Thursday, 28 April 2016
Tha.Ilakkiyak kazhakam katturai-thodarchi-2
பன்னிரண்டு விளக்கம்
ஆகாயம் (கல்லீரல் ):
"அ " எனும் வடிவம் கல்லீரல் வடிவம் - கல்லீரல் பூதம்
"ஆ "வின் சுழி பித்தப்பை குறிக்கும் - கல்லீரல் துணை உறுப்பு.
தீ (இதயம் +பெரி கார்டியம் எனும் மனம் ):
"இ " எனும் வடிவம்- இதய வடிவம் - நான்கு துண்டு பிரிவு, விசிறு வடிவம் ( பெருந்தமனி )
"ஈ " (பழைய வடிவம் இ மேல் சுழித்தல், தீ எழுத்து போல.)
சிறுகுடல் பல சுருட்டலுக்குப் பின் வயிற்றுப் பையில் மேலாக இணைதல்.
"ஐ " என்பது தீயோடு -இதயத்தோடு சேர்ந்து இயங்கும் பெரி கார்டியம் இடம் - மையக் குறி.
"ஔ " என்பது ஐ எனும் மனதுக்குக் கட்டுப்பட்ட மூவெப்ப மண்டல இயக்கம் ( இரட்டை உதர விதானம் ) மூச்செடுத் தல் , செரிமானம், கழிவு நீக்கம் எனும் மூன்று மண்டலங்களை பிரிப்பது - இவற்றில் மன பாதிப்பால் மாறுதல் உண்டாகும்.
மண் :
"உ " எனும் வடிவம் மண்ணீரல் பை, கணைய நீளப் பையோடு .
"ஊ " வின் மேல் வடிவம் இரைப்பை துணை உறுப்பு ஆதல்.
காற்று (நுரையீரல் ):
"எ " காற்றை இயக்கும் பெரிய நுரையீரல் "எ " . அதன் அடுத்த பகுதி இதயம் அடைப்பதால் கோட்டு வடிவம்.
"ஏ " பெருங்குடல் தொடக்கம் , சிறுகுடல் சுழித்து , ஏறுகுடல், கிடைக்குடல், இறங்கு குடல் என வந்து சரிந்து குதத்தில் முடியும். "ஏ " காண்க.
நீர் ( சிறுநீரகம் ):
"ஒ " மேல் இரட்டைச் சுழி சிறுநீரகம் குறிக்கும். ( குழந்தையின் தலை கீழ் வடிவம் கூட )
"ஓ " கீழே உள்ள பை, சிறுநீரகத் துணை உறுப்பு , சிறுநீர்ப் பை.
ஆக, அக்கு பங் சர் பாடத்தில் உடலின் உயிர் சக்தி (chi ) இயங்கும் பன்னிரண்டு உறுப்புக்கள் வருமாறு :
அ - Liver - கல்லீரல் ; ஆ - Gall Bladder - பித்தப்பை .
இ - Heart - இதயம் ; ஈ - small Indestine - சிறுகுடல்
ஐ - perikaardiyam - மனம் ; ஔ - Triple Warmer - மூவெப்ப மண்டலம் .
உ - Spleen + pancreas - மண்ணீரல் + கணையம் ; ஊ - Stomach - இரைப்பை .
எ - Lungs - நுரையீரல் ; ஏ - Large Indestine - (பெருங் ) குடல்.
ஒ - Kidney - சிறுநீரகம் ; ஓ - Urinal Bladder - சிறுநீர்ப் பை
மெய் எழுத்துக்கள் தமிழ் முறையில் அக்குப் பங் சர் நூலில் காண்க.
முடிவுரை :
ஐம்பூத அறிதல் பள்ளிக் கூடத்திலிருந்து தொடங்க வேண்டும். நோய்கள் ஐவகையே. தமிழர்கள் இழந்ததை இனியேனும் பெறுவோம். தாய் மொழியில் கற்போம்.
---இறுதி -----'.
Wednesday, 27 April 2016
TAMIL ILAKKIYAK KAZHAKAM- MALAR KATTURAI.
தமிழின் உயிர் மெய்ப் புதிர் விடுவிப்பு
ஆசான் .ஆ. மதி யழகன்.
