Sunday, 29 May 2016

TAMIL ACUPUNCTURE VISION TO TIRUKKURAL-14-18

14. ஒழுக்கமுடைமை - இல்லறவியல் 

   உலகத்தார் ஏற்கும் ஒழுக்கம் அறிந்து அதன் வழி ஒழுகல்.
அக்குப் பார்வை : பொது ஒழுக்கம் மீற , மேல் மனம்  ஆகிய தீ பூதமும் , அடிமனம் ஆகிய கல்லீரல் பூதமும் சிக்கலில் மாட்டும். பித்தம் தொடர்பான நோய்கள் வரும். இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள்  உண்டாகும். வாழ்நாள் குறையும். 
15. பிறனில் விழையாமை - இல்லறவியல் 
  ஒழுக்கத்தின் ஒருபகுதி , அடுத்தவர் மனைவியை  விரும்பாதிருத்தல் - சமூகக் கோடு தாண்டாமை . 
அக்குப் பார்வை : மனிதன் அமைத்த கோடுகள் மேல்மனம் , அடிமனம் இவற்றில் வலுவாகக் காலுன்றி நிற்கும். இவை நேர் மற்றும் எதிர்த் தன்மை (+ , - ) உடையவை. எதிர்த் தன்மையில் இறங்க வாழ்நாள் அமைதி கெடும். ஆழ்மனம் செயல்படும்போது கனவு, நனவு இவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு விருப்பு, வெறுப்பு இவற்றைப் பற்றாமல் கடந்துபோக விடு.
16.பொறையுடைமை - இல்லறவியல் 
         பிறர் இகழும் சொல், செயல் பொறுத்தல்.
அக்குப் பார்வை : எந்த ஒரு சொல்லும் பிறர் கூற, அதைக் கவசமிட்டுத் தடுத்து, ஆய்ந்தபின் உள்ளே விட வேண்டும். புகழ்ச்சியை ஊக்கமாக ஏற்கலாம். இகழ்ச்சியைத் திருப்புக. பொறுமை காக்க. ஒவ்வொரு சொல்லும் ஆழ்மனம் செல்லும் என்பதால் தடுப்பணை அவசியம்.
17. அழுக்காறாமை - இல்லறவியல் 
        பிறர் வாழ்வு கண்டு  பொறாத உணர்வு . 
அக்குப் பார்வை : பொறாமை எதிர்மறை (-) உணர்வு . தீ பூதத்தை நஞ்சாக்கும். மேல் மனம் கெடுக்கும். சொல், செயல் கெடுக்கும். தொடர்க் கெடுதல் உண்டாகும். 
18. வெகாமை - இல்லறவியல் 
      பிறர் பொருளை நடுவுநிலை தவறி அடைய நினைத்தல் 
அக்குப் பார்வை : நடுவு நிலை தவறிய விருப்பம் எதிர்மறை உணர்வு. (-) . மனதில் ஏற்றப்படும் நஞ்சு பிறகு உடலில் நோயாக விளையும். 
    தொடரும்.  

No comments:

Post a Comment