Friday, 8 April 2016

Tamil acupuncture vison to kural-1to8

தமிழ் அக்கு பங் சர்  பார்வையில்  திருக்குறள் .

அறத்துப்பால் : 38 தலைப்புகளில் பாயிரம் நான்கு விளக்கம் 

(1) கடவுள் வாழ்த்து : ஆதி பகவன் என்கிற பெண் சக்தி, ஆண் சக்தி இணைந்த சக்தி உலக முதன்மை. அகரம் முதன்மை எழுத்துக்கு  என்பது எடுத்துக்காட்டு.
அக்கு ப் பார்வை : யின் - யாங் இயக்கம் முதன்மை யானது. பூத சுழற்சியில் ஆகாய பூதம் அல்லது கல்லீரல் பூத ஒலி  'அ ' ஆகும்.
(2) வான் சிறப்பு : நீர் ஒழுங்கே வாழ்வு ஒழுங்கு அண்டத்திலும், பிண்டத்திலும் (உலகத்திற்கும் மக்களுக்கும் )
அக்குப் பார்வை : நீர் ( மனிதனில் சிறுநீரகம் ) இயக்கம் , அடுத்து சிறப்பு.
(3) நீத்தார் பெருமை : தவ வாழ்வுப் பெரியோர் மறை மொழி பெருமையானது.
அக்குப் பார்வை : இருமையும் (யின் - யாங் ) ஐம்பூத ( கல், தீ, மண், நுரை, நீர் ) ஆற்றல் அறிந்து பக்குவப் பட்டவர்களை ப் போற்றி பெருமைப் படுத்து. இது மூன்றாவது.
(4) அறன் வலியுறுத்தல் : மனத்தின் தூய்மை அறம் ஆகும்.
அக்குப் பார்வை : தீ பூதத்தின் , மனத் தெளிவே இயல்பான  ஐம்பூத சுழற்சிக்கு வலியுறுத்தப் படும்.

38 தலைப்புகளில் இல்லறவியல் இருபது விளக்கம் 

(5) இல் வாழ்க்கை : குடும்பமாய் வாழ்வது போல் வேறு சிறந்த அறம் இல்லை. அதனால் இல்லறம் . 
அக்குப் பார்வை : நுரையீரல் பூத நிறம் வெள்ளை. அதனால்தான் மற்ற பூதங்கள் வாழ்கின்றன.
குடும்பம் இருப்பதனால்தான் தனி மனிதன் , சமுகம், மதம், அரசியல், இனம் எல்லாம். வெள்ளையில் எல்லா வண்ணமும் அடக்கம். குடும்ப வாழ்வில் எல்லாமும் அடக்கம்.
(6) வாழ்க்கைத் துணைநலம் : குடும்பத் தலைவன் வெளியுலகப் பணிகளுக்கு தேவையானவனும், வீட்டுக்கு முதன்மையும் ஆனவன். இல்லறப் பொறுப்பு ஏற்கும் இல்லத்தரசிக்கு தலைவன்,  குழந்தைகள், குடும்பப் பெயர் காப்பாற்ற நலன்கள் தேவை.
அக்குப் பார்வை : பெண் யின் வகை. அவள் இயக்கம்   உள்ளார்ந்தது. இல்லறமே சிறப்பு (தமிழர் மரபு )
(7) மக்கட் பேறு : நன்மக்கள் பெற்று வளர்த்தல்  பெரும் பேறு 
அக்குப் பார்வை : ஒருபூதம் ஊட்டி வளர்த்த அடுத்த பூதம், திரும்பும் நிலையில் முதல் பூதம் காப்பாற்றப் படும்.. மேம்பட்ட வாழ்வும், ஒழுங்கும் கிடைக்கும்.
(8) அன்புடைமை : யாவருக்கும் எப்போதும் உரியது ஆதல்  அன்புடைமை.
அக்குப் பார்வை : ஒருவரின் அன்புத் தன்மை மரபு சார்ந்தது என நிருபிக்கப் பட்டு உள்ளது. மரபு சிறுநீரகப் பண்பு. அன்பின் குழவி அருள் கல்லீரலுக்கு எளிதாகும்.
தொடரும் --அன்புடன், ஆ. மதி  யழகன்.  

No comments:

Post a Comment