Sunday, 5 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 39-42

திருக்குறள் - பொருளியல் 

39. இறைமாட்சி - அரசியல் 
       அன்று : மக்களை ஆளும் தலைவன் அரசன்.
       இன்று : ஒவ்வொரு தலைமைப் பொறுப்பு உள்ளவரும் மன்னர்தான்.
குடும்பத் தலைவன் முதல் குழுவின் தலைவர்கள் வரை உள்ள அனைத்தோர்க்கும்  உரியவை இங்கு உள்ள ஆளுமைப் பண்புகள். அறம் , பொருள், இன்பக் கூற்றுக்கள் உங்களுக்கு (தனி மனிதனுக்கு ) க் கூறியவை. அடுத்தவரிடம் எதிர் பார்க்கவோ , குறை கூறவோ வேண்டாம்.  
அக்குப் பார்வை : அறத்தில் கூறப்பட்ட அனைத்து நற்குணங்களும் அரசனுக்கும் வேண்டும். 
ஐந்து பூதங்களுக்கும் ஐந்துவிதமான குணங்கள் உண்டு. கல்லீரல் குணம் அருள் (நேர்மறை ) . 
தீ ஈரல் தெளிவு, மண்ணீரல் நல்லெண்ணம் , நுரையீரல் பகிரும் மகிழ்வு உணர்ச்சி. நீர் ஈரல் நம்பிக்கை. இந்த ஐந்தும் தொகுப்பு பூதமாகிய பெரிகார்டியத்துக்கு உண்டு. மனம் வலிமையாக இருந்தால்தான் உணர்வுத் தொகுப்பில் நன்று வெளிப்படும். மன மாட்சி இறைமாட்சி ஆகும். 
40. கல்வி - அரசியல் 
      நடத்தை என்பது நன்றே ஆயினும், தீதே ஆயினும், முதலில் கற்றலில்தான்  நிகழ்கிறது. 
' ஒரு நாட்டின் தலை எழுத்தே வகுப்பறையில்தான் எழுதப் படுகிறது.' என்பது கோத்தாரி கமிஷன் அறிக்கை. எப்படி செயல் படுவது எனக் கற்பித்து, ஒரு மனிதனின் சிறந்த திறன்களை க் 
கல்லி  (பிடுங்கி ) எடுத்துப் பயன்படுத்த உதவுவதே கல்வி. தலைமை ஏற்போருக்கு கல்வி முதன்மை. 
அக்குப் பார்வை : கல் என்பது கல்விக்கும் வேர்ச்சொல் ,  கல்லீரலுக்கும் வேர்ச்சொல் . மண்ணில் இருந்து திரட்ட கல் உருவாகும். மண்ணீரலில்  இருந்து சக்தி பெற்று கல்லீரல் சக்தி பெறுகிறது. 
கல்லீரல் செய்வது உடல் சேமிப்பு மட்டும் அல்ல, மன சேமிப்பும் ஆகும். உங்கள் கால வளர்ச்சி, மனம் உடல் இணைந்தே கல்லீரல் வெளி உறுப்பு கண்ணில் பதிவாகிறது. இன்னொரு பதிவு மூளையில் நடக்கிறது. எண் , எழுத்து க்  கல்வி இரு கண்கள் என்ற ஒப்பிடு காண்க. ஒரு மனிதனின் தொடக்கமும் இங்குதான். ஒரு தலைவனின் தொடக்கமும் இங்குதான். கல்வி அடிப்படை. கல்லீரல் அடிமனம்.
41. கல்லாமை - அரசியல் 
        துறைதோறும் துறைதோறும் அறியக் கூடிய இயல்கள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன . சாகும்வரை தேவையானது கற்க வேண்டும். கல்லாதிருக்கும் தன்மைதான் கல்லாமை. இது காலத்தால் தகுதியின்மை ஆகி விடும். 
அக்குப் பார்வை : கல்லீரல் முதல் பூதம். இதில் முதல் குறை ஏற்பட்டால் கண்ணிலிருந்து குறைபாடு தோன்றும்.  இதனால் ஆளுமையாகிய கண்ணோட்டம், கண்டுணரும் நுட்பங்கள் கண் இழப்பால் கிட்டாது. கல்லாமையிலும் கிட்டாது. 
42. கேள்வி - அரசியல் 
      காதுகளால் கேளுங்கள். நீங்கள் பத்து மணி நேரம் படித்து அறிய வேண்டிய புத்தகத்தின் சாரத்தை அரைமணியில் ஏன் அரை நொடியில் கூற வல்லவர்கள்  இருக்கிறார்கள். இது  தலைமைத் திறனை மிகுதியாக்கும். தவற விடக் கூடாது. கேள்வி ஒரு செல்வம். 
அக்குப் பார்வை : கல்லீரல் பூதத்தின் தாய் சிறுநீரகம். அது நீர் பூதம். இதன் வெளியுறுப்பு காது . 
கண் இயக்கம் மனத்தால் ஏவி இயங்கும். ; ஏன் மூடும் வசதி உண்டு. காது  இயக்கம் உயிர்க் காவந்துக்கு இயங்குகிறது. நீங்கள் தடைதான் உண்டாக்கலா ம் .  இதன் அரி ய தேவையால் 
திறந்தே உள்ளது. கேள்வியால் தாய் போல் உதவி கிடைக்கும். 
தொடரும். 

No comments:

Post a Comment