முகவுரை :
திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம் எனக்குத் தந்த வாய்ப்புதான், 21/12/2013-ல் ஐந்து பூதங்கள் பற்றி உரையாற்றும் நிகழ்வு. தமிழர்களின் வர்ம மருத்துவத்தையும் , சீனர்களின் ஊசி மருத்துவத்தையும் ( அக்கு பங் சர் ) ஒப்பிட்டுப் பேசினேன். அதனால் தாய்த் தமிழுக்கு ஒரு மகுடம் கிடைத்தது. தமிழின் உயிர் ஒலிகள் உச்சரித்தாலே போதும், பன்னிரண்டு உயிர் ஆற்றல் உறுப்புகள் இயங்கும். (எ. கா - ஒ, ஓ - சிறுநீரகம் ஆகிய நீர் பூதம் ) . அதுபோல் மெய் எழுத்துக்கள் உடம்பில் அதிரும். (எ. கா.- ம் - மூலாதர் பகுதி அதிரும்.)
ஆரா விளைவு :
உயிர் என்பது என்ன என்ற கேள்வி பலக் காலும் பலராலும் கேட்கப் பட்டு வருகிறது. த. ச. தமிழனார் இயற்றமிழ்ப் பயிற்றகத்திலும் உயிர்க் கருத்தரங்கு நடத்தப்பட்டது. உயிர் என்பது ஒரு காற்று வடிவத்தில் இயக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து . இப்பொழுது சற்றுத் தொலைவில் இறந்தவர், உயிர் உடையவர் என இருவர் இருந்தால், கிரிலியன் புகைப் படம் மட்டுமே உயிர் உள்ளவரின் ஒளி வட்டம் 'ஆரா ' காட்டும்.
இந்த ஒளி உடலின் மேற் பரப்பை ஒட்டி உள்ளாகவும், வெளியாகவும் இருந்து பாதுகாக்கிறது. ஒத்த உணர்வு உள்ள இருவர் அருகிருந்து உரையாட, கை குலுக்க ஆராவும் இணைந்து கலக்கிறது. ஒத்த கருத்துடைய 50 பேர் நிரம்பிய கூட்டத்தில் நீங்கள் செலுத்துவது ஓர் ஆரா முதலீடு . ஆனால் நீங்கள் பெறுவது 50 ஆரா பயன் ஆகும். இது கூட்ட விளைவு ஆகும். இதை உணர மட்டுமே முடியும் . உங்கள் மனதின் விருப்ப அடிப்படையில் , ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகும். பயன் தரும் இந்த ஆற்றல் நிகழ்வு, எனக்கு அந்த தமிழ் இலக்கியக் கூட்டத்தில் நடந்தது.
ஐந்தும், பன்னிரண்டும் :
தொடரும்.
தொடரும்.
tha.Ilakkia kazhakam-katturai-thodarchi-1
ஐந்தும், பன்னிரெண்டும் :
வர்மமாக இருந்தாலும், ஊசி மருத்துவம் (அக்கு பங் சர் ) என இருந்தாலும், அவை உடலின் ஐம்பூத இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் ஐந்து பூதப் பண்புகளை அட்டவணை வடிவில் பூதத்தின் வண்ணம், முதல் உறுப்பு, துணை உறுப்பு, புலன்கள், சுவை, கட்டுப் படுத்தும் திசுக்கள், குரல் பண்பு, உணர்ச்சி, மனத் தீர்வு, நீர் சுரப்பு, உடல் மனம், பருவ காலம், வானிலை, உடல் நோய் எதிர்ப்பு சக்திக்குரிய தீர்வு, இயங்கும் நேரம் , சார்ந்த நோய்கள் இவற்றை எடுத்துக் கூறி, பிண்ட இயக்கம், அண்ட இயக்கம் அனைத்துமே இவ்வடிப்படையில் நடக்கின்றன எனக் கூறி அட்டவணை விளக்கம் தந்தேன்.
வீட்டுக்கு வந்தவுடன் ஐந்து பூதங்களில் தமிழ் ஏன் அடங்கக் கூடாது என நினைத்து மனக் கண்ணில் இயற்றமிழ் பயிற்றக செயலசான் இளைய நம்பியை அழைத்து உரையாடினேன்.
ஆ.மதி யழகன் : தமிழ் உயிர் எழுத்து 12. உயிர் எனக் கையாளுதல் உள்ளதால் 5-ந்தில் அடங்குமா ?
இளைய நம்பி : கூட்டெழுத்து ஐ, ஔ விட்டாலும் மீதி பத்து உள்ளதே.
ஆ.மதி யழகன் : ஐந்து × இரண்டு = பத்து அல்லவா ?
