Tuesday, 31 May 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL- 25-29

25. அருள் உடைமை - துறவறவியல் 

        இல்லறம் நடத்துபவருக்கு மன உணர்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். துறவறத்தை இல்லறம் பின் துறவறம் என மேற் கொள்ளும்போது முதல் தேவை இரக்கம் எனும் அருளுடைமை ஆகும்.
அக்குப் பார்வை : உடலின் முதல் பூதம் கல்லீரல் (ஆகாயம் ) . இதன் நேர்க்குணம்  அருளுடைமை ( இரக்கம் ). அழிக்கும் எதிர்க்குணம்  சினம்  மற்றும் பிறர் செயல் மீது வெறுப்பு. இரக்கம் அல்லது அருளால் தீர்வு செய்ய மனம், உடல் நலம் உடனே கிடைக்கும்.
26. புலால் மறுத்தல் - துறவறவியல் 
       போர்க்குணம் தரும் புலால் உணவு, அருள் ஆளும் துறவிக் குணத்திற்கு எதிர்த் தன்மை ஆகும்.  துறவில் முன்னேற புலால் மறுத்தல் இரண்டாம் நிலை . 
அக்குப் பார்வை : மனதைப் பக்குவப் படுத்தினால் மட்டுமே, உடலைப் பக்குவப் படுத்த முடியும். மனதிலிருந்து உடலும், உடலிலிருந்து மனமும் என பண்பு சுழற்சி நடைபெறுவதால், உடலுக்குத்  தரும் உணவிலிருந்து மனக் காப்புத் தொடங்குகிறது. 
                ஒரு மனிதனின் சிறுநீரகம் வடித்தெடுக்கும் செங்கற்கள், கல்லீரலில் சேமிப்பு ஆகி, மனித மரபு உருவம் , பண்பு கிடைக்கிறது. மிருகங்களின் சிறுநீரகத்தால் பக்குவப் படுத்த ப் பட்ட 
உணவே மிருக உடல். அதன் செரிமானத்தின் செரிமானம் குண இறக்க நிலையாகும். 
27. தவம் - துறவறவியல் 
      துன்பம் பொறுத்தலும் , தான் எனும் செருக்கு விடலும் தவம்.
அக்குப் பார்வை : மனம் துன்பமுற்றே உடல் துன்புறுகிறது. மனம் இன்பத்தில் இறங்கும் போது துன்பத்தை சேர்த்து வாங்குகிறது. தான் விடத் தன்னால் வரும் துன்பம் தீரும். பிறர் அறியாது செய்யும் துன்பம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இது தவ வாழ்வின் அடிப்படை. 
28. கூடா ஒழுக்கம் - துறவறவியல் 
    தன்னை கவனிக்க. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் தவறு. இந்த நிலையிலேயே விழிப்புணர்வு கொண்டு மனதின் சுழற்சியிலிருந்து விலக வேண்டும். புற வேடம் கூடா ஒழுக்கம் ஆகும். துறவைக்  கலைத்து விடும். 
அக்குப் பார்வை : மன நலமே முதல். உடல் நலம் அடுத்த நிலை. மன, உடல் ஒழுக்கம் இணைந்து முன்னேற வேண்டும். 
29. கள்ளாமை - துறவறவியல் 
     களவு என்பது திருட்டுத் தனமாய் பொருளை அடைவது.  இன்னொரு பொருள் திருட்டுத் தனமாய்க் காதல் கொள்வது. பழமொழி காண்க. "களவும், கற்று மற " ஆக திருட்டுத்தனமாய் பொருள் அடைதல், துறவிக்குத் தீங்கு.
அக்குப் பார்வை : பொருளின் மீதான மிகு விருப்பம், தீ பூதம் ( மனம் + இதயம் ) கெடுத்து பரபரப்பாக்கும். மன அமைதி கெட, தவ வாழ்வு கெடும். எதிர்மறை எண்ணம் விடுக்க.
தொடரும்.

