ஆ, ஈ , ஊ, ஏ, ஓ .
இளைய நம்பி : அப்பொழுது ஐ, ஔ  என்னவாகும் ?
ஆ.மதியழகன் : அவை பூதங்களுள் சேர்ந்தும் சேராமலும் நடுவில் உள்ளவை . நல்லது. எனக்கு   ஒரு வரைபடம் கிடைத்து விட்டது.
       தமிழின் உயிர் உறுப்புகள் வரைபடத்துடன் எனது நூல் " தமிழ் முறையில் அக்கு பங் சர் ", பிளாக் ஹோல் பப்ளிகேஷன் வெளியீட்டில் வந்துள்ளது. காண்க யூ டியுப் : "tamil muraiyil acupuncture "

பன்னிரண்டு உயிர் விளக்கம் :

தொடரும்.

No comments:

Post a Comment