இளைய நம்பி : இரண்டாவது ஐந்து என்ன ?
ஆ.மதியழகன் : முதல் ஐந்து பூதங்கள் - குறில் - அ , இ , உ , எ , ஒ . அவை நீட்டொலிக்க அவற்றின் துணை உறுப்புக்கள் இயக்கம் பெறும் . ஆ, ஈ , ஊ, ஏ, ஓ .
இளைய நம்பி : அப்பொழுது ஐ, ஔ என்னவாகும் ?
ஆ.மதியழகன் : அவை பூதங்களுள் சேர்ந்தும் சேராமலும் நடுவில் உள்ளவை . நல்லது. எனக்கு ஒரு வரைபடம் கிடைத்து விட்டது.
தமிழின் உயிர் உறுப்புகள் வரைபடத்துடன் எனது நூல் " தமிழ் முறையில் அக்கு பங் சர் ", பிளாக் ஹோல் பப்ளிகேஷன் வெளியீட்டில் வந்துள்ளது. காண்க யூ டியுப் : "tamil muraiyil acupuncture "
பன்னிரண்டு உயிர் விளக்கம் :
தொடரும்.
Sunday, 17 April 2016
Tamil acupuncture vision to Thirukkural 9 to 13
9. விருந்தோம்பல் - இல்லறவியல்
ஒரு குடும்பத்தின் செழிப்பு காட்டுவது விருந்தோம்பல் . விருந்தினர் என்பது புதியவர் எனப் பொருள் தரும். இந்த பண்பு தரும் பலன் அளப்பற்கரியது .
அக்கு ப் பார்வை : ஒரு மனிதனின் ( உடல், மனம், உயிர் ) செழிப்பு என்பது பிறர் நலம் போற்ற உதவுதலே . பிறரின் பசி போன்ற உணர்வை உணர்ந்து செயல் பட வேண்டும். பிரபஞ்ச மனம் (நுரையீரல் பூதம் ) உள்ளும் வெளியும் இன்ப உணர்வைச் சமன் செய்ய வேண்டும்.
10. இனியவை கூறல் - இல்லறவியல்
ஒருவரின் மரபின் சிறப்பும், சூழ்நிலை வளர்ப்பும் இன்சொல், வன்சொல் தேர்வில் தெரியும். குடும்பம் செழித்திட இன்சொல் தேர்வு வேண்டும்.
அக்குப் பார்வை : நல்லெண்ண வளர்ச்சி என்பது தன் வயிறைக் (மண்ணீரல் பூதம் ) காப்பாற்றும்.
ஏன், தன் உயிரையே க் காப்பாற்றும். நல்லெண்ணம், நற்சொல்லாகப் பிறரிடம் கூற இன்சொல் பிறக்கும் . இருவருக்கும் இதம் கிடைக்கும்.
11. செய்ந்நன்றி அறிதல் - இல்லறவியல்
ஒருவர் தமக்கு செய்த உதவியை அறிந்து நன்றியுடன் இருத்தல்.
அக்குப் பார்வை : இது ஒரு நேர்மறை உணர்வு. இது வளமாக இருந்தால் , மண் பூதத்திற்கு செரிமான சக்தி கிடைக்கும். மேல் மனம் நல்ல அமைதியில் இருக்கும்.
12. நடுவு நிலைமை - இல்லறவியல்
தன் பக்கம், எதிர்ப் பக்கம் இரண்டும் சாயாது நடுவில் நிகழ வேண்டியதில் கவனம் வைத்து வாழ்தல். இந்த உணர்வு மோதல்களைத் தவிர்க்கும். செயல் குலையாது.
அக்குப் பார்வை : யின் , யாங் கூடுதல் குறை இன்றி இருக்கும் சமநிலை பேணலே உயிர் வாழ்வு.
13. அடக்கம் உடைமை - இல்லறவியல்
எவ்வளவு காரண காரியங்கள் இருந்தாலும் , இடம், காலம், பொருள் அறிந்து அடங்கி இருந்து கொண்ட கொள்கை நிறைவேற முயல வேண்டும்.
அக்குப் பார்வை : அடிமன எண்ணங்கள் 'நான் ' என்பதை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அதை ஊக்குவிக்க 'அடக்கம் ' கெடும். 'நாம் ' என்பதை ஊக்குவிக்க அடக்கம் வரும்.
தொடரும்.
Friday, 8 April 2016
Tamil acupuncture vison to kural-1to8
தமிழ் அக்கு பங் சர் பார்வையில் திருக்குறள் .
