Friday, 23 October 2015

100 ஆண்டுகள் வாழ... கட்டுரை தொடர்ச்சி -2

(6)மண் பூதம்-மனம் வழி மண்ணீரல்,கணைய சுரப்பிகள்-நல்லெண்ண வளர்ச்சி.

மண்பூதம் நன்கு செயல்பட ஆற்றல் மனம்,இதயம் என்ற தீ பூதமே தந்து உதவ வேண்டும்.
மனம் கவலை என்ற எண்ணத்தில் மூழ்கிவிட்டால்,அதாவது மாற்றமுடியாத 'பெயிலாகி விட்டேன்' கணவர் இறந்து விட்டார்.என்ன செய்வேன்?' இப்படி களை போன்ற எண்ணத்தில் மாட்டிக் கொண்டால் தற்கொலை வரை இழுத்துச் சென்று விடும். அல்லது வயிற்றுக்கு வைத்தியம் என்று வருடக் கணக்கில் பயனின்றி நீளும்.
   எனவே நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு.

(7)காற்று பூதம்-நுரையீரல் உடல் வழி-யோகா எனும் மூச்சுப்பயிற்சி.

மூச்சுதான் உடலை ஓம்புகிறது.காற்று போக்குவரத்தை நுரையீரல் ஒழுங்குபடுத்தி அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வது யோகா முறைகளே ஆகும்.எனவே அரைமணியாவது யோகா அவசியம்.

(8) காற்று பூதம்-நுரையீரல் மனம் வழி-உணர்வு பகிரல்.

துக்கம்நெஞ்சை அடைக்கும் என்பார்கள். நுரையீரல் கோளாறு வருவதற்கு காரணம் தூசும் பிறவும் மட்டும் அல்ல.மனதின் நீக்க முடியாத துக்க நிலைகளும் கூட.துக்கத்தைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்.தீர்வுக்கு வழி பிறக்கும்.உணர்வு பகிரல் அவசியம்.

(9)நீர்பூதம்-சிறுநீரகம்-உடல்வழி-நீரும்,நீர் உள்ள உணவுப் பொருள்கள்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்றிலிருந்து ஐந்து டம்ளர் வரை நீர் குடிக்க வேண்டும்.உணவுக்கு முன் அரைமணி,உணவுக்கு பின் அரைமணி நீர் அருந்தாமை,வயிற்று அமிலம் செயல்பட வழிவிடும்.நாள்தோறும் ஏழு டம்ளர் நீர்அருந்துவதும் தேவை.நீர் உள்ள உஉணவுப் பொருள்கள் வெள்ளரி,தர்பூசணி,சுரைக்காய் போன்ற நீரும் நீர் உள்ள உணவுப் பொருள்கள் தேவை.

(10)நீர்பூதம்-சிறுநீரகம்-மனம் வழி- நம்பிக்கை.

சிறுநீரகம் தாய்தந்தை வழி 50:50 ஆற்றல் பெற்று மரபு நிலையைப் பேணுவது மற்றும் பிரபஞ்ச சிந்தனைகள் பதிந்து உள்ள இடம்.ஆழ்மனம் இதுவாகும்.அச்ச உணர்வினாலும்,சிறுநீரகத்தை அவசியமின்றி மருந்துகள்,எண்ணங்களால் தூண்டினாலும் வாழ்நாள் சுழற்சி குறையும்.
இரசாயன மருந்துகளையும்,தேவையற்ற கிளர்ச்சியுறு எண்ணங்களையும் நீக்கி,வாழ்வு விருப்பமும்,உள்ளிருக்கும் பேராற்றல் காப்பாற்றும் என்ற நம்பிக்கை யும் அவசியம்.
              இந்த பத்து கட்டளைகள் ஒன்றும் குறைவுபடாமல் மனம் ஒப்பி நிறைவேற்றினால்தான் நூறாண்டு வாழ்வு எளிதாகும்.
[நூலாசிரியர் பற்றி:'தமிழ்முறையில் அக்குபங்சர்'எனும் நூலை எழுதி அதன் முதற்பதிப்பு முற்றும் விற்பனை ஆகி உள்ளது.புத்தகத்தின் வெளியீட்டுரை யூ டியுபில் நாள்தோறும் 35 பேர் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். தற்போது அதன் எண்ணிக்கை 3600 நெருக்கம்.]




100 ஆண்டுகள் வாழ... கட்டுரை தொடர்ச்சி.

     (3) தீ பூதம்-உடலில் இதயம்-உடற்பயிற்சி.

இதயத்திற்கு வலிமையும்,வாழ்நாள் நீடிப்பும் வேண்டும் எனில் மூட்டுக்கள் அசையும் உடற்பயிற்சி வேண்டும்.பழக்க வழக்கங்கள்,விளையாட்டு,நடைப்பயிற்சி இதில் அடங்கும்.

(4)தீபூதம்-மேல்மனமாக பெரிகார்டியம்-மனத் தூய்மை.

பெருமைபேசுவதால் இரத்த ஓட்ட அதிகரிப்பு ஏற்பட்டு வாழ்நாள் குறைகிறது.வாழ்க்கைத் தெளிவு கண்டு உணர்வில் அடங்க வேண்டும். மனத் தூய்மை வேண்டும்.

