2.2 ஐம் பொறி - எதிர் /நேர் உணர்வுகள்.
எந்த ஒரு நோயின் தொடக்கமும் உணர்வின் ஆதிக்கத்தில் தோன்றுகிறது. ஐம் பொறி ஆகிய புலன் உணர்வுகளில் அடையாளம் காட்டுகின்றன. அவற்றை சிறு நோய் எனப் பொருட் படுத்தாமல் காரணம் கண்டு தெளிய வேண்டும். புலன்கள் தொடர்ந்து வலிமை குன்றும் போது நோய்கள் பூதங்களின் வலிமை குறைத்து ஐம் பூத நோய்களாக மாறுகின்றன. பட்டியல் ----
பொறி--------பூதம் --------எதிர் உணர்வு -------நேர் உணர்வு --
கண் --------கல்லீரல் ------சினம் ---------இரக்கம் ---
நாக்கு ------தீ ஈரல் -பெரி கார்டியம் --பெருமை , பரபரப்பு - தெளி வு, அமைதி
வாய் மண்ணீரல் கவலை செழுமை
மூக்கு நுரையீரல் துக்கம் உயிர்ப்பு அல்லது பரிமாறல்
காது நீர் ஈரல் அச்சம் நம்பிக்கை
கண்ணில் எந்த கோளாறு வந்தாலும் சின உணர்வு வெளிப் படாமல் உடலில் வெப்பமாக உள்ளது .இதற்கு தீர்வு கல்லீரல் ஓட்டத்தில் காண மன, உடல் தீர்வுகள் உடனே கிடைக்கும். கால் கட்டை விரல் புள்ளி Liv 1. மேலும் ஓய்வு , உறக்கம் சரி பார்க்க வேண்டும்.
இதைக் கண்டும் காணாமலும் விடத் தலை வலி வரும். நடை K 1 தூண்டுவதால் தீர்வு. (கல்லீரல் தாய் உதவி) . சின் முத்திரைப் பணிகள் Lu 11 செய்தாலும் தீரும். (கல்லீரல் தாயின் தாய் ) . இரண்டும் இல்லாதபோது கல்லீரல் அடிக்கடி அல்லது நிலையாக அதன் மூலப் புள்ளி ஆகிய Liv 3 - நுரை மண்ணில் போய் நிற்கும் . இதுவே இரத்த அழுத்த நோய் என ப் பெரு நோய்
ஆகி விடுகிறது.
மாறுபட்ட உணர்வு தீர்க்கப் பட நல்ல வாழும் முறை (LIFE STYLE ) வேண்டும்.
நல்ல வாழும் முறை இல்லாத போது சிறு நோய்க்குப் பின் பெரு நோய் உட்கார்ந்து , வாழ் நாள் வரை மருந்து.
இது போல் பிற பொறிகளே முதல் அடையாளம் ஆகின்றன.
ஆக, ஐந்து பொறிகளிலும், புலன் வாயிலாக உணர்தல் அதாவது எண்ணம் நேர்மறை (+) ஆக
இருக்க வேண்டும். சொல்லும், செயல்களும் அது போல் இருந்தால் நோய் இன்றி நீண்ட நாள்
வாழலாம். இதுவே நோயின்மைக்கு முதல் படி.
திருக்குறள் : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள் : ஐம் பொறிகளை அடக்கி ஆளவல்ல இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியாளர் நீண்ட நாள் வாழ்வார். ஆக, ஆமை போல் 'கெட்டது ஒடுக்கி நல்லது ஊக்கி ' வாழ நோயில்லை.
குறிப்பு : நன்று (+), அன்று (-) இரண்டு நிலையில் நடுவு நிலைமையே சிறப்பு. தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் நேர்மறை (+) எடுக்க.
அடுத்து மன இயக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்....
No comments:
Post a Comment