அறத்துப்பால் : 38 தலைப்புகளில் பாயிரம் நான்கு விளக்கம்
(1) கடவுள் வாழ்த்து : ஆதி பகவன் என்கிற பெண் சக்தி, ஆண் சக்தி இணைந்த சக்தி உலக முதன்மை. அகரம் முதன்மை எழுத்துக்கு என்பது எடுத்துக்காட்டு.
அக்கு ப் பார்வை : யின் - யாங் இயக்கம் முதன்மை யானது. பூத சுழற்சியில் ஆகாய பூதம் அல்லது கல்லீரல் பூத ஒலி 'அ ' ஆகும்.
(2) வான் சிறப்பு : நீர் ஒழுங்கே வாழ்வு ஒழுங்கு அண்டத்திலும், பிண்டத்திலும் (உலகத்திற்கும் மக்களுக்கும் )
அக்குப் பார்வை : நீர் ( மனிதனில் சிறுநீரகம் ) இயக்கம் , அடுத்து சிறப்பு.
(3) நீத்தார் பெருமை : தவ வாழ்வுப் பெரியோர் மறை மொழி பெருமையானது.
அக்குப் பார்வை : இருமையும் (யின் - யாங் ) ஐம்பூத ( கல், தீ, மண், நுரை, நீர் ) ஆற்றல் அறிந்து பக்குவப் பட்டவர்களை ப் போற்றி பெருமைப் படுத்து. இது மூன்றாவது.
(4) அறன் வலியுறுத்தல் : மனத்தின் தூய்மை அறம் ஆகும்.
அக்குப் பார்வை : தீ பூதத்தின் , மனத் தெளிவே இயல்பான ஐம்பூத சுழற்சிக்கு வலியுறுத்தப் படும்.
38 தலைப்புகளில் இல்லறவியல் இருபது விளக்கம்
(5) இல் வாழ்க்கை : குடும்பமாய் வாழ்வது போல் வேறு சிறந்த அறம் இல்லை. அதனால் இல்லறம் .
அக்குப் பார்வை : நுரையீரல் பூத நிறம் வெள்ளை. அதனால்தான் மற்ற பூதங்கள் வாழ்கின்றன.
குடும்பம் இருப்பதனால்தான் தனி மனிதன் , சமுகம், மதம், அரசியல், இனம் எல்லாம். வெள்ளையில் எல்லா வண்ணமும் அடக்கம். குடும்ப வாழ்வில் எல்லாமும் அடக்கம்.
(6) வாழ்க்கைத் துணைநலம் : குடும்பத் தலைவன் வெளியுலகப் பணிகளுக்கு தேவையானவனும், வீட்டுக்கு முதன்மையும் ஆனவன். இல்லறப் பொறுப்பு ஏற்கும் இல்லத்தரசிக்கு தலைவன், குழந்தைகள், குடும்பப் பெயர் காப்பாற்ற நலன்கள் தேவை.
அக்குப் பார்வை : பெண் யின் வகை. அவள் இயக்கம் உள்ளார்ந்தது. இல்லறமே சிறப்பு (தமிழர் மரபு )
(7) மக்கட் பேறு : நன்மக்கள் பெற்று வளர்த்தல் பெரும் பேறு
அக்குப் பார்வை : ஒருபூதம் ஊட்டி வளர்த்த அடுத்த பூதம், திரும்பும் நிலையில் முதல் பூதம் காப்பாற்றப் படும்.. மேம்பட்ட வாழ்வும், ஒழுங்கும் கிடைக்கும்.
(8) அன்புடைமை : யாவருக்கும் எப்போதும் உரியது ஆதல் அன்புடைமை.
அக்குப் பார்வை : ஒருவரின் அன்புத் தன்மை மரபு சார்ந்தது என நிருபிக்கப் பட்டு உள்ளது. மரபு சிறுநீரகப் பண்பு. அன்பின் குழவி அருள் கல்லீரலுக்கு எளிதாகும்.
தொடரும் --அன்புடன், ஆ. மதி யழகன்.
Wednesday, 6 April 2016
INDEX
உள்ளே ...
1. மனதின் ஓட்டங்கள் ....................................... 9
2. மன ஈரல் தத்துவம் .........................................17
3. மனம் வழி நோய் விளைச்சல் .........................25
4. நான்கு சுற்றுக்கள் - முப்பரிமாணப் பெயர்கள்.....31
5. தன் வலு - இணைப் புள்ளிகள் ............................38
6.சுற்றுக்கள் விளக்கம்.