(5)மண்பூதம்-உடலில் மண்ணீரல்,கணையம்,இரைப்பை-6சுவை,7நிறம்.

புளிப்பு,காரம்,இனிப்பு,துவர்ப்பு,கசப்பு,உப்பு என. உணவில் 6 சுவை வேண்டும்.மேலும் கருப்பு வண்ணத்தின் வகையான ஊதா,வயலெட்,நீலம்,மற்றும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு மற்றும் கூட்டு வண்ணம் வெள்ளை என 7 நிறம் உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.இதனால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.மண் வழியாகவே 5 பூத ஆற்றலுக்கான உணவுகள் உள்ளே செல்லுகின்றன.எனவே வாய் மூடி நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து பசையாக்கி உண்ண வேண்டும்.மெல்லும்போது உணவு ஈடுபாட்டோடு உண்ண இயற்கை இன்சுலின் சுரக்கும்.

.

                  100ஆண்டுகள் வாழ தமிழ்முறையில் அக்குபங்சர்
                       தரும் 10 கட்டளைகள்.
    -தமிழ்முறையில் அக்குபங்சர் ஆசான்.ஆ.மதியழகன்.
                நீண்ட நாள் நோய்நொடி இன்றி வாழ ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு
வழியைக் காட்டுகிறது.இது மலையுச்சியை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைப் பின்பற்றிச் செல்வதைப் போன்றது.
                இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்.சமைத்த உணவுகளை உண்ண வேண்டாம்.
இயற்கையாக விளைந்த காய் கனிகளை அப்படியே உணவாக்குவதே நீண்டநாள் வாழ வழி என்பது ஒரு கூற்று.இதை முற்றிலும் பின்பற்றுவது கடினம்.
                சிலர் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு அல்லது குறைந்த அளவு நாள்தோறும் நடை வேண்டும் என்பர்.இன்னும் சிலர் யோகா என்கிற மூச்சுப்பயிற்சியோடு கூடிய ஆசனங்கள்,நீண்டநாள் வாழ உதவும் என்பர்.மேலும் சிலர் காயகல்பம் (நீண்ட வாழ்நாள் உடலுக்குத் தருவது) என உணவுப்பொருட்களைப் பட்டடியலிட்டு உண்ணச் சொல்வார்கள்.
               இவ்வாறு பலதிசைகளில் அவர்கள் மெய் என்று கண்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவார்கள்.
                 இவையனைத்தும் கண்ணுக்குத் தெரியாத யானையைக் குருடர்கள் தொட்டு விவரிப்பது போல பகுதி உண்மைகளே!அப்படி என்றால் முழு உண்மை என்ன?
            நம் உடல் பஞ்சபூதங்களால் அமைந்து வெளிஉலகில் உள்ள பஞ்சபூதங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.பஞ்சபூதங்கள் உடலில் உருவாகும்போது மனம் என்ற ஓர் அமைப்பு
இதயத்தோடு சேர்ந்து உருவாகி ஐந்து பூதங்களையும் மேலாக நின்று ஆட்சி செய்கிறது.
அக்குபங்சரில் இது பெரிகார்டியம் என்றும்,மகாபாரதத் தொடரில் 'என் இருதயம்' என்றும்
அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறது.
           எனவே உடல்நலம் காக்க பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என்றால்,கூடவே மனநலம் காக்கவும் பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என வந்து விடுகிறது.ஆக பத்துக் கட்டளைகள்
போற்றினால்தான் 'நலம்' என்பது முழுமையாகக் கிடைக்கும்.நீண்டநாள் நோயின்றி வாழ்வதும்
எளிதான செயலாகும்.

         (1) ஆகாயபூதம்-உடலில் கல்லீரல்-ஓய்வு,உறக்கம்

ஆகாயத்தை விண் என்றும்,வெளி என்றும் உரைப்பர்.இங்கு ஆகாயம் என்பதன் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவை.உடலில் ஆகாயமாக நம் கல்லீரல்  உறுப்பு,கண் வழியாகச் செயல்படுகிறது.இதன் செயல்பாடு குறைவின்றி இருக்க உடல்ரீதியாக ஓய்வும் உறக்கமும்
தேவை.ஓய்வு என்பது வேலைமாற்றம் அல்லது பிடித்தவை செய்வது..வேலையே பிடித்தமானது ஆனால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

      (2)ஆகாயபூதம்-அடிமனமாகக் கல்லீரல் தேவை-இரக்கத் தன்மை.

கல்லீரல் பாதிக்கப் படுவது மதுவகையால் என்பது சொல்லத்தேவையில்லை.அதேபோல் மனத்தின் கோபநிலையாலும் வலிமையாகப் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.தன்கோபம் தன் உடல்கெடுக்கும்.அடுத்தவர் கோபத்திற்கு எதிர்கோபம் கொள்ளாது கவசம் இட்டவாறு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.அருள் அல்லது இரக்க மனப்பான்மை உள்ளவர்களே நீண்டநாள் வாழமுடியும் என்பது உண்மை.