Monday, 30 May 2016

Tamil acupuncture vision to Thirukkural-19 - 24

19.புறங்கூறாமை - இல்லறவியல் 

      அடுத்தவர் இல்லாதபோது அவர்தம் குற்றம் பிறருக்கு எடுத்துக்  கூறுவது. இதுவே நேரிற் கூறாது புறத்தில் கூறுதல். இது தவிர்க்க வேண்டும்.
அக்குப் பார்வை : மூன்றாவது நபரின் புகழ் கூறலாம். குற்றம் கூறல், கேட்கும் பிறர் அவர்தம் கற்பனையால் (மேல் மனம் + அடிமனம் ) மெருகு ஏற்றப் படும்போது புறங் கூறுவார்க்குப் பழி உண்டாகும். எனவே, புறங் கூறாமை செம்மைப் பண்பு (+).
20.பயனில சொல்லாமை - இல்லறவியல் 
        பயன் தராச் சொற்கள் பேசாது இருத்தல் . 
அக்குப் பார்வை : பேசும்போது இருவருக்கும் பயன்படாத சொற்கள், நிகழ்சிகளை விவரித்துப் பேசுவது . இது இருவரின் நேரம், காலம் இவற்றைக் கொல்வதற்குச் சமம். சொற்கட்டு வர, எண்ணம் , செயல் கட்டுப்பாடு வரும். மன எண்ணங்களின் கட்டுப்பாடு, உள்ளீடு சொற்களில் வெளியாகும். 
21. தீவினையச்சம் - இல்லறவியல் 
       பிறருக்குத் தீங்கு செய்வதில் அச்சம். 
அக்குப் பார்வை : எண்ணக் கட்டுப் பாட்டிலேயே பிறர் தீங்கு விட வேண்டும். அதை உள்விட , உள்ளமே முதலில்  தீப் பற்றி எரியும். பின் தன் உடலும் கெடும். எனவே, தன்னைக் காக்க , பிறர் தீங்கில் அச்சம் கொள்க. 
22. ஒப்புரவு அறிதல் - இல்லறவியல் 
     அடுத்தவர்க்கு உதவுதல் 
அக்குப் பார்வை : சுற்றி உடையவர் மகிழ்வது , தன் நெஞ்சு மகிழ்வதாய் மாறும். நுரையீரல் பூதம் உயிர்ப்பு அடைவதால் தன் உடல்நலம், பொதுநலம், சமூகநலம்  எனத் தொடர் செழிப்பு நிகழும். 
23. ஈகை - இல்லறவியல் 
    இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுதல் 
அக்குப் பார்வை : நாமே, ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு வந்தவர்கள் அல்லவா ? இல்லாதவர்க்கு நாம் உதவுவது கடவுள் நிலை மற்றும் இருப்பைப் போற்றுவது ஆகும். ஈகைதான் வாழ்வு. இது பிரபஞ்ச விதி. 
24. புகழ் - இல்லறவியல்  
     உயிருக்கு ஊதியம் என்பது புகழ் பெற்று வாழ்வதே. 
அக்குப் பார்வை : ஐம்பூதம் அடக்கி வாழ பெரியோர் ஆகலாம். செயற்கரிய செயல் செய்து புகழும்பெறலாம். மனம் அடக்கும் மகா வீரமே புகழ் தரும். 
தொடரும்.  

Sunday, 29 May 2016

TAMIL ACUPUNCTURE VISION TO TIRUKKURAL-14-18

14. ஒழுக்கமுடைமை - இல்லறவியல் 

   உலகத்தார் ஏற்கும் ஒழுக்கம் அறிந்து அதன் வழி ஒழுகல்.
அக்குப் பார்வை : பொது ஒழுக்கம் மீற , மேல் மனம்  ஆகிய தீ பூதமும் , அடிமனம் ஆகிய கல்லீரல் பூதமும் சிக்கலில் மாட்டும். பித்தம் தொடர்பான நோய்கள் வரும். இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள்  உண்டாகும். வாழ்நாள் குறையும். 
15. பிறனில் விழையாமை - இல்லறவியல் 
  ஒழுக்கத்தின் ஒருபகுதி , அடுத்தவர் மனைவியை  விரும்பாதிருத்தல் - சமூகக் கோடு தாண்டாமை . 
அக்குப் பார்வை : மனிதன் அமைத்த கோடுகள் மேல்மனம் , அடிமனம் இவற்றில் வலுவாகக் காலுன்றி நிற்கும். இவை நேர் மற்றும் எதிர்த் தன்மை (+ , - ) உடையவை. எதிர்த் தன்மையில் இறங்க வாழ்நாள் அமைதி கெடும். ஆழ்மனம் செயல்படும்போது கனவு, நனவு இவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு விருப்பு, வெறுப்பு இவற்றைப் பற்றாமல் கடந்துபோக விடு.
16.பொறையுடைமை - இல்லறவியல் 
         பிறர் இகழும் சொல், செயல் பொறுத்தல்.
அக்குப் பார்வை : எந்த ஒரு சொல்லும் பிறர் கூற, அதைக் கவசமிட்டுத் தடுத்து, ஆய்ந்தபின் உள்ளே விட வேண்டும். புகழ்ச்சியை ஊக்கமாக ஏற்கலாம். இகழ்ச்சியைத் திருப்புக. பொறுமை காக்க. ஒவ்வொரு சொல்லும் ஆழ்மனம் செல்லும் என்பதால் தடுப்பணை அவசியம்.
17. அழுக்காறாமை - இல்லறவியல் 
        பிறர் வாழ்வு கண்டு  பொறாத உணர்வு . 
அக்குப் பார்வை : பொறாமை எதிர்மறை (-) உணர்வு . தீ பூதத்தை நஞ்சாக்கும். மேல் மனம் கெடுக்கும். சொல், செயல் கெடுக்கும். தொடர்க் கெடுதல் உண்டாகும். 
18. வெகாமை - இல்லறவியல் 
      பிறர் பொருளை நடுவுநிலை தவறி அடைய நினைத்தல் 
அக்குப் பார்வை : நடுவு நிலை தவறிய விருப்பம் எதிர்மறை உணர்வு. (-) . மனதில் ஏற்றப்படும் நஞ்சு பிறகு உடலில் நோயாக விளையும். 
    தொடரும்.