5 தனிமங்கள் நான்கு சுற்றுக்கள் ................62
7.மன வெட்டுப் புள்ளிகள் .
மூலப் புள்ளிகள் எனும் ஊற்றுப் புள்ளிகள் .....86
8. நடைமுறையில் ஐம்பூதக் காப்பு .....................94
9. நல வாழ்வு பெற ஐம்பூத சிற்பங்கள் ................101
10.ஐம்பூதம் காப்பாற்ற பத்துக் கட்டளைகள் ......102
( சதுக்கச் சிற்பங்கள் கடைசிப் பக்கங்களில் )
Replace-New text-sadukka sirpam/9
சதுக்கச் சிற்பம் பயன்படுத்தும் முறை :
எ. கா . கல்லீரல் சதுக்கச் சிற்பம் - கல் -, கல் + காண்க.
இது இடப் பக்கம் கல் - என்று உள்ளது.
இதுவே வலப் பக்கம் கல்+ என்று உள்ளது.
(1) இட மேல் கட்டம் உடல், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"பொய் மயக்கம் " . இதன் தீர்வு வலது மேல் கட்டம் -" ஓய்வு , உறக்கம் " ஆகும்.
(2) இடக் கீழ் கட்டம் மனம், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"சினம், வெறுப்பு " . இதன் தீர்வு வலது கீழ் கட்டம் - " உயிர் இரக்கம் "
(3) மேலாக இடம் மேல் -0- செரிமானத் தலைவலி, கால் விரல் வலி . நோயின் யின் விளைவு.
பார்க்க வலம் மேல் -0- கல் தன் வலு 'அ ' . தீர்வுப் புள்ளி Liv 1
(4) இடம் கீழ் -0- இடுப்பு வலி, பாத வலி, குதிகால் வலி . நோயின் யாங் விளைவு.
பார்க்க வலம் கீழ் -0- பித்தப்பை தன் வலு "ஆ ". தீர்வுப் புள்ளி GB 41.
(5) இதுபோல் முதல் பக்கம் மேலே மற்றும் கீழே உள்ள x , -x , 2x , 3x நோய்களுக்கு தீர்வு
எதிர்ப் பக்க கல் + ல் கண்டு தெளியலாம்.
(6) இதுபோல் ஐம்பூதநோய் களுக்கும் (கல், தீ , மண், நுரை , நீர் ) நோயிலிருந்து தீர்வுப் புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
மேலும் அறியத் தக்கன , இதே எடுத்துக் காட்டில் - கல் பூதம்
(1) பொது : உடல், மன விதிகளைப் பின்பற்ற "நோய்" இல்லை.
(2) '0' கட்டத்தில் நிற்பது பூத நோய் தொடக்கம். தன் வலு சரி செய்யப் பட வேண்டும்.
(Liv 1, GB 41)
(3)'X ' கட்டத்தில் நிற்பது முதல் சுற்று , தூண்டும் வலு. இது எச்சரிக்கை ஆகும். பூதம் தேக்க நிலையில் உள்ளது. தூண்டுக. (K 1, UB 65)
(4) '-X ' கட்டத்தில் நிற்பது இரண்டாம் சுற்று கேட்கும் வலு . இது தீவிர எச்சரிக்கை ஆகும்.
பூதம் சங்கட நிலையில் உள்ளது. கேட்க (Liv 8, GB 43)
(5) '2X ' கட்டத்தில் நிற்பது மூன்றாம் சுற்று கட்டும் வலு . இது வெகு தீவிர எச்சரிக்கை ஆகும்.
திரும்பி வரும் தீரா நோய். இடை பூதம் சிக்கல். இங்கு கல், இடை, மண் . இடையில் உள்ள தீ பூதம் சிக்கல் .அதனால் கல்லும், மண்ணும் சிக்கலில் உள்ளன. தற்காலிகத் தீர்வு (Liv 3, GB 34)
(6) '3X ' கட்டத்தில் நிற்பது நான்காம் சுற்று கவரும் வலு. இது முடிவான எச்சரிக்கை ஆகும்.
இது மீட்சி நோய். கவரும் பூதம் வலுக் குறைவில் உள்ளது. தற்காலிகத் தீர்வு (Liv 4, GB 44)
இதுபோல் பிறவும் அறிக.
Subscribe to:
Posts (Atom)