Wednesday, 30 March 2016

manam seyyum udal aatchi-2

மன விளக்கம் - கபம் - பொருள் கோடு 

நுண் மனம் (Sp -மண் ), பிரபஞ்ச மனம் (Lu - நுரை ) சேர்ந்த மனக் கோட்டின் இந்த பகுதி பொருள் கோடு . இதைக் கபம் எனவும் கூறலாம். இந்தப் பகுதி இயங்கு தசையால் இயக்கம் பெறுகிறது, கண்டிப்பாக மன ஆட்சி உண்டு. இந்நிகழ்ச்சிகள் தன்னிச்சையாக நடைபெறுவது போலத் தோன்றினாலும், உங்களைச் சுற்றி உள்ள நபர்கள், செயல்பாடுகள் எனப் பலவிதத்தில் 'அறியாத' பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நுண் மனக் கோட்டின் நிறம் மஞ்சள். 

     மண் முனை :

சுவை யறிந்து மென்று உண்டால்தான் , பல்லில் உள்ள நரம்புகள், நா நரம்புகள் மூலம் இரைப்பை அறிந்து இன்சுலின் சுரக்கும். இதற்குரியது, மன மண் புள்ளி P 7. இதை செரிமானப் புள்ளி, இன்சுலின் புள்ளி , இஞ்சிப் புள்ளி எனலாம். இன்சுலினை, செரிமானத்தை மன அளவில் கேட்டு வாங்கும் புள்ளி மண் மனம் Sp 6 ஆகும். நுண் மனத்தன்மையும் , பெண்ணுக்குரிய தன்மையும் நிறைந்த புள்ளி.

பிரபஞ்ச முனை :

கணுக்கால் அருகில் உள்ள கால் புள்ளி மண் நுரை Sp 5 ஆகும். இது மிதிவண்டி ஓட்டுவதால் இயங்கும். செரிமான நுணுக்க நீர்ச்சத்து நுரையீரல் வந்து சேரும். நோய்களே  இல்லை . இதன் எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9. இது கை விசிறி வீசுவதாலும், கைப் பணிகளாலும் பயன் கிடைக்கும். இந்த ஒரு முனையில் அண்டமானது பிண்டத்தை சந்திக்கிறது. இது அனைத்து இரத்தக் குழாய் அடைப்புகளையும் நீக்கும்.

மன விளக்கம் -வாதம் -இன்பக் கோடு 

ஆழ் மனம் (K -நீர் ), அடிமனம் (Liv -கல் ) சேர்ந்த இணைப்புக் கோடுதான் இன்பக் கோடு . 5-> 1 . இன்பக் கோட்டின் நிறம் நீலம் . ஆழ்ந்த அமைதி பொறுத்தே இன்பமும் மிகும். மனம் பரபரப்பு அடங்கி , பொ ழுதுமடங்கிய நிலையில் நீலக் கோடு  விழிக்கும்.

கர்வ முனை :

'தான்' எனும் கர்வ முனையாகிய கல்லீரல் பூதம் நழுவும்போது அடைவது சிற்றின்பம்.

ஆதி அந்த முனை :

நுரையீரலில் மூச்செடுத்து, மனம் படிப்படியாய் நீக்கி, ஆழ்மனம் K தொட்டு வளம் பெற்று தான் எனும் 'Liv ' சிந்தனை விடுத்து வெறுமை உணர்தல் பேரின்பம். இது எதிர்ப் பக்கத் தொடுகை.
           எந்த ஒரு இன்பத்திற்கும் வழியின்றி, நுரை துக்கத்தால் நிரம்பி வழியும்போது ,  நுரை ஆற்றல் குறைவதால் , சிறிநீரகம் வலுக் குன்றி சிற்றின்பமும் கூடத் தடையாகிறது. இரவுத்தூக்கம் கெடுகிறது. என்பதும் சேர்ந்தால், தசைநார் இயக்கம் கல்லீரல் வலுக் குன்றி வாதம் வர வழிச் செய்கிறது.இந்த நிலைமை, சிறுநீரகம், கல்லீரல் வலு ஏற்றுவதால் தீரும்.
---------

No comments:

Post a Comment