Wednesday, 8 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 43-47

43. அறிவுடைமை - அரசியல் 

கற்றது அல்லாமலும் , நடைமுறைக் கல்வி தாண்டியும், இயல்பான நுட்ப அறிவும், தேவையானது திரட்டி , திறமையுடன் செயல்பட முன்னேற்பாடுடன் இருத்தலும் அவசியம். இந்த அறிவுடைமை ( WISDOM ) தலைவனுக்குத் தேவை. 
அக்குப் பார்வை : கற்ற அறிவு, பெற்ற அறிவு அனைத்துமே கல்லீரல்  ஆகிய அடிமனம் வரை இருப்பது மேம்போக்கே. ஆழ்மனம் ஆகிய சிறுநீரகம், உயிர்களின் கடந்த கால வரலாறு உடையது. அதனுள்ளும் நுழைந்து (ஆழ்ந்த செயல் விருப்பத்தால்  முடியும் ) அகன்ற அறிவுடையராதல் வேண்டும். 
44. குற்றம் கடிதல் - அரசியல் 
       ஒரு தலைவனுக்குக் காப்பு, தன் மீது குற்றம் இலாது நடந்து கொள்வது. குற்றமே கூற்றம் ஆகலாம். குற்றம் படியாது கடிந்து காக்க வேண்டும். 
அக்குப் பார்வை : 
                  அச்சத்தால் அழியும் அரிய சிறுநீரகம் 
                  சினத்தால் அழியும் சீர்மிகு கல்லீரல் 
                   பெருமையால் அழியும் பீடுறு இதயம் 
                   கவலையால் அழியும் கவின்மிகு மண்ணீரல் 
                   துக்கத்தால் அழியும் தூய நுரையீரல் - என்று 
ஐம்பூதம் பற்றி கூறலாம் - ஆசான் ஆ மதி யழகன் .
இதுபோல் கூறலாம் " குற்றத்தால் அழிவான் கொள்கை மறவனும் "
45. பெரியாரைத் துணைக்கோடல் - அரசியல் 
       தம்மினும் பெரியார் தம்முடையராய்த் துணை கொள்வது தமக்கு பாதுகாப்பு என இயங்க வேண்டும் . இது தலைவனுக்குத் தலையாயத் தேவை. 
அக்குப் பார்வை :  தாய் சிறுநீரகம் உதவியின்றேல் மகன் கல்லீரல் சூடாகி மஞ்சள் காமாலை நோய் வரை செல்லும்.  தாய் கல்லீரல் குறைபாடு, மகன் இதயத்திற்கு இரத்த அழுத்த  நோய். 
இந்த நிலை தொடரும் ; முன்னேற்றம் இடறும் . சுழற்சி முறையில் தாயும் தேவை ; தாயின் தாயும் தேவை. எனவே அடுக்கில் பெரியார் ஆவாரின் துணை தேவை.
46. சிற்றினம் சேராமை - அரசியல் 
      சூழ்ந்த இனம் எதுவோ, அதன் பண்புகள் தலைமைக்கு  ஒட்டும் . சிற்றினம் எனின், சேர்மானம் தருவது சீரழிவு ஆகும். 
அக்குப் பார்வை : மனப் பாம்பின் தலை மேல்மனம். ( பெரி கார்டியம் ). மனப் பாம்பின் வால் பிரபஞ்ச மனம் நுரையீரல். வாலின் தூண்டலுக்கு ஏற்பதான்  தலையாடும்.  சேரினம் அறிந்து சேர். சிற்றினம் வேண்டாம். 
47. தெரிந்து செயல்வகை - அரசியல் 
         செயலின் தன்மை முழுக்க அறிந்த பிறகே , செயலில் இறங்க வேண்டும்.  செயல்தன்மை, உதவியாளர், கிட்டும் ஊதியம், உலகம் ஏற்கும் தன்மை அறிந்து செயல் தொடங்க வேண்டும். 
அக்குப் பார்வை : ஒவ்வொரு உணர்வும் உள்ளே வரும் முன் இதுவந்து உட்கார்ந்தால் எனக்கு - என் உடலுக்கு ஆவதென்ன ? என அறிந்து மனமுள்ளே, உணர்வு நிலைகளாகிய சினம், கவலை,, .. போன்றவற்றை விடாது ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
தொடரும்.

No comments:

Post a Comment